admin

மோலியரின் காதல்

புகழ்பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியரான மோலியரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தைப் பார்த்தேன். லாரன்ட் டிரார்ட் இயக்கியுள்ளார் 1658 ஆம் ஆண்டில் கதை நடக்கிறது பகடி நாடகங்களுக்குப் பிரபலமான மோலியர் அதை விடுத்து துன்பவியல் நாடகம் ஒன்றை நிகழ்த்த விரும்புகிறார். அவரது குழுவினர்கள் அதை விரும்புவதில்லை. மன்னரின் ஆதரவுடன் மோலியர் நாடகங்களை நிகழ்த்துகிறார். மன்னருக்கோ நகைச்சுவை நாடகங்கள் மட்டுமே பிடிக்கிறது. ஆகவே கட்டாயத்தின் பெயரில் நகைச்சுவை நாடகம் போட வேண்டிய நெருக்கடி உருவாகிறது. இந்தச் சூழலில் அவரது …

மோலியரின் காதல் Read More »

தெலுங்கில்

எனது கைதட்டல்கள் போதும் என்ற சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது.  sakshi  ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. தெலுங்கில் மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. Link : https://epaper.sakshi.com/2860049/Funday/18-10-2020#page/1/1

காந்தியோடு பேசுவேன் காணொளி

எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதையை  வித்யா சுபாஷ் வெகு சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இலக்கிய வாசகர். காந்தியின் குரல். வார்தா காட்சிகள், எனது காந்தி குறித்த உரையின் பகுதி என்று அழகாக இணைத்து இந்தக் கதையைச் சொல்லிய விதம் மிகுந்த பாராட்டிற்குரியது. ஒரு கதையைச் சொல்வதற்கு வித்யா சுபாஷ் காட்டியுள்ள அக்கறையும் உழைப்பும் நல்ல முன்னுதாரணம் என்பேன். அவரது கதைகேளு கதைகேளு நிகழ்ச்சியில் சிறந்த தமிழ் சிறுகதைகளைத் தொடர்ந்து அறிமுகம் …

காந்தியோடு பேசுவேன் காணொளி Read More »

காலைக்குறிப்புகள் 24 நாவலாசிரியனின் ஜன்னல்

ஆர்தர் கோய்ஸ்லர் எழுதிய சந்நியாசியும் சர்வாதிகாரியும் என்ற கட்டுரைத் தொகுப்பினை ச.து.சு.யோகியார் மொழியாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை ஆர்தர் கோய்ஸ்லரின் இந்த ஒரு புத்தகம் தான் தமிழில் வெளியாகியுள்ளது. பியர்ல் பப்ளிகேஷன் வெளியீடாக வந்த இந்த நூலில் நாவலாசிரியனின் மயக்கம் என்றொரு கட்டுரை உள்ளது. அந்தக் கட்டுரை எழுத்தாளன் எப்படி ஒரு நாவலை எழுத வேண்டும் என்பது குறித்துப் பேசுகிறது. தனி மனிதன் ஒரு அறைக்குள்ளிருக்கிறான். சமூகம் வெளியே இருக்கிறது. மூடப்பட்டிருந்த ஒரு ஜன்னலைத் திறந்து வெளியுலகைப் …

காலைக்குறிப்புகள் 24 நாவலாசிரியனின் ஜன்னல் Read More »

காலைக் குறிப்புகள் 23 கடந்து செல்லும் காட்சி.

ஸ்டானிஸ்லாவ் டிகாத் புகழ்பெற்ற போலந்து எழுத்தாளர், நாடக ஆசிரியர் . இவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எழுதிய குறுங்கதை ஒன்றை சுகுமாரன் கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழுக்காக மொழியாக்கம் செய்து கொடுத்திருந்தார். தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற அந்தக் கதை மிகச்சிறப்பானது. கரமசேவ் சகோதரர்கள் நாவலை தஸ்தாயெவ்ஸ்கி ஏன் எழுதினார் என்பதற்கு இக் கதை ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இன்னொரு விதத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களில் ஒருவராகக் கடவுளுமிருக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கதையில் வரும் கடவுள் …

காலைக் குறிப்புகள் 23 கடந்து செல்லும் காட்சி. Read More »

காலைக்குறிப்புகள் 22 இதிகாசத்தின் நிழல்.

