தடம் இதழில்
இம்மாத தடம் இதழில் வெளியான எனது கட்டுரை https://www.vikatan.com/thadam/2018-nov-01/column/145617-ramakrishnan-talks-about-chinese-poet.html
இம்மாத தடம் இதழில் வெளியான எனது கட்டுரை https://www.vikatan.com/thadam/2018-nov-01/column/145617-ramakrishnan-talks-about-chinese-poet.html
1850களில் நியூயார்க் நகர வீதியில் சுற்றியலைந்த பூட் பாலிஷ் போடும் சிறார்கள், பழம் விற்பவர்கள். பேப்பர் போடுகிறவர்கள். பூ விற்பவர்கள் என்று பல்வேறுவிதமான சிறார்களை ஒவியமாக வரைந்திருக்கிறார் ஜான் ஜார்ஜ் பிரவுன்.(John George Brown) சிறார்களை ஒவியமாக வரைந்தவர்களில் இவரே தனித்துவமானவர். குழந்தைப் பருவத்தைத் தனது ஒவியங்களுக்கான முக்கியக் கருப்பொருளாகக் கொண்டிருந்தார் பிரவுன். ஆரம்பக் காலத்தில் நடுத்தர வர்க்க குழந்தைகளை வரைந்தவர் பின்பு ஏழை, எளிய சிறார்களை அதிகம் வரைந்திருக்கிறார். இவரது பல முக்கிய ஒவியங்களின் ஒரிஜினல்களைக் …
தேசாந்திரி சார்பில் உருவாக்கபட்டுள்ள புதிய யூடியூப் சேனலை பதிவு செய்தவர்களுக்கு நன்றி. இதை அங்கீகரிக்கபட்ட சேனலாக மாற்ற கூடுதல் பதிவுகள் தேவை. குறைந்த பட்சம் பத்தாயிரம் பேர் இதில் இணையும் பட்சத்தில் வாரம் ஒருமுறை புதிய வீடியோ ஒன்றை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். சிறந்த திரைப்படங்கள், புத்தகங்கள், பயணம், சமூகம் குறித்த உரைகளை வெளியிட எண்ணம் பௌத்தம் குறித்த தொடர் உரை ஒன்றை இணையத்தில் வழங்கலாம் என்றும் நினைக்கிறேன். இதற்கான ஆரம்ப வீடியோ பணிகள் நடந்து வருகின்றன. …
அகிரா குரசேவா படங்களில் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற தொஷிரோ மிபுன் குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன். Mifune: The Last Samurai (2015) என்ற ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் Steven Okazaki. கிழிந்த உடையுடன் வறுமையில் சுற்றித்திரிந்த இளைஞன் எப்படிப் புகழ்பெற்ற நடிகனாக உருவாகிறான் என்பதை ஆவணப்படம் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பு பாணி பெரிதும் முகபாவத்துடன் மட்டுமே தொடர்புடையது. மார்லன் பிராண்டோ போன்ற அரிதான நடிகர்களே மொத்த உடலையும் காட்சிக்கேற்ப மாற்றவும் பயன்படுத்தவும் கூடியவர்கள். …
கஜா புயலின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்துள்ளன. கிராமங்கள் மின்சாரமில்லாமல் இருளில் மூழ்கிப்போயுள்ளன. மக்கள் முகாம்களில் தங்க வைக்கபட்டிருக்கிறார்கள். புயலில் சிக்கி மான்கள் இறந்து போய்கிடக்கும் புகைப்படத்தை கண்டேன். மனம் கனத்துப் போனது. தென்னையும் வாழையும் முற்றிலும் சேதமடைந்திருக்கின்றன. வாழ்வாதரங்களை இழந்து மக்கள் பரிதவிக்கிறார்கள். எனது நண்பர்களும் வாசகர்களும் புயலால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு தேவையான நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறேன். சமீபத்திய கேரள வெள்ளத்திற்கு பலரும் உதவிக்கரம் …
சிறார்களுக்காக எழுதப்பட்ட சிரிக்கும் வகுப்பறை மிகுந்த வரவேற்பு பெற்ற நூல். இதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை : 110 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம். டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/
ஜென் கவிதைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலான நூலான கூழாங்கற்கள் பாடுகின்றன புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை : 75 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/
மகாபாரதம் பற்றிய எனது நாவலான உப பாண்டவத்தின் புதிய பதிப்பு. எனது நாவல்களில் அதிக பதிப்புகள் வெளியானது உப பாண்டவமே. தற்போது மலையாளத்தில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது விலை : 375 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/
டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, ஹோமர், பாஷோ, அராபிய இரவுகள் ஷேக்ஸ்பியர் குறித்து ஆற்றிய இலக்கிய உரைகளின் தொகுப்பு நூல். எனது உரையுடன் புதிதாக எழுதப்பட்ட கட்டுரைகளும் இணைந்த நூலிது புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை : 325 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/
எனது உரைகள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் சார்பில் உருவாக்கபட்டுள்ள யூடியூப் சேனலில் பார்வைக்கு உள்ளன. நண்பர்கள் தேசாந்திரி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து உதவுங்கள். புதிய வீடியோக்களை இதிலே காணலாம். subscribe செய்வதற்கு இந்த இணைப்பைத் தொடர்பு கொள்ளவும். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 நவம்பர் 14ல் சென்னையில் நேரு கண்ட இந்தியா கருத்தரங்கில் ஆற்றிய உரை நேரு கண்ட இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை| celebrate Nehru https://www.youtube.com/watch?v=RMKq6vaghNQ&feature=share நன்றி : ஸ்ருதி டிவி