admin

எனக்குப் பிடித்த கதைகள் 23

கரடி வேட்டை                     லியோ டால்ஸ்டாய்- தமிழில் :எம்.ஏ.சுசீலா நாங்கள் கரடி வேட்டைக்காகச் சென்றிருந்தோம். என் கூட்டாளி ஒரு கரடியைச் சுட்டான்; ஆனால் அது ஒரு சதைக் காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பனியின் மீது இரத்தத் துளிகள் படிந்திருந்தாலும் கரடி தப்பித்துப் போய்விட்டது. அந்தக் கரடியை உடனே பின் தொடர்ந்து செல்வதா அல்லது இரண்டு மூன்று நாட்களில் அது தன் இடத்துக்குத் திரும்பியதும் பார்த்துக் கொள்வதா என்பதை முடிவு செய்வதற்காக நாங்கள் எல்லோரும் காட்டில் ஒன்று கூடிப் பேசினோம். …

எனக்குப் பிடித்த கதைகள் 23 Read More »

இந்திய வானம்

இந்த வாரம் முதல் ஆனந்தவிகடனில் புதிய தொடர் ஒன்றைத் துவங்கியிருக்கிறேன் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமான பலமுறை போய் வந்திருக்கிறேன், ஒவ்வொரு பயணமும் ஒரு படிப்பினையைத் தந்திருக்கிறது. இந்திய வானம் தொடரின் வழியாக இந்தியாவை ஒன்றிணைக்கும் புள்ளிகளை, மனிதர்களை, நிகழ்வுகளை, மகத்தான அறவுரைகளை, வழிகாட்டும் நெறிகளை, மனித மாண்புகளை, நம்பிக்கைகளை முதன்மைப்படுத்த விரும்புகிறேன் துணையெழுத்து, கதாவிசாலம், தேசாந்திரி, கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் என விகடனில் நான் எழுதிய தொடர்கள் வாசகர்களின் பேரன்பையும் பாராட்டையும் எனக்களித்தன, அந்தத் தொடர்களின் வரிசையில் …

இந்திய வானம் Read More »

பசுமை நடை 50

என் நண்பரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், எழுத்தாளருமான அ. முத்துகிருஷ்ணன் மதுரையில் பசுமை நடை என்ற அமைப்பை உருவாக்கி சுற்றுச்சூழலையும் வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களையும் பாதுகாக்க மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் பசுமை நடை மதுரையைச் சுற்றியுள்ள சமண மலைகள் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. ஆர்வம் மிக்க இளைஞர்கள் பலரும் ஒன்று சேர்ந்து இயங்கும் பசுமை நடை தமிழகத்திற்கே முன்னோடியான சுற்றுசூழல் அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பில் விருட்சத்திருவிழா, பாறைத்திருவிழா என மிகச்சிறந்த இயற்கை …

பசுமை நடை 50 Read More »

திருவண்ணாமலையில்

நண்பர் பவா. செல்லதுரை தான் படித்த சிறந்த சிறுகதைகளைப்  பகிர்ந்து கொள்ளும் வண்ணம் கதை சொல்லும் நிகழ்ச்சி ஒன்றினை திருவண்ணாமலையில் தொடர்ச்சியாக நடத்திவருகிறார். நாளை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. குவா வாடீஸ், செங்கம் சாலை ,(சேஷாத்திரி ஆசிரமம் எதிரில் ) இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்க. வருகின்ற  ஞாயிற்றுகிழமை  (ஆகஸ்ட் 9 )  அன்று மாலை திருவண்ணாமலையில் கே. வி. ஷைலஜாவின்  படைப்புகள் ஒரு பார்வை என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. ஷைலஜா இந்த ஆண்டிற்கான …

திருவண்ணாமலையில் Read More »

டிஸ்கவரி புக் பேலஸ்

டிஸ்கவரி புக் பேலஸ் நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் நூலின் இரண்டாம் பதிப்பை  வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகள். விலை ரூ 800 இதனை ஆன் லைனில் வாங்க https://discoverybookpalace.com/

வாழ்த்துகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் சார்பில் வழங்கப்படும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது  பெற்றுள்ள எழுத்தாளர் வண்ணதாசனுக்கும், மொழிபெயர்ப்பு விருது பெற்றிருக்கும் ஆர். சிவகுமாருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் •• சிற்பி இலக்கிய விருது பெற்றுள்ள கவிஞர் ரவி சுப்ரமணியன் அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும். ••

மறுபதிப்பு

மதுரை புத்தகக் கண்காட்சிக்கு மறுபதிப்பு காணும் எனது நூல்கள். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்களை உயிர்மை அரங்கிலும், ஆன்லைன் மூலமும் பெறலாம் ••

எஸ்தர் கதை உருவான விதம்

வண்ணநிலவன் பாண்டிச்சேரி ரோமன்ரோலண்ட் நூலகம் நான் வேலை பார்த்து வந்த புதுவைக் குரல் அலுவலகத்தின் எதிரேதான் இருந்தது. ரோமன் ரோலண்ட் நூலகம் ஒரு புஸ்தகச் சுரங்கம். பேர்லாகர் க்விஸ்ட்டின் ‘அன்புவழி’ போன்ற மகத்தான உலக இலக்கியங்களை எல்லாம் அந்த நூலகத்திலிருந்து எடுத்துச் சென்று படித்தேன். காரை சிபி, சில பிரெஞ்சு நாவல்களின் ஆங்கிலமொழி பெயர்ப்புகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பாண்டிச்சேரியில் இருந்த நாட்களில் உலக இலக்கியங்களில் திளைத்தேன். அவை என் இலக்கிய அறிவைப் பட்டை தீட்டின.  இலக்கியக் …

எஸ்தர் கதை உருவான விதம் Read More »

அஞ்சலி

உலக அரங்கில் தமிழர்களுக்குப் பெருமை தேடி தந்த சிறந்த அறிவியலாளரும், உயர்ந்த பண்பாளரும் ,முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாமுக்கு என் அஞ்சலிகள். டாக்டர் கலாம் இளைஞர்கள் மீது  கொண்டிருந்த நம்பிக்கை அளப்பரியது. கல்வி குறித்துத் தன் வாழ்நாள் முழுவதும் கலாம் பேசிக் கொண்டேயிருந்தார். அந்தக் கனவை நினைவேற்றுவது அனைவரின் கடமை, கலாம் அவர்கள் புவியிலிருந்து மறைந்தாலும் அவர் உருவாக்கிய கனவுகள் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கும். •••

எனக்குப் பிடித்த கதைகள் 22

ஹாட் ட்ரிக்              எட்கர் கேரத் (இஸ்ரேல்) தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன் ”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” ஆ, இதோ வருகிறது வெளியே. மாயாஜால நிகழ்ச்சியின் கடைசி வித்தை. தொப்பியில் இருந்து ஒரு முயலை வெளியே இழுக்கிறேன். எப்பவுமே நிகழ்ச்சி முடிகிற போது இதைச் செய்வேன், ஏனென்றால் குழந்தைகளுக்கு பிராணிகளைப் பிடிக்கும். குறைந்தபட்சம் நான் குழந்தையாய் இருந்தபோது பிராணிகளிடம் நான் பிரியம் வைத்திருந்தேன். நிகழ்ச்சி இந்த விதமாய் முடிந்தால் பளிச்னு இருக்கும், அப்படியே முயலை …

எனக்குப் பிடித்த கதைகள் 22 Read More »