பீட்டர் புரூக் தயாரித்த மகாபாரதம் நாடகத்தை நேரில் கண்டதில்லை. 9 மணி நேரம் நடக்கக்கூடியது. பின்பு அது தொலைக்காட்சிக்கு ஏற்ப ஆறு மணி நேரத்திற்குள் குறைக்கப்பட்டது. இந்தத் திரைவடிவத்தைப் பார்த்திருக்கிறேன். ஜீன் கிளாடே கேரியர் தான் இதன் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். நாடக வடிவமும் அவர் எழுதியதே. பன்னாட்டுத் தயாரிப்பில் உருவான அந்த நாடகத்தில் திளெரபதியாக நடித்தவர் மட்டுமே இந்தியர். மல்லிகா சாராபாய் என்ற பரத நாட்டியக் கலைஞர். பீஷ்மர், அர்ச்சுனன். பீமன், கிருஷ்ணர் பற்றி நமக்கு …

காலைக்குறிப்புகள் 22 இதிகாசத்தின் நிழல். Read More »

இன்னொரு விசாரணை

1961ல் வெளியான Judgment at Nuremberg என்ற திரைப்படம் யூத இனப்படுகொலை குறித்த நீதிமன்ற விசாரணையை முதன்மைப்படுத்தியது. மிகச்சிறந்த படம். ஹிட்லர் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த யாரையெல்லாம் தண்டிப்பது என்ற கேள்வியைப் படம் எழுப்புகிறது. இதில் ஒரு இளம் வழக்கறிஞர் இனப்படுகொலை என்பது ஒரு மாயை. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொய். புகைப்படங்கள். சாட்சியங்கள் சொல்வது உண்மையில்லை. எங்கேயிருக்கிறது ஹிட்லரின் உத்தரவு. கேஸ் சேம்பர் பற்றிய செய்திகள் யாவும் கட்டுக்கதை என்று வாதிடுவார். இனப்படுகொலையின் சாட்சியங்கள் …

இன்னொரு விசாரணை Read More »

வாழ்த்துகள்

நவீனத் தமிழ் கவிதையின் தனித்துவமிக்க ஆளுமை கவிஞர் கலாப்ரியா. வடிவ ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தனது கவிதைகளில் இவர் நிகழ்த்திய பாய்ச்சல் குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திய குற்றாலம் கவிதைப்பட்டறை மறக்கமுடியாதது. கவிஞராக மட்டுமின்றி  நாவல், சிறுகதை, கட்டுரைகள் என எழுதி பன்முகப் படைப்பாளியாக விளங்குகிறார். தமிழ் விமர்சனவுலகில் தனித்துவமிக்க ஆளுமையாக விளங்குபவர் பேராசிரியர் பஞ்சாங்கம். பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சமகாலப்புனைவுகள் வரை ஆழ்ந்து திறனாய்வு செய்து வருபவர். இவர்கள் இருவருக்கும் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கு விருது பெறும் அண்ணன் கலாப்ரியா அவர்களுக்கும்,  பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் தொடர்ந்து சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் விளக்கு அமைப்பிற்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். ••

ஆசிய சினிமா இதழ்.

வீட்டில் ஏதோ புத்தகம் ஒன்றைத் தேடும் போது வாங்கிப்படித்து பாதுகாத்து வைத்திருந்த Cinemaya இதழ்கள் கையில் கிடைத்தன. எனது கல்லூரி நாட்களில் விரும்பி வாசித்த சினிமா இதழ் Cinemaya. டெல்லியிலிருந்து காலாண்டிதழாக வெளியானது. இந்த இதழை வாங்குவதற்காகவே திருவனந்தபுரம் போய் வருவேன். விருதுநகரிலிருந்து பாசஞ்சர் ரயில் மூலம் திருவனந்தபுரம் செல்வது பிடித்தமானது. மாதம் இரண்டு முறையாவது சென்றுவிடுவேன். நாலரை மணி நேரப்பயணம். மழைக்காலத்தில் பயணம் செல்லும் போது வழியெங்கும் பசுமை ததும்பி வழிய சிலுசிலுவெனக் காற்று வீசும். …

ஆசிய சினிமா இதழ். Read More »

காலைக்குறிப்புகள் 21 நோபல் பரிசின் பின்னால்

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ள கவிஞர் லூயிஸ் க்லூக் பெயரைக் கூட இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. பரிந்துரைப் பட்டியலிலிருந்த நாவலாசிரியர் கூகி வா தியாங்கோ, கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன எழுத்தாளர் யான் லியான்கே, முரகாமி, ஜமைக்கா கின்கைட் போன்றவர்களை வாசித்திருக்கிறேன். ஆனால் எந்தப் பரிந்துரையாளரும் லூயிஸ் க்லூக் பெயரைச் சொல்லவேயில்லை. நோபல் பரிசு கமிட்டி இது போன்ற திகைப்பூட்டும் ஆச்சரியங்களைத் தருவதை வழக்கமாக மாற்றிவிட்டார்கள். ஸ்வீடிஷ் அகாடமி …

காலைக்குறிப்புகள் 21 நோபல் பரிசின் பின்னால் Read More »