admin

போர்ஹெஸின் சித்திரக்கதை

போர்ஹெஸின் வாழ்க்கையை விவரிக்கும் புதிய கிராஃபிக் நாவல் “Borges: The Infinite Labyrinth,” ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ளது. இதற்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் நிக்கோலஸ் காஸ்டெல். கதைவடிவத்தை எழுதியிருப்பவர் ஆஸ்கார் பாண்டோஜோ. போர்ஹெஸின் வாழ்வைப் பத்து சிறிய அத்தியாயங்களில் விவரிக்கிறது இந்தக் கிராபிக் நாவல். இதன் ஆங்கில வடிவம் இன்னமும் வெளியாகவில்லை. இணையத்தில் இதன் சில பக்கங்கள் காணக் கிடைக்கிறது. போர்ஹெஸ் நூற்றாண்டு விழாவின் போது அவரைப் பற்றிய சிறிய அறிமுக நூலை எழுதினேன். அதற்கான புத்தகங்களைத் தேடி …

போர்ஹெஸின் சித்திரக்கதை Read More »

மதுரைப் புத்தகத் திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தின் உள் அரங்கில் வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 155. எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும் செப்டம்பர் 14 சனிக்கிழமை மற்றும் 15 ஞாயிறு இரண்டு நாட்களும் மதுரையில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்

அரவான் நாடகம்

எனது அரவான் நாடகத்தை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் தீபக் குமார். இளம் நாடக நடிகரான இவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். டிசம்பரில் மும்பையில் நடைபெறவுள்ள நாடகவிழாவில் இதனை நிகழ்த்த இருக்கிறார். அரவான் நாடகம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதனை ஒரியண்ட் லாங்மேன் வெளியிட்டிருக்கிறார்கள்.

இரவின் உருவம்

காலண்டரில் உள்ள நாட்களையும் கடிகாரம் காட்டும் நேரத்தையும் நம்பியே உலகம் இயங்குகிறது. ஆனால் கலைஞர்கள் நாளையும் நேரத்தையும் தனது கற்பனையின் வழியே மாற்றிக் கொள்கிறார்கள் புதிய தோற்றம் கொள்ளச் செய்கிறார்கள். தங்கள் விருப்பம் போலக் கலைத்துப் போட்டு அனுபவிக்கிறார்கள். கடந்தகாலம் என்ற சிறுசொல் எவ்வளவு பெரிய வாழ்க்கையை உள்ளடக்கியது என உலகம் உணரவில்லை. ஆனால் கலைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். காலம் தான் கலைஞனின் முதன்மையான கச்சாப்பொருள். கண்ணாடியில் நாம் காணுவது நமது தோற்றத்தை மட்டுமில்லை. வயதையும் தான் என்று …

இரவின் உருவம் Read More »

அனாவின் வகுப்பறை

ஹங்கேரியின் சிறிய நகரமென்றில் பள்ளி ஆசிரியராக இருக்கிறாள் அனா பாஷ். 150 வருடப் பாரம்பரியம் கொண்டது அப்பள்ளி. அங்கே இலக்கியம் பயிற்றுவிக்கும் அவளுக்கு நாடகம், கவிதையில் ஆர்வம் அதிகம். தனது வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் போது உறுதுணையாக உள்ள திரைப்படங்கள் மற்றும் பாடல்களையும் அறிமுகப்படுத்துகிறாள். பதின்ம வயதினரின் புரிதல்களை விரிவுபடுத்துவதிலும், ஆளுமையை வளர்ப்பதிலும் தனித்துவமிக்க ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறாள். ஒரு முறை தனது வகுப்பறையில் புகழ்பெற்ற கவிஞர் ஆர்தர் ரைம்போவின் கவிதைகளை அறிமுகம் செய்யும் அனா …

அனாவின் வகுப்பறை Read More »

மகிழ்ச்சியின் இசைத்தட்டு

புதிய சிறுகதை. செப்டம்பர் 1 , 2024 புதன்கிழமையோடு ஜெயசங்கரி அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகிறாள். அதற்கான பிரிவு உபசார விழா விழாவை எப்படி நடத்துவது என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். விழாவைப் புதுமையாக நடத்த வேண்டும் என்றாள் விமலா. ஆனால் என்ன புதுமை. அதை எப்படிச் செயல்படுத்துவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஜெயசங்கரி பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று வைக்கலாம் என்ற யோசனையைச் சொன்னது மதுரவன். அவரே அலுவலக விழாக்களில் எடுக்கபட்ட பழைய புகைப்படங்களைத் தேடி …

