தேசாந்திரி பதிப்பகம் தொடக்கவிழா
தேசாந்திரி பதிப்பகத்தின் தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இடம் கிடைக்காமல் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதம் இளைஞர்கள். அனைவரின் அன்பும் ஆதரவுமே நிகழ்ச்சியை வெற்றி பெறச்செய்தது. தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது ஏழு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. தோழர் நல்லகண்ணு அவர்கள் எனது நூலை வெளியிட்டது மிகப்பெரிய கௌரவம். நிகழ்வில் பார்வையற்றவர்களுக்காக பிரெயில் மொழியில் படிக்கத் தெரிந்த சிங்கம் நூல் வெளியிடப்பட்டது. ரஷ்ய கலாச்சார மைய இயக்குனர் …