புதிய குறும்படம்
எனது சிறுகதையை மோகன்குமார் குறும்படமாக சிறப்பாக உருவாக்கியுள்ளார். BurraaH Tamil short film Directed By Mohankumar https://youtu.be/OqSYjR30DLU
எனது சிறுகதையை மோகன்குமார் குறும்படமாக சிறப்பாக உருவாக்கியுள்ளார். BurraaH Tamil short film Directed By Mohankumar https://youtu.be/OqSYjR30DLU
Singapore Writers Festival 2017 ல் கலந்து கொள்வதற்காக நவம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூர் வருகை தர இருக்கிறேன். இது ஒரு சர்வதேச எழுத்தாளர் விழா. இந் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதோடு சிங்கப்பூர் எழுத்தாளர்கள், வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்த இருக்கிறேன் சிங்கப்பூரில் உள்ள இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம். தங்குமிடம், நேரம் குறித்து அறிந்து கொள்ள மின்னஞ்சல் அனுப்பவும் writerramki@gmail.com
நவம்பர் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ள ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கபட்டிருக்கிறேன். உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி திகழ்கிறது. இதில் 59 நாடுகள் கலந்து கொள்கின்றன. நவம்பர் 3 இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இலக்கிய அமர்வில் கலந்து கொள்கிறேன். இதற்காக நவம்பர் 2 ல் ஷார்ஜா வருகை தருகிறேன். அங்குள்ள இலக்கிய நண்பர்கள். வாசகர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் …
சிறுவர்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம் நூலை வாசித்துவிட்டு 13 வயதான சூரியநிலவன் எழுதியுள்ள கடிதம். சிங்கப்பூரில் வசிக்கும் சூரியநிலவனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் அன்பும் பாராட்டுகளுக்கும். சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு நன்றி. ••• நான் சூரியநிலவன், 13, சிங்கப்பூர். கடந்த வியாழக்கிழமை நான் நூலகத்துக்குச் சென்றிருந்தேன். எப்பொழுதும் என் அப்பா இரவல் பெறும்போது தமிழ்ப்புத்தகத்தையும் இரவல் பெறக் கூறுவார்.நானும் வேண்டாவெறுப்பாக ஒன்றை எடுத்துக்கொண்டு வருவேன். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை.நீங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால் நூலக …
1981ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் எலியாஸ் கானெட்டி. ஜெர்மன் மொழி எழுத்தாளரான இவர் எழுதிய Crowds & Power மிக சுவாரஸ்யமான புத்தகம். மனிதர்கள் ஏன் கூட்டமாகத் திரளுகிறார்கள். கூட்டத்தின் மனநிலை எப்படி உருவாகிறது. ஏன் கூட்டம் சேர்ந்தவுடன் வன்முறை ஏற்படுகிறது. தனிநபர் கூட்டத்தின் வழியாக என்ன மனநிலையை அடைகிறார். எது போன்ற கூட்டங்களைச் சமாளிக்க முடிவதில்லை என்று கூட்டத்திற்கும் அதிகாரத்திற்குமான உறவைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். பத்திரிக்கையாளர்கள். அரசியல் செயல்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய …
என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியில் ஒருவன். சென்னை புக்ஸ் நிறுவனத்தால் வெளியிட்டது. இந்தத் தொகுப்பை நான் உருவாக்கவில்லை. வெவ்வேறு இதழ்களில் வெளியான எனது சிறுகதைகளைத் தொகுத்து எழுத்தாளர் தமிழ்செல்வன் சிறுகதை தொகுப்பினை கொண்டு வந்தார். என் மீதான அன்பில் அவரே புத்தகம் வெளியிட்டு விட்டதால் முதற்புத்தகம் கொண்டுவருவது பெரிய சிரமமின்றி எளிதாக நடந்துவிட்டது. ஆனால் முதல்நாவலான உப பாண்டவத்தைக் கொண்டு வர பெரும்போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது சென்னையை விடுத்து விருதுநகரில் குடியிருந்தேன். திருமணமாகியிருந்தது. வேலை எதுவும் …
நீட் தேர்வு மருத்துவம் பயில நினைக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவுகளை அழிக்கக்கூடிய ஒன்றாக தமிழ்நாட்டில் புகுந்துள்ளது. நாம் நீட் தேர்வை அனுமதிக்க கூடாது. அனிதாவின் மரணம் பெரும் இழப்பாகும். இதற்கு காரணமாக இருந்த மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அனைவரும் இணைந்து போராடுவோம். நம் குரல் தமிழக மக்களின் கல்வியுரிமைக்கான ஒற்றைக்குரலாக ஒலிக்க வேண்டும்.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படம் நெருதா. சிலே தேசத்தின் பிரபல இயக்குனர் Pablo Larrain இயக்கியிருக்கிறார்.சிலே கம்யூனிஸ்ட் கட்சியின் செனட்டராக நெருதா பணியாற்றினார். அதிலிருந்தே படம் துவங்குகிறது. 1946 ஆம் ஆண்டில், சிலேயின் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிகளின் சார்பில் நின்ற கேப்ரியல் கோன்சல்ஸ் விதேலாவிற்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் நெருதா. விதேலா தேர்தலில் வெற்றிபெற்றபின், சிலே கம்யூனிஸ்ட் கட்சியுடன் சண்டையிட்டு கம்யூனிஸ்டுகளைத் தனதுஅமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார். பின்னர் ஜனநாயக பாதுகாப்பு சட்டத்தின் …
டாக்டர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் கால்நடைமருத்துவராகப் பணியாற்றுகிறார். வண்ணாதிகுளம், அசோகனின் வைத்தியசாலை போன்ற சிறப்பான நாவல்களையும் வாழும் சுவடுகள் என்ற விலங்குகளுக்கான சிகிட்சை அனுபவத் தொகுப்பு நூலையும் எழுதியிருக்கிறார். ஆஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய புத்தகமான நைல் நதிக்கரையோரம் என்ற பயணநூலை வாசித்தேன். சுவாரஸ்யமாக, வரலாற்றுத் துல்லியத்துடன் எழுதப்பட்ட சிறந்த பயணநூலது. ஒரு மருத்துவரின் பார்வையில் வரலாறு அணுகப்படுகிறது என்பதே இதன் …