மகிழ்ச்சியின் இசைத்தட்டு Read More »

திருடன் படித்த புத்தகம்

சில நாட்களுக்கு முன்பு ரோமில் ஆள் இல்லாத ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு வெளியேறும் போது புத்தகம் ஒன்றைக் காணுகிறான். இத்தாலிய எழுத்தாளர் Giovanni Nucci எழுதிய The Gods at Six O’Clock என்ற புத்தகத்தை வாசிக்கத் துவங்கி தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருக்கவே வீட்டின் உரிமையாளர் வந்துவிடுகிறார். தப்பியோட முயன்றவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் தனது குற்றச்செயலை மறந்து திருடன் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்த நிகழ்வை இணைய …

திருடன் படித்த புத்தகம் Read More »

சந்தையின் இரவுக்காட்சி

பெல்ஜிய ஓவியர்  பெட்ரஸ் வான் ஷெண்டல் (Petrus van Schendel) வரைந்த சந்தையின் இரவுக்காட்சி ஓவியங்களில் எரியும் மெழுகுவர்த்திகளுக்கு நடுவே காய்கறி, மீன், மற்றும் பழங்களின் விற்பனை நடக்கிறது. ஒளி எப்போதும் கருணையின், அன்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது. புனிதர்களின் கையிலிருந்து ஒளி பிறக்கும் காட்சியை ஓவியங்களில் கண்டிருக்கிறேன். ஒளி பேதமறியாதது. ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்கு புலப்படவும் புரியவும் வைக்கிறது. ஒளிரும் பொருட்களை, ஒளி படும் விதத்தை யாவரும் விரும்புகிறார்கள். எல்லா சமயங்களும் ஒளியைப் புனிதமாகவே கருதுகின்றன. …

சந்தையின் இரவுக்காட்சி Read More »

உடலும் உணர்வும்

சீன எழுத்தாளரான ஷாங் சியான் லியாங்கின் இரண்டு கதைகளை உடலும் உணர்வும் என்ற பெயரில் கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார். சவுத் ஆசியன் புக்ஸ் 1992ல் வெளியிட்டுள்ளது. இதில் கைப்பு ஊற்று என்றொரு சிறுகதையிருக்கிறது. அக்கதை லாரி ஒட்டுநரால் சொல்லப்படுகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர் பாலைவனத்தினைக் கடந்து செல்லும் பயணத்தின் போது லாரியில் பயணிக்கிறார். அப்போது லாரியின் ஒட்டுநர் தனது கடந்தகாலக் கதையைச் சொல்லத் துவங்குகிறார். நீண்ட தூரப் பயணங்களின் போது லாரி ஒட்டுநர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்குவதைப் பற்றியும் அவர்கள் …

உடலும் உணர்வும் Read More »

இசையும் வெளிச்சமும்

எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத படம் சத்யஜித்ரேயின் ஜல்சாகர் (Jalsaghar) . அவரது திரை இதிகாசமாகவே இப் படத்தைக் கருதுகிறேன். ஜல்சாகரில் வரும் இசைக்கூடத்தில் தொங்கும் சரவிளக்குகள் நிலப்பிரபுத்துவத்தின் கடைசி அடையாளமாக விளங்குகின்றன. பணியாளர்களில் ஒருவரான அனந்தா அந்த விளக்குகளைச் சுத்தம் செய்து ஏற்றுவதை விருப்பத்துடன் செய்கிறார். அவரது சிரிப்பு அலாதியானது. ஜமீன்தார் பிஸ்வாம்பரர் இசையினையும் வெளிச்சத்தையும் விரும்புகிறார். இசைக்கூடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டவுடன் அது வீட்டின் பகுதியாக இல்லாமல் கலையரங்கமாக மாறிவிடுகிறது. இசைகேட்பதற்காக வரும் பார்வையாளர்கள் …

இசையும் வெளிச்சமும் Read More »