admin

எடித் ஹாமில்டன்

அமெரிக்கன் கிளாசிசிஸ்ட்: தி லைஃப் அண்ட் லவ்ஸ் ஆஃப் எடித் ஹாமில்டன் என்ற புத்தகத்தை விக்டோரியா ஹவுஸ்மேன் எழுதியிருக்கிறார். இது எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹாமில்டனின் பால்ய நினைவுகள், அவரது பெற்றோர். வளர்ந்த சூழல் மற்றும் கிரேக்க இலக்கியங்கள், லத்தீன் மொழி மீது கொண்ட ஆர்வம் குறித்து விரிவாகப் பேசுகிறது குடும்பச் சூழல் காரணமாகப் படித்து முடித்தவுடனே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது தந்தை ஒரு குடிகாரர். தாயும் சகோதரியும் நோயாளிகள். ஆசிரியராகப் பணியைத் துவங்கி …

எடித் ஹாமில்டன் Read More »

எழுத்தரின் சிற்பம்

பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த எழுத்தர் சிற்பம் ஒன்றுள்ளது. இது சுண்ணாம்புக்கல்லால் ஆனது. எகிப்தில் உள்ள சக்காராவில் பிரெஞ்சு அகழ்வாய்வாளர் அகஸ்டே மரியட் டால் இந்தச் சிற்பம் கண்டறியப்பட்டது. “சீட்டட் ஸ்க்ரைப்” என்று அழைக்கப்படும் இந்த எகிப்திய வண்ணச்சிற்பம் கல்வியறிவு மற்றும் எழுத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது இந்த எழுத்தரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்தச் சிலையை உருவாக்கிய கலைஞரின் பெயரும் தெரியவில்லை பெரும்பாலான எகிப்திய சிற்பங்கள் நிற்கும் நிலையில் சித்தரிக்கபடுவதே வழக்கம். ஆனால் …

எழுத்தரின் சிற்பம் Read More »

பயனற்றதன் பயன்கள்

பெல்ஜிய-ஆஸ்திரேலிய எழுத்தாளரான சைமன் லீஸ் சீன கலை மற்றும் இலக்கியத்தில் புகழ்பெற்ற அறிஞர். அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவரது கலை, இலக்கியம், வரலாறு பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே The Hall of Uselessness: Collected Essays சீன பண்பாட்டிலிருந்து அவர் கற்றுக் கொண்ட உண்மையின் அடையாளமாகவே இந்த நூலின் தலைப்பும் வைக்கபட்டிருக்கிறது. பயனற்றதன் பயன்பாடு பற்றிய பார்வைகளை முன்வைக்கிறார். பிரெஞ்சு இலக்கியம் குறித்த கட்டுரைகளில் பால்சாக் பற்றியது சிறப்பாகவுள்ளது. பால்சாக்கின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்தவிரிவான …

பயனற்றதன் பயன்கள் Read More »

மகிழ்ச்சியின் முகவரி

கிங் லியரின் மனைவி பெயரென்ன.?  ஷேக்ஸ்பியர் குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு நாவலில் அவள் பெயர் பெர்த் என்று குறிப்பிடப்படுகிறது. ஒருவேளை கிங் லியரின் மனைவி இருந்திருந்தால் லியரின் கேள்வியை முட்டாள்தனமானது என்று சொல்லித் தடுத்திருப்பாள். தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று மகளிடம் தந்தை கேட்பது போல தாய் ஒரு போதும் கேட்பதில்லை. அதற்கான தேவையுமில்லை.  அம்மாவிற்கும் மகளுக்குமான உறவு என்பது வயது வளர வளர மாறிக் கொண்டேயிருக்கிறது. மகள் ஒரு குழந்தைக்கு தாயாக மாறியதும் தனது அன்னையிடம் …

மகிழ்ச்சியின் முகவரி Read More »

பூக்கும் பிளம்

சீன ஓவியங்கள் மற்றும் கவிதைகளுக்கான வழிகாட்டி நூலாகக் கருதப்படுகிறது Sung Po-jen எழுதிய Guide to Capturing a Plum Blossom. இந்த நூல் கி.பி 1238 இல் வெளியிடப்பட்டது, இது உலகின் முதல் அச்சிடப்பட்ட கலைப் புத்தகமாகும். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அச்சில் இல்லாத இந்த நூலைத் தேடிக்கண்டுபிடித்து மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார் ரெட் பைன். இவர் சீன செவ்வியல் கவிதைகள் மற்றும் ஞான நூல்களை மொழியாக்கம் செய்துவருபவர் பழைய புத்தகங்களை விற்கும் ஹாங்ச்சோவில் …

பூக்கும் பிளம் Read More »

ஸ்தானிஸ்லாவ் திகாத்

போலந்து எழுத்தாளர் ஸ்தானிஸ்லாவ் திகாத் (Stanisław Dygat) எழுதிய தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற சிறுகதையைக் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார். கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில் இக்கதை வெளியாகியுள்ளது. இந்தக் கதை வெளியான நாட்களிலே தஸ்தாயெவ்ஸ்கியை இவ்வளவு வியந்து எழுதியுள்ள திகாத் வேறு என்ன சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி ஏதேனும் கட்டுரை அல்லது நூல் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. An Unknown Fragment from Dostoevsky’s Life என்ற திகாத்தின் …

ஸ்தானிஸ்லாவ் திகாத் Read More »

தொடர் பயணங்கள்

கடந்த மாதம் 25 முதல் அக்டோபர் 10 வரை இடைவிடாத பயணம். அன்றாடம் இருநூறு முதல் நானூறு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்திருக்கிறேன். அதுவும் மலேசியா பயணம் முடித்துவிட்டுச் சென்னை திரும்பிய மறுநாள் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளுக்காகப் பயணம். பயணத்தின் ஊடே மழையில் நனைந்து காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. ஆயினும் ஒத்துக் கொண்ட நிகழ்வுகளைத் தவிர்க்க இயலவில்லை. விருதுநகரில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்ட போது முழுமையான ஓய்வு தான் உங்களுக்கான மருந்து …

தொடர் பயணங்கள் Read More »

நிசார் கப்பானியின் காதல் கவிதைகள்

கவிஞர் நிசார் கப்பானியின் (Nizar Qabbani) அராபிய காதல்கவிதைகள் தொகுப்பினை வாசித்தேன். மிகச்சிறந்த காதல்கவிதைகள். காதலிப்பவர்களுக்கு வழக்கிலுள்ள சொற்கள் போதுமானதாகயில்லை. புதிய சொற்களை தேடுவதை விடவும் சொற்கள் இல்லாமல் காதலிக்க முயலுகிறார்கள் என்கிறார் கப்பானி. இவரது கவிதைகள் எளிமையானவை. ஆனால் வியப்பூட்டுபவை. காதலின் பித்து கவிதையாக மலருகிறது. குறிப்பாக முட்டாள் பெண்ணின் கடிதம் போன்ற கவிதையில் வரலாற்று நினைவுகளின் வழியே காதலைப் பேசுகிறார். விளக்கை விடவும் வெளிச்சம் முக்கியம், குறிப்பேடினை விடவும் அதில் எழுதப்பட்ட கவிதை முக்கியம், …

நிசார் கப்பானியின் காதல் கவிதைகள் Read More »

இளையராஜா திரைப்படம்.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார்.  திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  அதைத் தொடர்ந்து  திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன். இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் …

இளையராஜா திரைப்படம். Read More »