admin

காமிக்ஸ் நூலகம்

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையத்தில் காமிக்ஸ் புத்தகங்களுக்கென்று சிறப்பு நூலகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஐஏஎஸ் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் காமிக்ஸ் நூலகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சிறந்த காமிக்ஸ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் காமிக் புத்தகங்களுடன் நான்கு தனிப்பட்ட கணினிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவிலே காமிக்ஸ் புத்தகங்களுக்கென உருவாக்கபட்ட முதல் நூலகம் இதுவே. 1972ல் சிவகாசியில் சௌந்தபாண்டியன் அவர்கள் முத்துகாமிக்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார். அவர்களின் முதல் வெளியீடு இரும்புக்கை மாயாவி. அது பெற்ற …

காமிக்ஸ் நூலகம் Read More »

கதை எனும் மருந்து

சத்யஜித் ரேயின் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட இந்தி திரைப்படம் The Storyteller . ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ளார். அறிவியல்புனைகதைகள் உள்ளிட்ட பல்வேறு சிறுகதைகளை ரே எழுதியிருக்கிறார். விசித்திரமான நிகழ்வுகள். மனிதர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட அவரது சிறுகதைகள் வங்காளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஓவியர் என்பதால் ரே கதாபாத்திரங்களைத் துல்லியமாகச் சித்தரிக்கக் கூடியவர். இந்தக் கதையில் வரும் இருவரும் தனித்துவமானவர்கள். வங்காளத்தில் வாழும் தாரிணி பந்தோபாத்யாயா என்ற அறுபது வயதானவர் ஒரு கதை சொல்லி. முதலாளித்துவத்தை வெறுக்கும் …

கதை எனும் மருந்து Read More »

எவரும் விரும்பாத கடிதம்

 “Wicked Little Letters,” மாறுபட்ட பிரிட்டிஷ் திரைப்படம். தியா ஷாராக் இயக்கிய புதிய நகைச்சுவை திரைப்படம் துப்பறியும் கதை என்றும் சொல்லலாம். ஆனால் துப்பறியப்படும் விஷயமும் பின்புலமும் புதியது. சுவாரஸ்யமானது. 1920களில் கதை நடக்கிறது. லிட்டில்ஹாம்ப்டனில் உள்ள ஒரு வீட்டிற்குத் தபால் வருவதில் துவங்குகிறது. அந்தத் தபாலை பார்த்த மாத்திரம் வீட்டில் உள்ளவர்கள் அலறுகிறார்கள். காரணம் அது ஒரு மொட்டைக்கடிதம். அதுவும் ஆபாச வார்த்தைகளால் எழுதப்பட்ட கடிதம். அதைப் பிரித்துப் படிக்கவே சங்கடப்படுகிறார்கள். இப்படியான கடிதங்கள் தொடர்ந்து …

எவரும் விரும்பாத கடிதம் Read More »

தபால்துறை விழா/ புகைப்படங்கள்

நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள தலைமைத் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற விழா சிறப்பாக நடந்தேறியது. அஞ்சல்துறை அதிகாரிகள், தபால்காரர்கள். தபால் நிலைய ஊழியர்கள், தபால்தலை சேமிப்பாளர்கள், ஊடக நண்பர்கள், என அரங்கு நிறைந்த கூட்டம். நிகழ்வை நன்றாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள். இந்த நிகழ்வில் அந்திமழை அசோகன் உள்ளிட்ட எனது விருப்பத்திற்குரிய இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது. தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலை தபால்காரர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். ஆகவே அவர்கள் இந்த நூலைப் பெற்றுக் …

தபால்துறை விழா/ புகைப்படங்கள் Read More »

எதிர்பாராத முத்தம்

இலக்கிய விமர்சகர் ஜேம்ஸ் உட் தி கார்டியன் இதழின் தலைமை இலக்கிய விமர்சகராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். பின்பு அமெரிக்காவிற்குச் சென்று தி நியூயார்க்கரில் வேலைக்குச் சேர்ந்து அங்கும் தொடர்ந்து இலக்கிய விமர்சனத்தை எழுதி வருகிறார். இவரது விமர்சனக் கட்டுரைகள் இலக்கியப் படைப்பின் நுட்பத்தை, சிறப்புகளை அழகாக எடுத்துக் காட்டக் கூடியவை. இவரது கட்டுரைகளின் தொகுப்பான SERIOUS NOTICING: SELECTED ESSAYS, 1997-2019 யை வாசித்தேன். 28 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. லியோ டால்ஸ்டாய், மெல்வில். பால்சாக், …

எதிர்பாராத முத்தம் Read More »

தபால்துறை- சிறப்பு விழா

கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் பற்றி நான் எழுதிய தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முதற்பதிப்பு சென்னைப் புத்தகத் திருவிழாவிலே விற்றுத் தீர்ந்துவிட்டது. நிறைய விமர்சனப்பதிவுகளும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இந்நூல் விரைவில் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. இந்த நூலைக் கௌரவிக்கும் விதமாக தபால்துறை சிறப்பு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. பிப்ரவரி 6 வியாழன் காலை பத்துமணிக்கு சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில் 100 தபால்காரர்களுக்கு இந்த நூல் பரிசாக …

தபால்துறை- சிறப்பு விழா Read More »

தென்னிந்தியச் சிறுகதை எழுத்தாளர் சந்திப்பு

சாகித்திய அகாதமி நடத்தும் தென்னிந்தியச் சிறுகதை எழுத்தாளர் சந்திப்பு பிப்ரவரி 3 திங்கள்கிழமை காலை சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன அரங்கில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறேன்

கூண்டில் ஒருவர்.

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ, அர்ஜென்டினா எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகள் மட்டுமே எழுதுபவர். முப்பது ஆண்டுகளில் ஆறு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் நீண்ட நேர்காணல் செய்து தனித்தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். re-entry into society என்றொரு சிறுகதையை ஸோரன்டினோ எழுதியிருக்கிறார். அதில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தேனிலவிற்குச் சென்றுவிட்டு தங்களின் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். வீட்டில் அவர்களின் படுக்கை அறையில் பெரியதொரு கூண்டு காணப்படுகிறது. அதற்குள் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார். இந்தக் கூண்டினை வைப்பதற்காகப் …

கூண்டில் ஒருவர். Read More »

இணையாத தண்டவாளங்கள்

எகிப்திய இயக்குனரான யூசுப் சாஹின் இயக்கிய Cairo Station 1958ல் வெளியான திரைப்படம். முழுப்படமும் கெய்ரோ சென்ட்ரல் ஸ்டேஷனில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளில் கதை நடைபெறுகிறது ரயில் நிலையம் என்பது தனியொரு உலகம். பயணிகள் அதை முழுமையாக உணர்வதில்லை. நான் பல நாட்களை ரயில் நிலையத்தில் கழித்தவன் என்ற முறையில் இப்படம் சித்தரிக்கும் உலகை நன்றாக அறிவேன். கெய்ரோ சென்ட்ரல் ரயில் நிலையம், தலைநகரின் இதயம். ஒவ்வொரு நிமிடமும் ஒரு ரயில் புறப்படும் பரபரப்பான ரயில் நிலையமது. …

இணையாத தண்டவாளங்கள் Read More »