admin

குறுங்கதை 121 புத்தனின் நினைவு

நீண்ட காலத்தின் பிறகு கபிலவஸ்து திரும்பும் புத்தரை வரவேற்க நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது. அரண்மனையில் யசோதா காத்துக் கொண்டிருந்தாள். தந்தையின் முகம் காண ராகுலனும் ஆசையுடனிருந்தான். ஞானம் பெற்ற புத்தருக்குக் கடந்த காலத்தின் நினைவுகளிருக்காது. அவரை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றார்கள். இயற்கைக்கு மட்டும் தான் கடந்த கால நினைவுகள் கிடையாது. கௌதம புத்தர் தனது சீடர்களுடன் வருகை புரிந்தார். மக்கள் மலர் தூவி வரவேற்பு செய்தார்கள். வணிகர்கள் பொற்குவியல்களை அவரது காலடியில் கொட்டினார்கள். …

குறுங்கதை 121 புத்தனின் நினைவு Read More »

குறுங்கதை 120 இரட்டையர்கள்

இரட்டை குழந்தைகளின் தோற்றம் ஒன்றாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் இரட்டையர்கள் இருவரும் ஒரே புத்தகத்தைத் தான் வாசிப்பார்கள் என்பதோ, இருவரும் ஒன்று போலத் தான் எழுதுவார்கள் என்பதும் வியப்பான செய்தியாகவே இருந்தது. அப்படியான இரட்டையர்கள் இருவர் காசியாபாத்தில் இருந்தார்கள். அவர்களின் தந்தை பீங்கான் பாத்திரங்கள் செய்கிறவராக இருந்தார். இரட்டையர்கள் பள்ளியில் சேர்ந்த நாட்களில் தான் இந்த வியப்பான விஷயத்தை ஆசிரியர்கள் கண்டறிந்தார்கள். இருவரும் ஒன்று போலவே படித்தார்கள். ஒன்று போலவே பரீட்சைக்கு விடை எழுதினார்கள். …

குறுங்கதை 120 இரட்டையர்கள் Read More »

குரங்கின் ஒலி.

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் Eeb Allay Ooo. இணைய ஒளிபரப்பின் வழியாக We Are One Global Film Festival on YouTube விழாவில் இந்தப் படத்தைப்  பார்த்தேன். மும்பை திரைப்படவிழாவின் சிறந்த படத்திற்கான விருது பெற்றிருக்கிறது. Prateek Vat இயக்கியுள்ளார். புது தில்லியின் முக்கியப் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் ஏற்படும் தொல்லையைப் போக்க குரங்கு விரட்டுபவர்களை அரசாங்கமே நியமிக்கிறது. குரங்குகளை விரட்டப் பயன்படுத்தும் விசித்திரமான ஒலியே  ஈப் அலே ஓ. இந்த ஒலியைக் …

குரங்கின் ஒலி. Read More »

குறுங்கதை 119 கனவுகளின் கணக்கெடுப்பு

அந்தத் தேசத்தில் முதன்முறையாக மக்கள் எவ்வளவு கனவு காணுகிறார்கள். என்ன கனவு காணுகிறார்கள் என்பதைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி அரசாங்க ஊழியர்கள் வீடு வீடாக வந்து விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் அந்த நாட்களில் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை தங்கள் கனவுகள் குறித்த கணக்கை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் அறிவிப்பு வெளியானது. கனவுகளை ஏன் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும் என ஒருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எத்தனை கனவு கண்டோம் …

குறுங்கதை 119 கனவுகளின் கணக்கெடுப்பு Read More »

குறுங்கதை 118 கல்லின் குழந்தைகள்

ஒரு பாறாங்கல் தன்னை விட்டுப் பிரிந்து போன தனது குழந்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது. கல்லின் குழந்தைகளுக்கு என்ன அடையாளம் எனக்கேட்டது ஒரு புறா. “என்னைப் போலதானிருக்கும். ஆனால் எங்கேயிருக்கிறார்கள் எனத் தெரியாது. மண்ணில் புதையுண்டு போயிருக்கலாம். கட்டிடம் கட்டும் பணியினுள் கலந்துவிட்டிருக்கலாம்.  அல்லது எவரோ கோபத்தில் அதை வீசி எறிந்து ஆயுதமாக்கியிருக்கலாம்“ என்றது பாறாங்கல் “அப்படியானால் உன் பிள்ளைகளைக் கண்டுபிடிப்பது கடினம்“ என்றது புறா. பாறாங்கல் தன் பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்தது. கண்ணில்பட்ட கற்கள் …

குறுங்கதை 118 கல்லின் குழந்தைகள் Read More »

குறுங்கதை 117 தொலைந்த பொருட்கள்.

