admin

கர்ணன் முகவரி

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய எழுத்தாளனின் சித்திரம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கர்ணனைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனப் பலரும்  போனிலும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டார்கள்.அவரது  முகவரி. திரு. கர்ணன் 37,  சுயராஜ்யபுரம் 4 வது தெரு செல்லூர். மதுரை – 2 தொலைபேசி.  9487950844 •• விருப்பமானவர்கள் அவரைத்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

இலக்கியவிழா

தி இந்து ஆங்கில நாளிதழ் நடத்தும் இலக்கியவிழாவில் ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்கிறேன். இந்த விழா ஜனவரி 15,16,17  ஆகிய மூன்று நாட்கள்  சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாக அரங்கில் நடைபெறுகிறது. The Hindu Lit For Life January 15 .THE HINDU PAVILION 12.05 pm – 12.55 pm Aham, Puram: Impact of urbanisation and industrialisation as reflected in Tamil …

இலக்கியவிழா Read More »

வாசகசாலை

“வாசகசாலை”முகநூல் குழுமம், புத்தக வாசிப்பினை மேம்படுத்தும் விதமாக கடந்த ஒராண்டு காலமாக மாதம் ஒருமுறை ஒரு புத்தகம் பற்றிய கலந்துரையாடலையும், மூத்தபடைப்பாளிகளை கொண்டாடும் விதமாக ஆய்வரங்குகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. வாசகசாலை அமைப்பின் முதலாமாண்டு  நிறைவு  ஜனவரி, 9 ம்தேதி சனிக்கிழமை  அன்று நடைபெற உள்ளது. இந்த  விழாவை முன்னிட்டு 2015-ல் வெளியான படைப்புகளில் சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து விருது  தர இருக்கிறார்கள். இதற்கான …

வாசகசாலை Read More »

எனது குறும்படம்

சென்னை சர்வதேச பட விழாவில் நாளை (08/01/2016  ) மாலை ஆறரை மணிக்கு எனது சிறுகதையை மையமாகக் கொண்டு எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் மோகன்குமார் உருவாக்கிய புர்ரா குறும்படத்தை திரையிடுகிறார்கள். ரஷ்ய கலாச்சார மையத்தில்  இந்தத் திரையீடு நடைபெறுகிறது.

எழுத்தாளனின் சித்திரம்.

மதுரையில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் கர்ணன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். இவரது படைப்புகள் கல்கி, அமுதசுரபி, கலைமகள், தீபம், தாமரை, தினமணிக்கதிர் விகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. இதுவரை 14 சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாத தன்னைக் கல்கியின் எழுத்துகளே எழுத்தாளன் ஆக்கின என்கிறார். மதுரையில் சிறிய டெய்லர் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வறுமையான வாழ்க்கைச் சூழலிலும் தீவிரமாக இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் நேசித்தவர் கர்ணன். இன்று தனது …

எழுத்தாளனின் சித்திரம். Read More »

பனியில் சிந்திய குருதி.

மெக்சிகோவைச் சேர்ந்த இயக்குனரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் இனாரித்து (Alejandro González Iñárritu) அமரோஸ் பெரோஸ், பாபேல், 21 கிராம்ஸ் போன்ற சிறந்த படங்களைத் தந்தவர். சென்ற ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான BIRD MAN ஆஸ்கார் விருதைப் பெற்றது. தற்போது அவரும் டிகாப்ரியோவும் இணைந்து The Revenant என்ற மிகச்சிறந்த படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 2015 கிறிஸ்துமஸ் அன்று இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் இப்படத்தை மூன்றுமுறை பார்த்துவிட்டேன். கரடி தாக்கி உயிர்பிழைத்த வேட்டைக்காரன் Hugh …

பனியில் சிந்திய குருதி. Read More »

அஞ்சலி

மதுரை பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் கண்ணனை முதன்முறையாகச் சந்தித்தேன் தீவிர இலக்கிய வாசகர். சமூகசிந்தனைகள் கொண்டவர். மதுரையில் நடைபெற்ற பெரும்பான்மை இலக்கியக்கூட்டங்கள், நாடகங்களில் அவரைச்சந்தித்திருக்கிறேன். உற்சாகமாக உரையாடுவார்.  சுதேசிகள் நாடகக்குழு எனது உருளும் பாறைகள் நாடகத்திற்கான ஒத்திகை நிகழ்த்திய போது தினமும் அவரைச்சந்தித்து பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். குறைவாக பேசக்கூடியவர், எப்போதும் புன்சிரிப்புடன் பேசும் இயல்பு கொண்டவர். சென்னைக்கு அலுவலக வேலையாக வரும் போது என்னைத் தொடர்பு கொண்டு சந்தித்து உரையாடுவார். எளிமையும் நேசமும் கொண்ட அற்புதமான …

அஞ்சலி Read More »

ஜோர்பா

Since we cannot change reality, let us change the eyes that see reality. -Nikos Kazantzakis ஜோர்பா தி கிரேக் (Zorba the Greek) நாவல் 1946ல் வெளியானது.  இதுவரை ஐம்பது லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.  நவீன கிரேக்க இலக்கியத்தில் கசான்ஸ்சாகிஸ் மிக முக்கியமான எழுத்தாளர். இந்த நாவலை வியந்து பேசும் ஒஷோ, ஜோர்பாவை  நவீன காலத்தின் புத்தன் என்கிறார் Zorba is the foundation and Buddha is the …

ஜோர்பா Read More »

புத்தாண்டு உரை

புத்தாண்டினைச் சிறப்பிக்கும் வண்ணம் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கசான்ஸ்சாகிஸ் எழுதிய உலகப்புகழ்பெற்ற நாவலான ஜோர்பா தி கிரீக் ( Zorba the Greek ) பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன் நாள் : 01.01.2016  வெள்ளிகிழமை இடம்:  டிஸ்கவரி புக் பேலஸ். கே.கே.நகர். சென்னை நேரம்: மாலை 6 மணி

புத்தாண்டு நிகழ்ச்சி

இன்றிரவு சென்னை உயிர்மை பதிப்பக அலுவகத்தில் புத்தாண்டு தினச் சந்திப்புகள் நடைபெறுகின்றன. அதில் நான்  கலந்து கொண்டு வாசகர்களுடன் உரையாட இருக்கிறேன். இரவு 9 மணி அளவில் உயிர்மை அலுவலகத்திற்கு வந்து சேருவேன். •••