விருந்தாளிகளின் தலையணை
ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவர்களது வீடு மிகச்சிறியது. இரண்டே அறைகள். ஆனாலும் அவர்களோடு நான் தங்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு சொன்னதால் இரவு தங்கியிருந்தேன். இரவு உணவு முடிந்து பேசிக் கொண்டிருந்தோம். படுப்பதற்கான பாய் தலையணைகள் கொண்டு வந்து தந்தார் நண்பரின் மனைவி. எங்கள் பேச்சு ஹாலில் சுவாரஸ்யமாக நீண்டு கொண்டிருந்தது. இடையில் தண்ணீர் குடிக்க உள்ளே எழுந்து போனபோது நண்பரின் கடைசிமகள் உறங்காமல் உட்கார்ந்தபடியே இருந்தாள். ஐந்து வயதிருக்கும். …