admin

இரும்புக்கை மாயாவி

பள்ளிநாட்களில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள் தற்போது புதுப்பொலிவுடன் மீண்டும் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளன. முத்துகாமிக்ஸ் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகன் என்ற முறையில் இவற்றை மீண்டும் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக நேற்றிரவு இரும்புக்கை மாயாவியின் நாச அலைகளை வாசித்தேன். முதல்முறையாகப் படித்த போது அடைந்த சந்தோஷம் இன்றும் அப்படியே இருப்பது வியப்பளித்தது. இரும்புக்கை மாயாவி பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். புத்தரின் கார்டூன் மொழி என்ற அச்சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் தொகுதி 1 ல் …

இரும்புக்கை மாயாவி Read More »

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்

அம்ஷன் குமார் சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் எழுத வந்த காலத்தில் தமிழில் பத்திரிகை உலகும் சினிமா உலகும் பெரும் தொழில் நிறுவனங்களாக ஆகிவிட்டிருந்தன. பல இலக்கிய எழுத்தாளர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பெரும் பத்திரிகைகளில் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். நாவல்கள், கதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் அவற்றில் வந்தன. இலக்கியச் சிறப்பு மிக்க உ.வே.சாமிநாத அய்யரின் சுயசரிதை ‘என் …

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன் Read More »

காணொளிகள்

உயிர்மை நடத்திய எனது புதிய நாவல் ‘இடக்கை’, புதிய சிறுகதைத் தொகுப்பு ‘என்ன சொல்கிறாய் சுடரே’ ஓவியங்கள் தொடர்பான் நூல் ‘ஆயிரம் வண்ணங்கள்’ நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள் அனைத்தும் ஒரே சுட்டியில் https://www.shruti.tv/?p=8101 நன்றி  : ஸ்ருதி டிவி

மண்ணின் இசையாய்…

( சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக் கட்டுரை) சுப்பாராவ் கர்னாடக சங்கீதம் இந்த மண்ணின் இசையா? இல்லை அதுவும் கைபர் கணவாய் வழியே வந்ததா? என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. நல்ல ரசனையும், ஆழ்ந்த வாசிப்பும், பரந்த பார்வையும் கொண்ட பல முற்போக்காளர்கள் கூட கர்னாடக சங்கீத விஷயத்தில் சறுக்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அது இந்த மண்ணின் இசையல்ல, அது இந்த மக்களின் இசையல்ல, அது மேட்டுக்குடியினரின் இசை, உழைக்கும் வர்க்கத்திற்கு, பிராமணரல்லாத, இடைநிலைச்சாதியினருக்கு சம்பந்தமில்லாத ஒரு …

மண்ணின் இசையாய்… Read More »

ஜெயகாந்தன் நினைவு நாள்

ஏப்ரல் 8, எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு நாளை முன்னிட்டு டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளேன். இதில் ஜேகே குறித்த இரண்டு டாகுமெண்டரி படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. அத்துடன் ஜெயகாந்தனின் கதையுலகம் பற்றி  நான் உரையாற்றுகிறேன் இடம்  : டிஸ்கவரி புக் பேலஸ்.  கே.கே. நகர் சென்னை நேரம் : மாலை ஆறு மணி நாள் : 08- 04- 2016

பெண்ணால் முடியும்.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கோவிந்த நிகாலனி இயக்கிய Sanshodhan என்ற ஹிந்திப்படத்தைப் பார்த்தேன். NFDC & UNICEF இணைந்து தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வித்யா என்ற இளம்பெண் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து உறுப்பினராகிச் சந்திக்கும் பிரச்சனைகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் நிகாலனி. செய்திதுறையின் விளம்பரப் படம் போல நிறையக் காட்சிகள் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் மகளிர் பங்கெடுப்பு பற்றிய விளக்கமாக இருந்த போதும் ராஜஸ்தானிய கிராமிய வாழ்க்கையைக் காட்சிபடுத்தியதிலும் கல்விக்காகக் …

பெண்ணால் முடியும். Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 34

பாத்திமா – ஹைஃபா பீதர்(haifa bitar) தமிழில் விக்னேஷ் பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப்  பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை …

எனக்குப் பிடித்த கதைகள் 34 Read More »

குறைந்த ஒளியில்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ் என்னைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக  கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆலம்பரைகோட்டைக்கு அழைத்துச் சென்றார். காலை ஆறுமணிக்கு முன்பாக அங்கிருக்க வேண்டும் என இருள் கலையாத சாலையில் பயணம் செய்தோம். விடிகாலை வெளிச்சத்தில் அவரும் இரண்டு நண்பர்களும் நிறையப் புகைப்படங்களை எடுத்தார்கள். மிகச்சிறப்பான புகைப்படங்கள்.  இன்றுவரைஅந்தப் புகைப்படங்களைத் தான் எனது புத்தகங்களின் பின்னட்டையில் பயன்படுத்தி வருகிறேன் பிரபு தேர்ந்த ஒளிப்பதிவாளர். சிறந்த இலக்கிய வாசகர். உலக சினிமாவைத் தேடித்தேடி …

குறைந்த ஒளியில் Read More »

புகைப்படங்கள் 1

உயிர்மை பதிப்பகம் நடத்திய எனது மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்பிற்குரிய உதயசந்திரன் ஐஏஎஸ். இயக்குனர் வசந்தபாலன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்,  எழுத்தாளர் ஷாஜகான், ஒவியர் விஸ்வம், டாக்டர் திருநாவுக்கரசு. ஐஐடி சசி, மணிமாறன், வழக்கறிஞர் தேவகுமார் . பங்கேற்ற நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வினை படப்பிடிப்பு செய்து இணையத்தில் பகிரும் ஸ்ருதி டிவிக்கும். சிறப்பான புகைப்படங்களை எடுத்து தந்த …

புகைப்படங்கள் 1 Read More »