admin

நெடுங்குருதி – ஒரு பார்வை

– பிச்சைக்காரன் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பானசாதனைகளுள் ஒன்று ஆனால் ஒரு முரண்நகைச்சுவை இதில் இருக்கிறது. இந்த நாவலை படித்த சிலர் இதைப் புகழ்வதாக நினைத்து , இந்த நாவலைப்பற்றி இப்படி சுருங்கச்சொல்வாதுண்டு “வேம்பலை என்ற கிராமத்தின் மீது படிந்திருக்கும் துயர் எனும் இருளையும் அவ்வூர் மக்களின் வேதனைமிகு வாழ்வையும்  சொல்லும் நாவல்தான் நெடுங்குருதி” இதைக் கேட்கும் புதிய வாசகன் ஒருவன் இதை ஒரு புரட்சிகர நாவலாகவோ , சமூக நாவலாகவோ , …

நெடுங்குருதி – ஒரு பார்வை Read More »

விழிப்புணர்வின் பாதை.

கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் (Ko Un) எழுதிய நாவல் Little Pilgrim 1991ல் வெளியான இந்த நாவல் சுதானா என்ற சிறுவனின் அகத்தேடலை விவரிக்கிறது. இந்த நாவல் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தாவைப் போன்றது. ஆனால் சித்தார்த்தா ஒரு இளைஞன். அவனது மெய் தேடல் வணிகம், காமம், ஞானம் என மூன்று நிலைகளில் சஞ்சரித்து முடிவில் ஞானத்தை அடைகிறது. இந்தச் சித்தார்த்தான் ஒரு சிறுவன். ஒருவகையில் புத்தர் தான் அந்தச் சிறுவனோ எனும்படியாகக் கூடத் தோன்றுகிறது. அவதாம்சக …

விழிப்புணர்வின் பாதை. Read More »

பசியின் குரல்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் Hunger/Sult novel 1890 ல் வெளியானது. வாசகர்களால் கொண்டாடப்பட்ட இந்த நாவலைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள். இந்நாவலை.க. நா. சு பசி எனத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறியதொரு நாவல். ஆனால் அழுத்தமான அனுபவத்தைத் தரக்கூடியது. இளம் எழுத்தாளனின் ஒரு நாள் காலையில் நாவல் துவங்குகிறது எண்ணவோட்டங்களின் வழியே கதை விவரிக்கப்படுகிறது. கையில் காசில்லாத ஒருவன் ஒரு நாளை எப்படி மதிப்பிடுவான் என்பதைக் கதை அழகாக விவரிக்கிறது. பசி தான் …

பசியின் குரல் Read More »

புகலிடம் தேடி.

ஜான் ஸ்டீன்பெக்கின் Of Mice and Men திரைப்படத்தைப் பார்த்தேன்.. 1937 வெளியான ஸ்டீன்பெக்கின் நாவலை மையமாகக் கொண்ட படமிது. புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர் இருவரது வாழ்க்கைக் கதையே இப்படம். கேரி சினிஸ் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் துவக்கக் காட்சியில் ஜார்ஜ் மில்டன் மற்றும் லென்னி இருவரும் பண்ணை ஒன்றிலிருந்து தப்பியோடுகிறார்கள். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் துரத்துகிறார்கள். பரபரப்பான அந்தக் காட்சியின் முடிவில் அவர்கள் ரயிலில் தப்பிவிடுகிறார்கள். எதற்காக அவர்கள் தப்பியோடுகிறார்கள் என்பது பின்பகுதியில் தான் …

புகலிடம் தேடி. Read More »

குறுங்கதை 101 அவனது விளையாட்டு

அந்தச் சிறுவனுக்குப் பந்து அல்லது பொம்மைகளை வைத்து விளையாடுவதில் விருப்பமில்லை. அவன் காணும் பொருட்களுக்குப் புதிய பெயர்களை வைத்து விளையாடும் வழக்கம் கொண்டிருந்தான். குறிப்பாக அவன் வீட்டினைக் கடந்து தினமும் வாத்துக்கூட்டம் செல்வதைக் காணுவான். அந்தக் கூட்டத்தில் விடுபட்டது போலத் தனியே இரண்டு வாத்துகள் செல்வது வழக்கம். அந்த வாத்துகளுக்குக் கினா டினா என அவனாக ஒரு புதுப்பெயர் வைத்தான். தன் பெயர் பற்றி எதுவுமறியாத வாத்து எப்போதும் போல மெதுவாக நடந்து போனது. அந்த வாத்துகளுக்கு …

