admin

மெல்லிசை மன்னர்

” இந்த உலகத்தில் எதையாவது மாற்றவேண்டும் என்றால் அது இசையால் மட்டுமே சாத்தியமாகும்.”  – ஜிமி ஹென்ரிக்ஸ் காலத்தால் அழியாத  தமிழ்திரைப்பாடல்களை அள்ளி வழங்கிய மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன் காலமானார். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

பஸ்டர் கீட்டனின் நகைச்சுவை

ஹாலிவுட்டின் மௌனப்பட யுகத்தில் சார்லி சாப்ளினுக்கு இணையாக இருந்த மகத்தான கலைஞன் பஸ்டர் கீட்டன்.(Buster Keaton) அவரது நகைச்சுவை உயர்தரமானது. தி ஜெனரல் என்ற கீட்டனின் படத்தை உலகின் மிகச்சிறந்த படமாகச் சொல்கிறார் ஆர்சன் வெல்ஸ் கீட்டனின் நகைச்சுவையை ரசிக்க : Winds of Change https://youtu.be/yjV9tobFjLQ

எனக்குப் பிடித்த கதைகள் 21

சிறுவர் விளையாட்டு – வில்லி ஸோரன்ஸன் (டேனிஷ்) தமிழில்: நகுலன் ஒரே தாய் தகப்பன்மாருக்குப் பிறந்த விசேஷத்தினால் சகோதரர்களான அவ்விரு சிறுவர்கள், அதே முறையில் பொதுவாக ஒரு மாமனையும் பெற்றிருந்தார்கள். சிறுவர்களுடைய மாமனுக்கு ஒரு காலை முறிக்கவேண்டிய அவசியமேற்பட்டது. இதனால் அவ்விரு சிறுவர்களும், தங்கள் மாமனைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். சிறுவர்களுடைய பரபரப்பைச் சாந்தப்படுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்கு இது விஷயமாக விஞ்ஞான ரீதியாக விஷயத்தை விளக்கிக்காட்ட வேண்டுமென்று நிச்சயித்தார்கள். அதற்காக அவர்கள் சிறுவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள். அவர்களுடைய …

எனக்குப் பிடித்த கதைகள் 21 Read More »

திங்கள்

எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் சக்திவேல் எனது கதை ஒன்றைக் குறும்படமாக இயக்கியுள்ளார். திங்கள் என்ற இக்குறும்படத்திற்கான கதை வசனத்தை நான் எழுதியிருக்கிறேன். இயக்குனர் அருண்மொழி முக்கியக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். https://youtu.be/R5ysOHh3WqI

வங்கப்பஞ்சம்

1943. வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான பஞ்சங்களில் ஒன்று என விவரிக்கபடும் அதில் முப்பது லட்சத்திற்கும் மேல் மக்கள் இறந்து போனார்கள், பஞ்சம் பிழைக்க வங்களா கிராமப்புறங்களிலிருந்து கல்கத்தாவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தார்கள், உணவு கிடைக்காமல் பட்டினியில் இறந்து போனவர்களின் உடல்கள் கல்கத்தா வீதிகளில் இறைந்து கிடந்தன, அந்தப் பஞ்சத்தை விளக்கும் ஆவணப்படத்தின் ஒரு பகுதியிது. பிமல்ராய் இயக்கியது https://youtu.be/QI6qg1ERmGE

எனக்குப் பிடித்த கதைகள் 20

விருந்தாளி -ஆல்பெர் காம்யு தமிழில்: க.நா.சுப்ரமண்யம் சரிவான பாதையிலே தூரத்தில் தன்னை நோக்கி ஏறி வந்த இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றார் ஆசிரியர். ஒருவன் குதிரை மேல் வந்தான்; மற்றொருவன் நடந்து வந்தான். இன்னும் செங்குத்தான குன்றை அவர்கள் அடையவில்லை. அதைத் தாண்டியே அவர்கள் பள்ளிக்கூடத்தை அடைய முடியும். ஏறி வருவது சிரமமான காரியம்தான். பனி வேறு பெய்ததால் சற்று மெதுவாகவே வந்தனர் அவர்கள். மனித சஞ்சாரமேயற்ற சரிவு அது. காலடியிலிருந்த கற்களில் குதிரை அடிக்கடி இடறிற்று. காதில் …

