admin

நூலக மனிதர்கள் 7 வாசிப்புத் துணை

1992ன்  துவக்கத்தில் அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். மோகன் என்ற பார்வையற்ற நபரைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வருவார் ஒரு இளைஞர். அவரது பெயர் செல்வம். மோகனுக்கு இருபத்தைந்து வயதிருக்கக் கூடும் .செல்வமும் அதே வயது தான். மோகனை விடவும் செல்வம் ஆள் குள்ளம். பெரிய காதுகள் கொண்டவர். அவர்கள் முகத்தில் தனியான மகிழ்ச்சியிருக்கும். பொதுவாகப் பார்வையற்றவர்கள் குறித்த பொதுப்புத்தி அவர்கள் எப்போதும் சோகமாகவும் வருத்தமாகவும் இருப்பார்கள் என்றிருக்கிறது. அது உண்மையில்லை. …

நூலக மனிதர்கள் 7 வாசிப்புத் துணை Read More »

கல்வியின் பாதை.

Class Dismissed – என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்க பொதுக்கல்வி முறையின் குறைபாடுகளைப் பற்றிப் பேசும் இப்படம் ஹோம் ஸ்கூலிங் போன்ற மாற்றுக்கல்வி முறைகளின் தேவை குறித்து விவாதிக்கிறது. அமெரிக்கா முழுவதிலும், பெற்றோர்கள் பொதுக் கல்வி நிலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள். .அப்படி அதிருப்தி அடைந்த லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு குடும்பம், தங்கள் இரு குழந்தைகளையும் புகழ்பெற்ற பள்ளி ஒன்றிலிருந்து படிப்பை நிறுத்தி ஹோம் ஸ்கூலிங் முறைப்படி வீட்டிலே கல்வி கற்க வைக்கிறார்கள். அவர்களின் …

கல்வியின் பாதை. Read More »

நூலக மனிதர்கள் 6 முதல் வாசகர்.

மல்லாங்கிணர் நூலகத்தில் முதன்முறையாக வார இதழ்களுக்கு நடுவே ஒரு கையெழுத்துப் பத்திரிக்கையைப் பார்த்தேன். பாலைவனச்சோலை என்ற பெயரில் வெளியாகியிருந்த அந்தக் கையெழுத்து பத்திரிக்கையை உள்ளூர் நண்பர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியிருந்தார்கள். இப்படி ஒரு பத்திரிக்கையைக் கையெழுத்திலே தயாரித்து வெளியிடலாம் என்பது புதுமையான விஷயமாகத் தோன்றியது. ஆசிரியர் குழுவிலிருந்தவர்களே கவிதைகள் எழுதியிருந்தார்கள். ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. பொது அறிவு தகவல்கள். நிறையப் பொன்மொழிகள் இடம்பெற்றிருந்தன. கடைசி இரண்டு பக்கங்களை வாசகர் கருத்துகள் எழுதுவதற்காக இடம் விட்டிருந்தார்கள். கிராம நூலகத்தில் …

நூலக மனிதர்கள் 6 முதல் வாசகர். Read More »

காதலின் அலைகள்

‘Little England’ (‘Mikra Anglia’) பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கி 2013ல் வெளியான கிரேக்கத் திரைப்படம் ஆண்ட்ரோஸ் தீவைச் சேர்ந்த ஓர்சா மற்றும் மோஷா என்ற இரு சகோதரிகளின் காதல் மற்றும் திருமணத்தைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். படமாக்கப்பட்டவிதம் மிகச்சிறப்பு. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிமோஸ் சார்கெட்ஸிஸ் ஒவ்வொரு காட்சியினையும் ஓவியம் போல உருவாக்கியிருக்கிறார். அடர் வண்ணமும் பீறிடும் ஒளியும் மாறுபட்ட கோணங்களும் வசீகரமாகவுள்ளன. நாவலை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால் படம் இருபது ஆண்டுக் …

காதலின் அலைகள் Read More »

