காந்தியின் கடிதம்
இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக, 1931 ஆகஸ்ட் 28 தேதியிட்டு இந்திய அரசின் உள்துறைச் செயலர் ஹெர்பர்ட் வில்லியம் எமர்சனுக்குக் காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது அவரது இடது கையால் எழுதப்பட்ட கடிதமாகும். இரண்டு கைகளாலும் காந்தியால் எழுத முடியும். இந்தக் கடிதம் இடது கையால் எழுதப்பட்டது என்ற தகவலை காந்தியே தெரிவிக்கிறார். இடது கையால் எழுதப்பட்ட போதும் எழுத்துக்கள் சரிவாகவோ, துண்டிக்கப்பட்டோ காணப்படவில்லை. வரிகளுக்கு இடையே சரியான இடைவெளியும் …