சிறுவயதிலிருந்து தான் தொலைத்த பொருட்களை நினைவு கொண்டு ஒரு பட்டியலை உருவாக்கினான் பரந்தாமன். விளையாட்டுப் பொம்மைகள், சில்லறைக்காசுகள். பென்சில், பேனா, சட்டை, டிபன் பாக்ஸ், சைக்கிள், மணிப்பர்ஸ், குடை, ஸ்பூன், மருந்துப்பாட்டில், கடிதம், காசோலை, விபூதிபாக்கெட், மோதிரம், வீட்டுச்சாவி, பேங்க் பாஸ்புக், ரப்பர் செருப்பு, குடை, தூக்குவாளி, ரசீதுகள். துண்டு, சோப், சான்றிதழ் எனத் தொலைத்த பொருட்களின் பட்டியல் மிகப்பெரியதாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் தன்னைப் போலவே இப்படி ஏராளமாகத் தொலைத்திருப்பானில்லையா, தொலைந்து போன பொருட்கள் தனியொரு …

குறுங்கதை 117 தொலைந்த பொருட்கள். Read More »

குறுங்கதை 116 விளையாட்டுச்சிறுவன்.

கள்ளன் போலீஸ் விளையாட்டின் போது வாசு ஒளிந்து கொள்வதற்காக மர ஸ்டூலில் ஏறி தானியங்கள் சேமித்து வைக்கும் குலுக்கையினுள்  குதித்துவிட்டான்.  அவனைத் துரத்தி வந்த சிறுவர்கள் வீட்டின் வெளியே தேடிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதடி உயரமுள்ள அந்தக் குலுக்கையினுள் தானியமில்லை. ஆனால் இருள் நிரம்பியிருந்தது. நிச்சயம் தன்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என வாசுவிற்குச் சந்தோஷமாக இருந்தது. குலுக்கையினுள் நெல் போட்டு வைத்திருந்த வாசம் நாசியில் ஏறியது. அடர்ந்த மணம். காலடியில் எலிப்புழுக்கைகளும் மக்கிப்போன நெல்மணிகளும் தென்பட்டன. அவன் …

குறுங்கதை 116 விளையாட்டுச்சிறுவன். Read More »

குறுங்கதை 115 கசந்த உறவு

அந்தப் பகுதியின் பெரிய பல்பொருள் அங்காடி  ராணி ஸ்டோர்ஸ். இரண்டு தளங்கள் கொண்டது சிவராமன் அந்தக் கடைக்குப் போகும் போதும் கடை உரிமையாளர் அமர்ந்திருக்குமிடத்தில் அவரது தலைக்கு மேலுள்ள சுவர்க்கடிகாரம் ஓடாமல் இருப்பதைக் கவனிப்பார். அது பழைய சாவி கொடுக்கும் கடிகாரம். ஏன் அதற்குச் சாவி கொடுத்து ஓட வைத்தால் என்ன. ஏன் இந்த அசிரத்தை என நினைத்தபடியே வாங்க வேண்டிய பலசரக்குச் சாமான்களை வாங்குவார். பணம் கொடுக்கும் போது உரிமையாளரிடம் கடிகாரம் ஓடவில்லை என்று சொல்லுவார். …

குறுங்கதை 115 கசந்த உறவு Read More »

குறுங்கதை 114 புலியின் சல்யூட்

அந்த சர்க்கஸில் புலியைப் பழக்குவதற்கென ஒருவர் இருந்தார். அவரது பெயர் ரோனி. அது தான் உண்மைப்பெயரா எனத்தெரியாது. பொதுவாக சர்க்கஸ் கலைஞர்கள் வசீகரமான பெயர்களை வைத்துக் கொள்வது வழக்கம். ரோனி நீண்டகாலமாகவே சர்க்கஸில் இருந்தார். காட்டிலிருந்து பிடித்து கொண்டுவரப்படும் புலியைப் பழக்கி சர்க்கஸ் விளையாட்டுகளை செய்ய வைப்பது அவரது வேலை. புலியை பழக்குவது எளிதானதில்லை. புலி பயமற்றது. புலியின் ஒரே பலவீனம் பசி. அதை வைத்துத் தான் ரோனி புலியை கட்டுபடுத்த ஆரம்பிப்பார். தொடர்ந்து பட்டினி போட்டால் …

குறுங்கதை 114 புலியின் சல்யூட் Read More »

குறுங்கதை 113 பூக்களை வரையும் சிறுமி

அந்தச் சிறுமி தான் வரைந்த பூச்செடியை எப்படியாவது உயிருள்ளதாக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தாள். அதனால் ஒவியம் வரையப்பட்ட காகிதத்தை மண்ணில் புதைத்து வைத்தாள். தனது பூச்செடி அப்படியே உயிர்பெற்று எழுந்து வரும் என நம்பினாள். ஆனால் ஒவியச் செடி மண்ணில் முளைக்கவில்லை. அது அவளை வருத்தப்படுத்தியது. காகிதத்தில் வளரும் செடி ஏன் மண்ணில் முளைக்க மறுக்கிறது என வேதனைப்பட்டாள். அடுத்த நாள் முழுச்செடியை வரையாமல் மலர்களை மட்டும் வரைந்தாள். தான் வரைந்த மலர்களை வீட்டின் பின்புறமுள்ள …

குறுங்கதை 113 பூக்களை வரையும் சிறுமி Read More »