நூலக மனிதர்கள் 5 கதையின் முடிவு

ஒரு நாவலுக்குள் ஆயிரம் பிரச்சனைகள். கஷ்டங்கள், தோல்விகள் வரலாம் ஆனால் கதையின் முடிவு எப்போதும் சுபமாக இருக்க வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை வாசகர்கள் மனதில் இருக்கிறது. காரணம் சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த எல்லாக் கதைகளின் முடிவும் சுபமானதே.  அரக்கனால் தூக்கிச் செல்லப்பட்ட இளவரசியை ஏழு கடல் ஏழு மலை தாண்டி எப்படியாவது இளவரசன் போராடி வெற்றிபெற்றுவிடுவான். எவ்வளவு மோசமான அழிவு கொலை தீமை செய்யும் ஆட்களாக இருந்தாலும் காமிக்ஸ் கதைகளின் நாயகன் முடிவில் அவர்களை …

நூலக மனிதர்கள் 5 கதையின் முடிவு Read More »

நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன்

“உனக்கு அறிவில்லையா.. நீ எல்லாம் ஏன்யா லைப்ரரிக்கு வர்றே“ என்று நூலகர் சப்தமாகக் கேட்டபோது அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தோம். நூலகர் கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தார். அவர் முன்னால் முப்பது வயது ஆள்  ஒருவன் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நூலகப் பணியாளர்கள் நின்றிருந்தார்கள். “இந்த ஆளை போலீஸ்ல ஒப்படைச்சிர வேண்டியது தான்“ என்று நூலகர் கோபமான குரலில் சொன்னார் படித்துக் கொண்டிருந்த எல்லோரும் நூலகரின் மேஜையை ஒட்டித் திரண்டு நின்றோம். தலைகவிழ்ந்து நின்ற ஆள் …

நூலக மனிதர்கள் 4 புத்தகத் திருடன் Read More »

பதவிக்குப் பின்னால்.

‘கே பிளான்’ எனப்படும் “காமராஜர் திட்டம்”இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது நேரு பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினுள் நிறையப் பதவிச் சண்டைகள். போட்டிகள் உருவாகின. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்களும் நீண்ட காலம் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற் திட்டத்தைக் காமராஜர் முன்மொழிந்தார். இந்தத் திட்டம் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் இது பற்றி இன்று வரை …

பதவிக்குப் பின்னால். Read More »

நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி.

லா.ச.ராவின் அபிதா இருக்கிறதா என்று அவர் நூலகரிடம் கேட்டபோது நான் திரும்பிப் பார்த்தேன். பொதுவாக நூலகரிடம் லா.ச.ராவின் புத்தகங்களைக் கேட்பவர்கள் அரிது. பெரும்பாலும் பொன்னியின் செல்வன். சிவகாமியின் சபதம் கடற்புறாவைத் தேடுபவர்கள் தான் அதிகம். ஆனால் அந்த மனிதர் லா.ச.ராமாமிருதம் எழுதிய அபிதா புத்தகத்தைக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நான் தான் அந்தப் புத்தகத்தை இரவல் எடுத்துப் போயிருந்தேன். ஆகவே நூலகர் என்னைச் சுட்டிக்காட்டி அவர் இன்னமும் திருப்பித் தரலை என்று சொன்னார். உடனே அந்த மனிதர் …

நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி. Read More »

டோமிரிஸின் கோபம்.

“The Legend of Tomiris” ஸ்டெப்பிப் பழங்குடிக்குள் உள்ள பகை மற்றும் பழிவாங்குதலைப் பேசும் படம். தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் மகளின் கதை என்பது சினிமாவில் மிகப்பழையது. ஆனால் படமாக்கப்பட்ட முறை மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாகச் சண்டைக்காட்சிகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் காசன் கைடிராலியே மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டோமிரிஸ் அரசியின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. கிமு 484-425க்கு இடையில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் வரலாற்றுப் …

டோமிரிஸின் கோபம். Read More »