admin

கோணங்கி

எனது தாவரங்களின் உரையாடல் சிறுகதை தொகுப்பு குறித்து 1998ல் கோணங்கி எழுதிய விமர்சனம் ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்தேன். இது காலக்குறி இதழில் வெளியானது என நினைக்கிறேன். தாவரங்களின் உரையாடல் என்னை அடையாளப்படுத்திய சிறுகதை தொகுதி. அதன் புதியபதிப்பு தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளியாக உள்ளது. அந்த மகிழ்வில் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் •••• தாவரங்களின் மொழிவலையில் விரியும் கதைப்பரப்பு – கோணங்கி எஸ். ராமகிருஷ்ணனின் மூன்றாவது கட்டக்கதைகள் பதினெட்டில் ஊடுருவியபோது பனிரெண்டு கதைகளுக்குள் சந்தடியற்ற காலடிகளோடு நெருங்கும் …

கோணங்கி Read More »

தமிழ் சங்கங்கள்

கேள்வி 1: தமிழ் இலக்கியப் படைப்புகள் உலகளாவிய அளவில் மற்ற நாட்டின் அறிஞர் /எழுத்தாளர்களால் எத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது? பொதுவாக இந்தியாவெங்கும் தமிழ் இலக்கியம் என்றால் பழந்தமிழ் இலக்கியம் என்றே நினைத்துக் கொள்கிறார்கள். நவீன தமிழ்இலக்கியம் பற்றி பிற மாநிலங்களுக்கு அதிகம் தெரியாது. இந்திய அளவிலான இலக்கியக்கூட்டங்களுக்குப் போகும் போதெல்லாம் அவர்கள் வியப்போடு இப்படி எல்லாம் தமிழில் எழுதுகிறார்களா எனக்கேட்கிறார்கள். இன்றைய இலக்கியம் குறித்து இந்திய மொழிகளில் அறிமுகமேயில்லை.  பின்பு எப்படி உலக அரங்கிற்குத் தெரிந்திருக்ககூடும். வெளிநாட்டுப் …

தமிழ் சங்கங்கள் Read More »

இடக்கை– நூல் விமர்சனம்

– கணேஷ் பாபு  சிங்கப்பூர் வரலாற்றின் நீண்ட பயணத்தில், மனிதன் அதிகமும் நம்பிக்கைவைத்திருந்தது நீதியின் மீதுதான். சமூகமாக மனிதன் வாழத் துவங்கியதிலிருந்து அவன் தனது வாழ்வின் காப்பாக நீதியைத்தான் நம்பிவந்திருக்கிறான். அதே சமயம் அவன் அச்சம் கொண்டது, நீதியை கையாள்பவர்களிடமும், நீதியை தீர்மானிப்பவர்களிடமும்தான். இந்தப் புள்ளியில்தான் அதிகாரம் என்ற மாபெரும் சக்தியை மனிதன் எதிர்கொள்ள நேர்கிறது. தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நீதியை செலுத்தக்கூடிய கரங்கள் அதிகாரம் என்ற பீடத்தில்தான் நிலைகொண்டுள்ளது என்று அறியநேர்கையில் மனித மனதில் …

இடக்கை– நூல் விமர்சனம் Read More »

உறுபசி நாவல் பற்றி

உறுபசி நாவல் பற்றி சரவணன் என்ற வாசகர் எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு. •• உறுபசி. படித்து முடித்தவுடன் இதை எழுதுகிறேன். சம்பத் என்னும் நண்பனை , அவன் இறப்பின் பின் நினைவுகளின் வழி மீண்டும் தொட்டு மீண்டு வரும் மூன்று நண்பர்கள் பற்றியது. எப்போதும் இறப்பு ஒருவரின் நினைவுகளை கிளர்ந்து எழ செய்பவையே. அந்த வகையில் சம்பத்துடன் விருப்பமற்று தொடர்பில் இருக்கும் அவர்களுக்கு , அவன் வாழ்வின் மேல் ஒரு கசப்பும் அசூயையும்  உள்ளது. இந்த கசப்பு , …

உறுபசி நாவல் பற்றி Read More »

காரல் மார்க்ஸ் – உரை

நேற்று திருப்பூரில் நடைபெற்ற காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவில் உரையாற்றினேன். மார்க்ஸ் பற்றிப் பேசப்பேச உணர்ச்சிவசம்மீறி என்னை அறியாமலே கண்ணீர் சிந்தும்படியானது. பெரும்பான்மையான உரைகளில் பேச்சை என் கட்டுக்குள் தான் வைத்திருப்பேன். இது போல சில தருணங்கள் பேச்சு இழுத்துக் கொண்டுபோய்விடுகிறது. மார்க்ஸ் பற்றிய உரைக்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மார்க்ஸின் வரலாற்றையும் தத்துவங்களையும் வாசித்தது புத்துணர்வு தருவதாகயிருந்தது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தோழர் ஈஸ்வரனுக்கும், தலைமை ஏற்றி நடத்திய தோழர் எஸ். ஏ.பெருமாளுக்கும். …

காரல் மார்க்ஸ் – உரை Read More »

இலங்கை பயணம்

எட்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன். கிழக்கு மாகாண இலக்கியவிழாவில் சிறப்புரையாற்ற எழுத்தாளர் உமா வரதராஜன் அழைத்திருந்தார். கொழும்பில் துவங்கி யாழ்பாணம் வரை பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தேன். இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாகப் பார்வையிட்டேன்.  இந்த பயண அனுபவம் குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த பயணத்தில்எழுத்தாளர்கள் உமா வரதராஜன், ஹசீன்,  எஸ்.எல்.எம்.ஹனீபா, ஒட்டமாவடி அறபாத், திசேரா,மலர்செல்வன்.குழப்பிழான் சண்முகம், சாந்தன்,   யதார்த்தன் , கே.எஸ். சிவக்குமாரன், எம்.எம். நௌஷாத், சித்தாந்தன், பௌசர்  சிராஜ் …

இலங்கை பயணம் Read More »

நன்றி

தேசாந்திரி பதிப்பகம்  குறித்து வாழ்த்துகளையும் அன்பையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. தேசாந்திரி சார்பில் புதிய புத்தகங்கள் ஜனவரி 2018 சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும் பதிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. •••

இலக்கிய தர்பார்

ஆகஸ்ட் 13 ஞாயிறு காலை 11 மணிக்கு  பொதிகை தொலைக்காட்சியில் நான் கலந்து கொண்ட இலக்கிய தர்பார் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. Ilakkiya Durbar Promo on 13-08-2017 https://youtu.be/WMNzQOrC-Mo

தேசாந்திரி பதிப்பகம்

எனது நூல்களை வெளியிடுவதற்காகத் தேசாந்திரி என்ற புதிய பதிப்பகத்தைத் துவக்கியுள்ளேன். இனி எனது நூல்கள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் வழியாகவே வெளியாகும். நண்பர் மனுஷ்யபுத்திரன் தனது உயிர்மை பதிப்பகத்தின் வழியே எனது 80க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். என் எழுத்துலக பணியில் உயிர்மையின் துணை மிகுந்த நன்றிக்குரியது. ஆயினும் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் இனி எனது நூல்களை நானே வெளியிடுவது என முடிவு செய்துள்ளேன். உயிர்மை, விஜயா, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள எனது நூல்கள் அச்சிடப்பட்ட பிரதிகள் …

தேசாந்திரி பதிப்பகம் Read More »