விகடனில்
இந்த வார விகடன் (4500 வது )சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள நேர்காணல் 05.10.2017
இந்த வார விகடன் (4500 வது )சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள நேர்காணல் 05.10.2017
இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையியலாளர் மா.கிருஷ்ணன் எழுதிய கதிரேசன் செட்டியாரின் காதல் என்ற துப்பறியும் நாவல் 1996ம் வெளியானது. பதிமூன்று வருசங்களுக்கு மேலாகியும் உரிய கவனமற்று போன அந்த நாவல் 2009ம் வருசம் புதிய பதிப்புக் கண்டிருக்கிறது. மா. கிருஷ்ணன் தமிழின் முன்னோடி நாவலாசிரியர் ஆ. மாதவைய்யாவின் மகன். தாவரவியலும் சட்டமும் படித்துவிட்டு சுண்டூர் சமஸ்தானத்தில் பணியாற்றியிருக்கிறார். புகைப்படம் எடுப்பதிலும் ஒவியத்திலும் ஆர்வம் கொண்ட கிருஷ்ணன் ஸ்டேட்ஸ்மென் இதழில் எழுதிய இயற்கையுலகம் பற்றிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. கானுயிர் …
கோலம் வழங்கும் அசோகமித்திரன் விருது 2016-17 அசோகமித்திரனின் பத்து முகங்கள் – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை https://www.youtube.com/watch?v=5JwKkQW3Vls
எனது சிறுகதையை மோகன்குமார் குறும்படமாக சிறப்பாக உருவாக்கியுள்ளார். BurraaH Tamil short film Directed By Mohankumar https://youtu.be/OqSYjR30DLU
Singapore Writers Festival 2017 ல் கலந்து கொள்வதற்காக நவம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூர் வருகை தர இருக்கிறேன். இது ஒரு சர்வதேச எழுத்தாளர் விழா. இந் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதோடு சிங்கப்பூர் எழுத்தாளர்கள், வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்த இருக்கிறேன் சிங்கப்பூரில் உள்ள இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம். தங்குமிடம், நேரம் குறித்து அறிந்து கொள்ள மின்னஞ்சல் அனுப்பவும் writerramki@gmail.com
நவம்பர் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ள ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கபட்டிருக்கிறேன். உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி திகழ்கிறது. இதில் 59 நாடுகள் கலந்து கொள்கின்றன. நவம்பர் 3 இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இலக்கிய அமர்வில் கலந்து கொள்கிறேன். இதற்காக நவம்பர் 2 ல் ஷார்ஜா வருகை தருகிறேன். அங்குள்ள இலக்கிய நண்பர்கள். வாசகர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் …
சிறுவர்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம் நூலை வாசித்துவிட்டு 13 வயதான சூரியநிலவன் எழுதியுள்ள கடிதம். சிங்கப்பூரில் வசிக்கும் சூரியநிலவனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் அன்பும் பாராட்டுகளுக்கும். சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு நன்றி. ••• நான் சூரியநிலவன், 13, சிங்கப்பூர். கடந்த வியாழக்கிழமை நான் நூலகத்துக்குச் சென்றிருந்தேன். எப்பொழுதும் என் அப்பா இரவல் பெறும்போது தமிழ்ப்புத்தகத்தையும் இரவல் பெறக் கூறுவார்.நானும் வேண்டாவெறுப்பாக ஒன்றை எடுத்துக்கொண்டு வருவேன். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை.நீங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால் நூலக …
1981ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் எலியாஸ் கானெட்டி. ஜெர்மன் மொழி எழுத்தாளரான இவர் எழுதிய Crowds & Power மிக சுவாரஸ்யமான புத்தகம். மனிதர்கள் ஏன் கூட்டமாகத் திரளுகிறார்கள். கூட்டத்தின் மனநிலை எப்படி உருவாகிறது. ஏன் கூட்டம் சேர்ந்தவுடன் வன்முறை ஏற்படுகிறது. தனிநபர் கூட்டத்தின் வழியாக என்ன மனநிலையை அடைகிறார். எது போன்ற கூட்டங்களைச் சமாளிக்க முடிவதில்லை என்று கூட்டத்திற்கும் அதிகாரத்திற்குமான உறவைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். பத்திரிக்கையாளர்கள். அரசியல் செயல்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய …
என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியில் ஒருவன். சென்னை புக்ஸ் நிறுவனத்தால் வெளியிட்டது. இந்தத் தொகுப்பை நான் உருவாக்கவில்லை. வெவ்வேறு இதழ்களில் வெளியான எனது சிறுகதைகளைத் தொகுத்து எழுத்தாளர் தமிழ்செல்வன் சிறுகதை தொகுப்பினை கொண்டு வந்தார். என் மீதான அன்பில் அவரே புத்தகம் வெளியிட்டு விட்டதால் முதற்புத்தகம் கொண்டுவருவது பெரிய சிரமமின்றி எளிதாக நடந்துவிட்டது. ஆனால் முதல்நாவலான உப பாண்டவத்தைக் கொண்டு வர பெரும்போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது சென்னையை விடுத்து விருதுநகரில் குடியிருந்தேன். திருமணமாகியிருந்தது. வேலை எதுவும் …