காதலின் விதி
இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்ட வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்டு விற்பனை பொருளாக மாறியது. அதிலும் கடந்த நூறு ஆண்டுகளில் தான் வீடு தோறும் காலண்டர் வாங்கி வைத்திருப்பது நடந்தேறியது. குறிப்பாக ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பங்களிப்பு மற்றும் கொண்டைய ராஜுவும் அவரது சீடர்களும் வரைந்த சாமிபடங்கள் பற்றிய ஆய்வின் மூலம் காலண்டர் கலையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் வெளிப்படுத்தபடுகின்றன. 1954 ஆம் ஆண்டில் …









