admin

நிகழ்ச்சிகள்

தஞ்சாவூரில் நடைபெறுகின்ற புத்தகத்திருவிழாவில் 19.06.2015 வெள்ளிக்கிழமை அன்று  மகாகவி தாகூர் குறித்து உரையாற்றுகிறேன். இடம்  அரண்மனை வளாகம். தஞ்சாவூர் நேரம் மாலை 6 மணி •• சென்னையில் நடைபெறும் எஸ்பிஒஏ கல்வி, கலை, சூழல் விழா 2015ல் மாற்றுக்கல்வி குறித்து 21.06.15 ஞாயிறு மதியம் 2 மணிக்கு உரையாற்றுகிறேன், இடம் எஸ்பிஒஏ அரங்கம். அண்ணாநகர் •• எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் குற்றபரம்பரை நாவல் வெளியீடு வருகின்ற 21.06.15 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற உள்ளது. …

நிகழ்ச்சிகள் Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 18

பழுப்புக் காலை – ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்தராஜ் கால்களை ஓய்வாக நீட்டிக்கொண்டு, காப்பியைப் பருகியபடி மனத்தில் தோன்றியதையெல்லாம் சார்லியும் நானும் நிதானமாகப் பகிர்ந்துகொண்டிருந்தோம். மெதுவாக நேரம் கடந்துகொண்டிருக்கச் சில அருமையான கணங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். திடீரென, தனது நாயைத் தான் கொல்ல வேண்டி வரும் என அவன் சொன்னான். எனக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டாலும் வேறு உணர்வு எதுவும் எழவில்லை. என்னைப் பொறுத்தளவில் பதினைந்து வருடங்கள் – இது நீண்ட காலம்தான்- வாழ்ந்துவிட்ட ஒரு நாய், நோயுற்றுச் சிரமப்படுவது …

எனக்குப் பிடித்த கதைகள் 18 Read More »

காக்காமுட்டை / கலந்துரையாடல்

காக்காமுட்டை மிகச்சிறந்த திரைப்படம். நேற்றிரவு இயக்குநர் மணிகண்டனைச் சந்தித்து எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பாக  இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உடன் மணிகண்டன்  என் வீட்டிற்கு வந்து புதிய திரைப்பட முயற்சிகள் குறித்து உரையாடியது நினைவிருக்கிறது. அப்போது மணிகண்டன் தனது விண்ட் என்ற குறும்படத்தின் டிவிடியை கொடுத்து பார்க்கும்படி சொன்னார். மிகச்சிறந்த குறும்படமது. இன்று உலகத்தரமிக்க  திரைப்படம் ஒன்றை இயக்கி பெரும் வெற்றியைத் தொட்டிருக்கிறார். பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டு பாராட்டுகளை …

காக்காமுட்டை / கலந்துரையாடல் Read More »

உருவாக்கம்

தற்செயலாக எனது எழுத்துகளை வாசிக்கத் துவங்கி அதிலிருந்து தன்னை ஒரு கவிஞரான வளர்த்துக் கொண்ட கவிஞர் மாதவன் அதிகன் குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

எனக்குப் பிடித்த கதைகள் 17

மேசை என்றால் மேசை ஜெர்மன்மூலம் : பீட்டர் பிக்ஃசெல் (Peter Bichsel) தமிழில்: ந.சுசீந்திரன் நான் ஒரு முதியவனைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இனி எந்த வார்த்தையுமே பேச மாட்டாத, சிரிக்கவும் கோபப் படவும் கூட சோம்பற் படும் தூங்கிப்போன முகங்கொண்ட ஒரு முதியவனைப் பற்றி. அந்தச் சிறு நகரின் ஒரு தெரு முனைச் சந்திக்கருகில் அவன் வீடு. அவனைப் பற்றி இன்னும் மேலதிகமாகச் சொல்லிக் கொண்டு போவதால் ஆகப்போவது எதுவுமில்லை. மற்றவர்களை விட அவனொன்றும் வித்தியாசமான …

எனக்குப் பிடித்த கதைகள் 17 Read More »

கதை படித்தல்

வருகின்ற சனிக்கிழமை 13.06.2015 மாலை ஐந்தரை மணிக்கு சாகித்ய அகாதமி சார்பில் நடைபெறும் கதாசந்தி நிகழ்வில் பசித்த மிருகம் என்ற எனது புதிய சிறுகதையை வாசிக்க இருக்கிறேன். கதை வாசித்தலைத் தொடர்ந்து இக்கதை உருவான விதம் குறித்த உரையும் எனது சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது நிகழ்ச்சி நடக்குமிடம் : பாரதீய வித்யாபவன். சிற்றரங்கு. மயிலாப்பூர்.  சென்னை நேரம் :  5:30 pm நாள்:  13.06.2015 சனிக்கிழமை. (அரங்கம் மயிலாப்பூர் கபாலி கோவில் அருகில், …

கதை படித்தல் Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 16

அஷ்டமாசித்தி  – ஜப்பானிய பழங்கதை தமிழில் : புதுமைப்பித்தன் (யாஸோ – கிதான் என்ற புராதன ஜப்பானிய கிரந்தத்திலிருந்து எடுக்கப்பட்டது.) டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள்ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந்து பௌத்த சித்திரங்களைக் காட்டியும் தர்மத்தை ஜனங்களிடை உபதேசித்தும் பிழைத்து வந்தான். தினம் தினம் அவன் கியோன் ஆலயத்தின் பிரகாரத்தில் உள்ள பெரிய மரத்தில் ஒரு …

எனக்குப் பிடித்த கதைகள் 16 Read More »

மின்னும் சிவப்புப் பூக்கள்

காற்றில் பனித் துகள்கள் பறந்து கொண்டிருக்கின்றன.  சுழன்று ஆடும் மரக்குதிரையின் மீது பனி பொழிகிறது. நான்கு வயது பாங் குயிங் அதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறான் இப்படிதான் Little Red Flowers திரைப்படம் துவங்குகிறது. கிண்டர் கார்டன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உலகைச் சித்தரிக்கும் அற்புதமான படமது. இத்தனை குழந்தைகளை எப்படி நடிக்க வைத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் பாங் குயிங்காக நடித்துள்ள சிறுவன் அசத்துகிறான். சீனத்திரைப்படங்கள் என்றாலே மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள் அல்லது வரலாற்றையும் …

மின்னும் சிவப்புப் பூக்கள் Read More »