admin

குரங்கு வளர்க்கும் பெண்

லியோனார்டு மைக்கேல்ஸ் என்ற அமெரிக்கச் சிறுகதையாசிரியர் எழுதிய குரங்கு வளர்க்கும் பெண் சிறுகதையைக் கவிஞர் க. மோகனரங்கன் மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு கதைகளின் தொகுப்பாகிய குரங்கு வளர்க்கும் பெண் சென்ற ஆண்டு வெளியானது. மிகச் செறிவாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது. குரங்கு வளர்க்கும் பெண் கதையில் பியர்டு என்பவன் இங்கர் என்ற விலைப்பெண்ணை ஜெர்மனியில் சந்திக்கிறான். அவள் மீது தீராத ஆசை கொள்கிறான். அவளோ பியர்டினை இன்னொரு வாடிக்கையாளன் போலவே நடத்துகிறாள். …

குரங்கு வளர்க்கும் பெண் Read More »

கால்வினோ உரை

டிசம்பர் 25 மாலை எனது புத்தக வெளியீட்டின் போது இதாலோ கால்வினோ குறித்து சிறப்புரை நிகழ்த்த திட்டமிட்டிருந்தேன். கால அவகாசம் குறைவாக உள்ளதால்  அதைத் தனிநிகழ்வாக பிப்ரவரி முதல்  வாரம் நிகழ்த்த முடிவு செய்துள்ளேன். இதாலோ கால்வினோவின் எழுத்துமுறை, மற்றும் அவரது முக்கிய நாவல்கள். கட்டுரைகள் குறித்த உரையாக அதை அமைத்துக் கொள்ளவே எண்ணுகிறேன்.  இதற்காக மறுபடியும் அவரது படைப்புகளை முழுமையாக வாசிக்க வேண்டும். ஆகவே கால அவகாசம் தேவைப்படுகிறது டிசம்பர் 25ல் எனது ஏழு புதிய …

கால்வினோ உரை Read More »

கவிஞனும் காவல்துறையும்

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் பாரதியை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும். இந்தப் பெரும்பணியைச் செய்த சீனி.விசுவநாதன் மிகுந்த பாராட்டிற்குரியவர். இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு …

கவிஞனும் காவல்துறையும் Read More »

பாரதி விழாவில்

டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் கலந்து கொண்டேன். காலை பாரதியார் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினேன். பாரதி இல்லத்திலிருந்து நினைவு மண்டபம் வரை ஊர்வலம் சென்றது. நிறையப் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பாரதி மண்டபத்தில் நடைபெற்ற பாரதி தரிசனம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினேன். பாரதி அன்பர்கள் பலரும் வெளியூர்களிலிருந்து வந்திருந்தார்கள். எழுத்தாளர் பொன்னீலன் நிகழ்விற்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து உரையாடினேன். பொன்னீலனுடன் எழுத்தாளர் ராம் தங்கம் உடன் வந்திருந்தார். …

பாரதி விழாவில் Read More »

பறவைகளின் பாதை.

ஒரு படத்தின் துவக்கக் காட்சிகள் மிகுந்த கவித்துவமாக இருந்துவிட்டால் அது ஒட்டுமொத்த படத்திற்குமான மனநிலையை உருவாக்கிவிடும் என்பதற்கு நேற்று பார்த்த Birds of Passage படமே சான்று . சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இதுவே மிகச்சிறந்த துவக்கக்காட்சி கொண்டிருக்கிறது. கொலம்பியாவின் வயு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜைதா என்ற இளம்பெண் தன்னுடைய முகத்தை மறைத்தபடியே இறக்கை போலத் தன்மேல் போர்த்தப்பட்ட சிவப்பு ஆடையை,  விரித்து ஆடுகிறாள். அவளது அனுமதியுடன் ஒரு ஆண் அவளைப் பின்னோக்கி வட்டமிடுகிறான். …

பறவைகளின் பாதை. Read More »

எட்டயபுரத்தில்

நாளை  டிசம்பர் 11  புதன்கிழமை எட்டயபுரத்தில் நடைபெறவுள்ள பாரதி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். தினமணி இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது. காலை பத்துமணிக்கு பாரதி தரிசனம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றுகிறேன்.

மறுபதிப்புகள்

தேசாந்திரி பதிப்பகம் அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பை சென்னை புத்தகக் கண்காட்சிக்காக  வெளியிடுகிறது.

ஒமானில்

சோலை வாசகர் வட்டம் சார்பில் நேற்று இக்கூட்டம் ஒமானில் நடைபெற்றுள்ளது. துணையெழுத்து குறித்து உரையாற்றியவர்களுக்கும் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கும் நன்றி ••

மதுரையில்

மதுரை வாசகர் வட்டம் சார்பில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது இடக்கை நாவல் குறித்து உரையாற்றுபவர் :  A. சண்முகநாதன். ஒருங்கிணைப்பு : பேராசிரியர் ஜி. ராமமூர்த்தி நாள் : 14.12.2019 சனிக்கிழமை நேரம்: காலை 11 மணி இடம் : மதுரை பிரம்ம கான சபா. மேலப் பெருமாள் மேஸ்திரி தெரு ( சென்னை சில்க்ஸ் அருகில்)  மதுரை. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைக்கிறேன். ••