உதவி தேவை
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் ஒரு உதவி தேவைப்படுகிறது. டப்ளினில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளவும் எனது மின்னஞ்சல் முகவரி writerramki@gmail.com
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் ஒரு உதவி தேவைப்படுகிறது. டப்ளினில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளவும் எனது மின்னஞ்சல் முகவரி writerramki@gmail.com
தேவதச்சனின் முழுக்கவிதை தொகுப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. இதில் 2016 வரையிலான அவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 8ம் தேதி இந்த நூல் வெளியாகிறது. இதனை சென்னை புத்தகத் திருவிழால் உள்ள தேசாந்திரி பதிப்பக அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். கெட்டி அட்டைப் பதிப்பாக வெளியாகிறது. கவிதை என்பது எதிரெதிர் உண்மைகளின் தழுவல் என்கிறார் கவிஞர் ஆக்டேவியோ பாஸ் அதனைத் தேவதச்சனின் கவிதைகளை வாசிக்கும் போது நன்றாக உணர முடிகிறது. தண்ணீரைப் போல நிசப்தமாக, ரகசியமாக, தனக்கான பாதையைத் …
அனைவருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். சென்னைப் புத்தகத் திருவிழாவில் நேற்று நிறைய கூட்டம். பலரும் எனக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. புத்தகத் திருவிழாவில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் கடையில் வங்கச் சிறுகதைகள். ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி போன்ற சிறந்த நூல்கள் கிடைக்கின்றன. பறவையியலாளர் சாலிம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூல் இவான் துர்கனேவின் தந்தையரும் தனயர்களும் நாவலின் சிறப்புப் பதிப்பை நூல் வனம் வெளியிட்டுள்ளது. …
சென்னை புத்தகத் திருவிழாவில் ஜனவரி 3 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கதைகளிடம் கற்போம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். புத்தகத் திருவிழா அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. தேசாந்திரி பதிப்பகம் சென்னைப் புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைத்துள்ளது. ஔவையார் பாதை எனும் ஆறாவது நுழைவாயில் வழியாக வந்தால் அரங்கு எண் 334 மற்றும் 335.
நண்பர் கார்த்திகைப் பாண்டியன் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள பெட்ரோ பராமோ நாவலின் அறிமுகக் கூட்டம் ஜனவரி 6 திங்கள்கிழமை மாலை சென்னைப் புத்தகத் திருவிழா அரங்கிலுள்ள சிற்றரங்கில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். ரூல்போவின் பெட்ரோ பரோமா மற்றும் எரியும் சமவெளி இரண்டு நூல்களையும் எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிமுக நிகழ்வில் பா. வெங்கடேசன் எரியும் சமவெளி சிறுகதை தொகுதி குறித்து உரை நிகழ்த்துகிறார். சுபத்ரா இந்த நூலை மொழியாக்கம் செய்துள்ளார்
சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைக்க கூடிய சில அரிய புத்தகங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ஜிலானி பானு எழுதிய கவிதாலயம் நாவல் மிகச்சிறப்பானது. ஒரு கூட்டுக்குடும்பத்தின் கதையை சுதந்திரப் போராட்ட கால வரலாற்றின் பின்புலத்தில் அற்புதமாக எழுதியிருக்கிறார். இந்த நூலின் குறைவான பிரதிகள் நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்தில் கிடைக்கின்றன. இந்தப் பதிப்பு தீர்ந்துவிட்டால் அவர்கள் மறுபதிப்பு வெளியிட பல ஆண்டுகள் ஆகும். பதேர் பாஞ்சாலி நாவலை எழுதிய விபூதிபூஷண் எழுதிய நாவல். நீண்ட காலத்திற்குப் பிறகு …
நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் குறித்து இசைவிமர்சகர், ஆய்வாளர் லலிதா ராம் எழுதிய காருகுறிச்சியைத் தேடி நூலின் வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது. ( டிசம்பர் 28 ). சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இசையுலக இளவரசர் ஜி.என்.பி, பேரலையாய் ஒரு மென் ஷட்கம் என இரண்டு முக்கிய நூல்களை லலிதா ராம் எழுதியிருக்கிறார். நான் அவரது கட்டுரைகளை விரும்பி வாசிக்கக் கூடியவன். இசையின் வரலாறு குறித்தும் நிகரற்ற …
டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. நிகழ்விற்குத் தலைமேற்று சிறப்பித்தார் தொழிலதிபர் அம்பாள் ஆர் முத்துமணி. அவர் தேர்ந்த இலக்கிய வாசகர். என் மீது அன்பு கொண்ட நண்பர். நிகழ்விற்கு காளிமார்க் நிறுவன உரிமையாளர் தனுஷ்கோடி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார். கவளம் நூல் குறித்து சேரலாதன் சிறப்பான உரையை நிகழ்த்தினார். சிறுகதையின் பல்வேறு முனைகளைத் தொட்டு பேசியது …
நாளை மாலை எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. இதில் எமர்சன் பற்றி சிறப்புரை நிகழ்த்துகிறேன் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
48வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எனது அனைத்து புத்தகங்களும் அங்கே கிடைக்கும். எண் 334 மற்றும் 335