admin

2019ன் சிறந்த புத்தகங்கள்- 2

வெயிலின் கவிதைகள் நவீனத் தமிழ் கவிதையுலகின் புதுக்குரல் என்றே சொல்வேன். ஜென் கவிதைகளில் வெளிப்படும் ஓங்கி ஒலிக்காத குரலைக் கொண்டு சமகாலப் பிரச்சனைகளை எழுதுகிறார் வெய்யில். அது முற்றிலும் புதிய வெளிப்பாட்டு முறை. கோபமும் ஆத்திரமும் இயலாமையும் வேதனையின் பெருமூச்சும் கொண்ட இக்கவிதைகள் தண்ணீரில் பிம்பமாகத் தெரியும் பெருமலையைப் போல எளிதாகத் தோற்றம் தருகின்றன. சுயம்புலிங்கமும் ஆத்மாநாமும் ஒன்று சேர்ந்தது போன்ற கவிதைகளை வெய்யில் எழுதுகிறார். வெளிப்பாட்டு முறையில் சுயம்புலிங்கத்தையும் கருப்பொருளில் ஆத்மாநாமையும் அவர் பிரதிபலிக்கிறார் என்றே …

2019ன் சிறந்த புத்தகங்கள்- 2 Read More »

2019ன் சிறந்த புத்தகங்கள்- 1

2019’ல் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களை பரிந்துரை செய்கிறேன் •• பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன். பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். பிணவறைக் காப்பாளரின் உலகமும் அநாதைப் பிணங்களின் புறக்கணிக்கபட்ட நிலையும்,  காப்பாளரின் மனத்தவிப்பும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன. ஜம்பு என்ற …

2019ன் சிறந்த புத்தகங்கள்- 1 Read More »

தேசாந்திரி அரங்கு

சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி 9 முதல் 21 வரை நடைபெறுகிறது. அதில் தேசாந்திரி அரங்கு எண் 396 & 397 புத்தகக் கண்காட்சி நடைபெறும் எல்லா நாட்களிலும் தேசாந்திரி அரங்கில் இருப்பேன். •

தஸ்தாயெவ்ஸ்கி உரை

நேற்று நூல்வனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தஸ்தாயெவ்கியுடன் ஒரு இரவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.  நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த அகரமுதல்வனுக்கும், மணிகண்டனுக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வினைப்  படமாக்கிய ஸ்ருதி டிவிக்கு அன்பும் நன்றியும். புகைப்படங்கள் நன்றி : ஸ்ருதி டிவி அகரமுதல்வன்.

யாமம் – மலையாளம்

எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஜனவரி கடைசிவாரம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது

மை டியர் செகாவ்

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள  மை டியர்  செகாவ் குறும்படம் YouTube ல் வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காணும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் chekhov short film link https://youtu.be/XzQhtG39qng

யாவரும்

ஜனவரி 5 மாலை சென்னை இக்சா மையத்தில் நடைபெறவுள்ள யாவரும் பதிப்பகத்தின் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன் இளம் படைப்பாளிகளின் 11 நூல்கள் வெளியாகின்றன. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் புதிய நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  இளந்தலைமுறை படைப்பாளிகள் சிறப்பாக எழுதுகிறார்கள். புதிய தடத்தில் பயணிக்கும் அவர்களை  மனம் நிரம்ப வாழ்த்துகிறேன். புதிய படைப்பாளிகளை இனம் கண்டு பதிப்பிக்கும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்.

நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்கள் கனவுகள்  யாவும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். •• புத்தாண்டின் துவக்கமாக இன்று மாலை (1.1.2010  ) தஸ்தாயெஸ்கியின்  நாட்குறிப்புகள் குறித்து உரை நிகழ்த்துகிறேன் ஜனவரி மூன்றாம் தேதி மாலை அடையாறு ஒடிசி புத்தக கடையில் எனது சிறுகதை தொகுப்பான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் அறிமுக விழா மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது ஜனவரி  ஐந்தாம் தேதி  …

நல்வாழ்த்துக்கள் Read More »