எனக்குப் பிடித்த கதைகள் 20 Read More »

யுத்த ரகசியம்

இறந்து போன ஒரு மனிதனால் ஒரு யுத்தத்தின் போக்கினை திசைதிருப்ப முடியுமா ? முடியும் என்கிறது The Man Who Never Was திரைப்படம்.நாவலாக வெளிவந்து வெற்றிபெற்ற கதையைப்  படமாக்கியிருக்கிறார்கள். 1956ல்  வெளியான இப்படத்தை Ronald Neame இயக்கியுள்ளார். சமீபத்தில் பார்த்த மிக சுவாரஸ்யமான திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் போது நேசப்படை எங்கே தனது அடுத்த தாக்குதலை நடத்தப் போகிறது எனக் கவனமாக உளவு பார்க்கிறது நாஜி ராணுவம். அதை திசைதிருப்புதவற்காக பிரிட்டீஷ் ராணுவம் இறந்த மனிதனின் …

யுத்த ரகசியம் Read More »

ஆசிரியர்களுக்கான இணையதளம்

“டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா” என்ற  இணையதளத்தை பார்வையிட்டேன்,  மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், கல்விக்காக பணியாற்றும் அனைவருக்கும் இந்த இணையம்  பெரிதும் உதவக்கூடும் இந்த இணையதளம் தேசிய அறிவுக் கழகம் (National Knowledge Commission) மற்றும் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் (AzimPremji Foundation) ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியாகும். ஆசிரியர்களுக்குப் பலவிதமான கற்றல்-கற்பித்தல் கருவூலங்களை அளிப்பதன் மூலம், அவர்களின் பாடம் குறித்த அனுபவ அறிவையும், அதனை எவ்வாறு வகுப்பறையில் கற்பிக்க வேண்டும் என்பதையும் கற்பித்து திறன்மிக்கவர்களாக …

ஆசிரியர்களுக்கான இணையதளம் Read More »

என்ன சொல்கிறாய் சுடரே

(உயிர்மை இதழில் வெளியான எனது புதிய சிறுகதை) •• ஒவ்வொரு இரவும் அந்த மனிதன் வீடு திரும்ப நடக்கும் போது அவனது முன்னால் சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி ஒன்று தனியே எரிந்து கொண்டு போனது. உண்மையில் நான் சரியாகச் சொல்கிறேனா எனச் சந்தேகமாக உள்ளது, அந்த மனிதன் மெழுகுவர்த்தியை கையில் பிடித்திருக்கவில்லை, உடன் யாரும் வரவுமில்லை, ஆனால் ஒற்றை மெழுகுவர்த்திக் காற்றில் மிதந்தபடியே அவன் முன்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது, விசித்திரமாகயிருக்கிறதில்லை, ஆனால் அது தான் நிஜம். பிறந்தநாள் …

என்ன சொல்கிறாய் சுடரே Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 19

நகங்களைச் சேகரிப்பவன் –   ஜோரன் ஜிவ்கோவிக் தமிழாக்கம் – க.ரகுநாதன் திரு. ப்ரோஸ்கா வெட்டப்பட்ட தனது விரல் நகங்களை சேகரித்து வந்தார். தனது எட்டாவது வயதில் முதல் முதலாக தானாகவே விரல் நகத்தை வெட்டியதிலிருந்தே அவற்றை சேகரிக்கத் துவங்கிவிட்டார். அம்மாவின் உதவி இல்லாமலும் விரல்களைக் காயப்படுத்திக் கொள்ளாமலும் தானே நகங்களை வெட்டியதை நினைத்து அன்று அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த வெற்றியின் நினைவாக அந்த பத்து குட்டி அரிவாள்கள் போன்ற நகங்களை சேகரித்து வைக்க முடிவு செய்தார்.  அம்மாவுக்குத் …

எனக்குப் பிடித்த கதைகள் 19 Read More »