குறுங்கதை 101 அவனது விளையாட்டு Read More »

குறுங்கதைகள் – இயக்குநர் வசந்தபாலன்

இணையத்தில் நான் எழுதி வரும் குறுங்கதைகள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது வாசிப்பு அனுபவத்தை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி •• எஸ் ராவின் 100 குறுங்கதைகள் குறித்து வசந்தபாலன் இந்த பெருந்தொற்று காலத்தின் அருமருந்தாக ஜெயமோகன் எழுதிய 69 சிறுகதைகளையும், எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய 100 குறுங்கதைகளையும் கூறுவேன். தமிழ் இலக்கிய உலகில் கிழக்கு மேற்கும் ஆங்காரமாய் எழுந்து நிற்கும் யானைகள் இவர்கள். கொரோனோ பற்றிய செய்திகள் ஈக்களைப் போல …

குறுங்கதைகள் – இயக்குநர் வசந்தபாலன் Read More »

பருத்திப் பெண்டிர்

ஆர். பாலகிருஷ்ணன் IAS சங்க இலக்கியங்கள் குறித்துத் தொடர் உரைகளை இணையம் வழியாக நிகழ்த்தி வருகிறார். அதில் கடந்தவாரம்  பருத்திப் பெண்டிர் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார். ஆர். பாலகிருஷ்ணன் IAS தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதுடன் இந்திய ஆட்சிப்பணியின் மூத்த அதிகாரியாக இருப்பவர் என்பதால் புதிய வெளிச்சத்தில் சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்கிறார்.  இந்த உரை அவரது அறிவு விசாலத்தின் அடையாளம். தன்னை ஒரு தமிழ் மாணவன் என்று பெருமையோடு …

பருத்திப் பெண்டிர் Read More »

தேசாந்திரி இணையதளம்

தேசாந்திரி பதிப்பகத்தின் இணையதளம் புதிதாக வடிவமைக்கபட்டுள்ளது. ஆன்லைன் மூலம் எனது புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்கள் இதனைத் தொடர்பு கொள்ளவும் லாக்டவுன் காலச் சலுகையாக அனைத்து நூல்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி அறிவிக்கபட்டிருக்கிறது. வெளியூர்களுக்கு கூரியர் மூலம் புத்தகம் அனுப்பி தரப்படும். https://www.desanthiri.com/shop/ For More queries contact 044-23644947,+91 8778435129, 9600034659

வானம் காட்டும் உண்மை.

அ.திருவாசகம், அண்ணா நகர், மதுரை. •• சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’இந்திய வானம்’’ என்னும் புத்தகம் வாசித்தேன். எஸ். ராமகிருஷ்ணன்  தொடர்ந்து இந்தியாவெங்கும் பயணம் செய்து, அந்தப் பயணங்களின் வழியாக மக்ளின்  வாழ்க்கையின் இனிமைகளையும், அவர்களுக்குள்  உள்ளோடும் அவலங்களின் சாரத்தைப் பற்றியும் பதிவு செய்துள்ளார். அவரது  இந்திய வானம் என்ற நூல் பயணங்களைப் பற்றிச் சொல்லக்கூடியது. நூலைப் படிக்கும் போது, இன்னும் மாறாமல் மூலைமுடுக்குகளில் சிக்கியிருக்கும்  மாறா மனிதர்களின்  பண்பாடு, மொழி, கலாச்சாரம், வாழ்வியலை தேடிச் செல்ல …

வானம் காட்டும் உண்மை. Read More »

யாமம் விமர்சனம்

ஈநாடு என்ற தெலுங்கு நாளேடில் எனது யாமம் மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனம் வெளியாகியுள்ளது. நாவலை மிகச்சிறப்பாகப் பாராட்டியுள்ளார்கள். மொழிபெயர்ப்பாளர் பாலாஜிக்கு அன்பும் நன்றிகளும்