admin

ஆங்கில நூல்கள்

டிசம்பர் 25 மாலை ரஷ்யக்கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழாவில்  மூன்று நூல்களின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகின்றன •• உறுபசி நாவலை பேராசிரியர் வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர்  P. ராம்கோபால் கிறுகிறுவானம் என்ற சிறார் நூலை மொழியாக்கம் செய்திருப்பவர் G. கீதா. மூன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் •• 22.12.2019

செகாவ் குறும்படம்

என் மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள குறும்படமான மைடியர் செகாவ் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படுகிறது. தேசாந்திரி youtube சேனலில் இப்படத்தைக் காணலாம். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg **

உடலில் தோன்றும் மலர்கள்.

She was off like a bird, bullet, or arrow, impelled by what desire, shot by whom, at what directed, who could say? – Virginia Woolf ** Vita and Virginia என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆங்கில நாவலாசிரியை வர்ஜீனியா வுல்ஃப் (Virginia Woolf,) குறித்த திரைப்படமது. வர்ஜீனியா வுல்ஃப்பை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஏனோ மனதில் லியோ டால்ஸ்டாயின் அன்னாகரீனினா பிம்பம் வந்து போகிறது. வர்ஜீனியா வுல்ஃப்பின் …

உடலில் தோன்றும் மலர்கள். Read More »

சென்னையும் நானும் – 5

சென்னையைப் பற்றிய எனது நினைவுகளின் காணொளித் தொடரின் ஐந்தாம் பாகம் வெளியாகியுள்ளது. தேசாந்திரி யூடியூப் சேனலில் இதைக் காணலாம். இந்தத் தொடரை உருவாக்கி வருவது எனது மகன் ஹரிபிரசாத். ஒற்றை ஆளாக இந்த முயற்சியை முன்னெடுக்கிறான். இந்த உரைகளைக் கேட்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளை அதில் பதிவு செய்யவும். அது ஹரி மேலும் உத்வேகமாகச் செயல்பட உதவும். இந்தக் காணொளித் தொடரை புதிய வாசகர்கள், நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். “Chennaiyum Nanum” – 5 https://youtu.be/YFaciBTqOBY

அழைப்பிதழ்

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ள எனது ஏழு புதிய நூல்களின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் அனைவரும் நிகழ்வில் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் இந்த நிகழ்வில் எனது யாமம் நாவலின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியாக்கங்கள் வெளியாகின்றன. உறுபசி நாவல், எனது சிறுகதைகளின் தொகுப்பு, கிறுகிறுவானம் ஆகியவற்றின் ஆங்கில மொழியாக்கமும் வெளியாகின்றன. • 19.12.2019

வாழ்த்துகள்

2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சூல் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

முட்டாளின் மூன்று தலைகள்

ஒவ்வொரு ஆண்டும் சிறார்களுக்காக ஒரு நூலை எழுதுவது எனது வழக்கம். இந்த ஆண்டு முட்டாளின் மூன்று தலைகள் என்ற சிறார் நூலை எழுதியிருக்கிறேன். முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரை மையமாக் கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது. அந்த ஊரில் தினம் ஒரு புதுச்சட்டம் கொண்டு வருகிறார்கள். இதனால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதே கதையின் மையம். டிசம்பர் 25 மாலை ரஷ்யக் கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படுகிறது.

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

டிசம்பர் 25 மாலை வெளியாகும் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன.  இக்கதைகள் காலச்சுவடு, ஆனந்த விகடன், அந்திமழை, தினமணி மலர், தி இந்து மலர்  மற்றும் இணைய இதழில் வெளியானவை .18.12.2019