admin

என் உரை

9.7.2010 வெள்ளிக்கிழமை அன்று உயிர்மை நடத்திய இந்திரா பார்த்தசாரதி் அவர்களுக்கு நடந்த விழாவில் நான் பேசிய உரையை நண்பர் பிரபு ராமகிருஷ்ணன் இணையத்தில் தரவிற்க்கம் செய்து கொள்ளும்படியாக இணைத்திருக்கிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி, என் உரை பற்றி தனது இணைய பக்கத்தில் எழுதி தன் அன்பை பகிர்ந்து கொண்ட நண்பர் சாரு நிவேதிதாவிற்கு நிறைந்த நன்றியும், அன்பும் தெரிவித்து கொள்கிறேன் இணைப்பு எஸ்.ராமகிருஷ்ணன் விழாஉரை https://www.garageband.com/mp3player?|pe1|S8LTM0LdsaShZFazYW8

ஆயிரம் கொக்குகள்

டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்த கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக்கூடியவை என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. அரிதாகிவரும் இந்தக் கொக்குகளை காப்பாற்றுவதற்காக அரசு பெரும்முயற்சி எடுத்துவருகிறது. டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆன்மாவின் குறியீடாகவும், சமாதானத்தின் அடையாளம் போலவும் கொக்குகள் சித்தரிக்கபடுகின்றன. அதை ஜென் கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது. டிராகன் போல கொக்குவும் ஒரு புனிதபிம்பமே. நம் ஊரிலும் கொக்குகள் அதிர்ஷடத்தை கொண்டு வருகின்றன என்ற நம்பிக்கையிருக்கிறது. …

ஆயிரம் கொக்குகள் Read More »

தேவதாஸைக் காதலிப்பவர்கள்

தேவதாஸ் இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் தேவதாஸை பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் நாவலை வாசிக்கும் வரை நானும் காதலின் உன்னத நாயகனாகவே தேவதாஸை நினைத்திருந்தேன். நாவலை வாசித்தபிறகு அந்த எண்ணம் முழுமையாக மாறிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு வார காலம் தேவதாஸ் திரைப்படங்களாக பார்த்துக் கொண்டிருந்தேன். நாகேஸ்வரராவ் நடித்த தமிழ், தெலுங்கு தேவதாசு. பிமல்ராயின் தேவதாஸ், திலிப்குமார் நடித்த …

தேவதாஸைக் காதலிப்பவர்கள் Read More »

கால்பந்தாட்டம்

Football is the love of form. A spectacle that scarcely leaves a trace in the memory and does not enrich or impoverish knowledge. This is its appeal : it is exciting and empty. -Mario Vargas Llosa நேற்று உலகப்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஜெர்மனியின் ரசிகனாக விளையாட்டை ரசித்து கொண்டிருந்தேன். அற்புதமான போட்டியது. விளையாட்டு முடிந்த பிறகும் மனதில் பந்தை துரத்தி ஒடிக்கொண்டேயிருக்கிறார்கள். நான் தொலைக்காட்சி …

கால்பந்தாட்டம் Read More »

அஸ்தபோவ் ரயில்நிலையம்.

நவம்பர் மாதக் குளிரில் அஸ்தபோவ் (Astapovo)என்ற சின்னஞ்சிறிய ரயில்நிலையம் பத்திரிக்கையாளர்கள்,புகைப்படக்காரர்களால் நிரம்பப் பெற்றது. யார் இவர்கள், எதற்காக இப்படி வந்தபடியே இருக்கிறார்கள் என்று ரயில்வே ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஊரின் தந்திநிலையத்தில் தந்தி கொடுக்க நீண்ட வரிசை காத்திருந்தது. பொதுவில் அந்த ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறைவு. அதன் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த இவான் ஆந்த்ரேயேவிச் ஒரே நாளில் தனது ரயில்நிலையம் இத்தனை பரபரப்பு அடைந்துவிட்டதைப் புரிந்து கொள்ளமுடியாமல் திகைத்துப் போயிருந்தார். தண்டவாளங்கள் கூட நடுங்கிக் …

அஸ்தபோவ் ரயில்நிலையம். Read More »

தொலைத்த ஆடைகள்

அறையில்லாமல் சென்னையில் அலைந்து திரிந்த நாட்களில் நிறைய தொலைத்திருக்கிறேன். சில அறைகளை நான் ஊருக்கு சென்று திரும்பிவருவதற்குள் காலி செய்து போயிருப்பார்கள். அந்த அறையில் வைக்கபட்டிருந்த எனது புத்தகங்கள் உடைகள் பைகள் யாவும் தூக்கி எறியப்பட்டிருக்கும்.அல்லது பழைய பொருட்கள் கடைக்கு போயிருக்க கூடும். அப்படியொரு முறை அறையில் ஒரு பை நிறைய புத்தகங்களும் உடைகளையும் வைத்து விட்டு இரண்டு மாத காலம் ஊருக்கு சென்று இருந்துவிட்டேன். திரும்பி வருவதற்குள் அறையில் ஏதேதோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நண்பர்களாக இருந்தவர்கள் …

தொலைத்த ஆடைகள் Read More »

வீடில்லாத புத்தகங்கள்

வர்ஜீனியா உல்பின் Street Haunting: A London Adventure என்ற கட்டுரையை வாசித்தேன். 1930 வருடம் குளிர்காலத்தின் ஒரு மாலையில் வர்ஜீனியா வுல்ப் (Virginia Woolf) ஒரு பென்சில் வாங்க வேண்டும் என்று லண்டன் முழுவதும் அலைந்து திரிந்த நிகழ்வை எழுதியிருக்கிறார். பென்சில் என்பது வெறும் காரணம் மட்டுமே. குளிர்காலத்தில் ஒளிரும் லண்டன் வீதிகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இப்படி உருவெடுத்திருக்கிறது. ஏதாவது ஒரு அற்ப காரணம் போதும் ஊர் சுற்றுவதற்கு. வர்ஜீனியா நடந்து திரிவதன் …

வீடில்லாத புத்தகங்கள் Read More »

தும்பை பூத்த பாதை

மலையடிபட்டி என்ற ஊருக்கு சைக்களில் சென்று கொண்டிருந்தேன். அந்த பாதையில் ஆட்களேயில்லை. வழியெங்கும் தும்பைச் செடிகள் பூத்திருந்தன. இவ்வளவு தும்பைகள் பெருகிய பாதையைக் கண்டதேயில்லை. சைக்கிளை விட்டு இறங்கி நின்று பாதையைத் திரும்பி பார்த்தேன். முன்னும் பின்னும் வளைந்து கிடந்தது பாதை. தொலைவில்  ஊர் தெரிகிறது. எல்லா கிராமங்களும் வெளியில் இருந்து பார்க்கும் போது மிக அழகாகவே இருக்கின்றன. அதன் தோற்றம் யாரோ வரைந்து வைத்துவிட்டு போன சித்திரம் போலவே இருக்கிறது. மரங்கள், வீடுகள், வைக்கோல் போர்கள், …

தும்பை பூத்த பாதை Read More »

மாதுளையின் பாடல்.

The Color of Pomegranates என்ற செர்ஜி பரஜினேவின் திரைப்படத்தை பார்த்தேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரஷ்யப் படமது. பரஜினேவ் செர்ஜியாவை சேர்ந்த ஆர்மீனியர். சையத் நோவா (Sayat-Nova) என்ற பதினேழாம் நூற்றாண்டு கவிஞனின் வாழ்க்கையை பற்றியது. ஆர்மீனியாவின் தேசியக்கவியாக கொண்டாடப்படும் சையத் நோவா கம்பள நெசவு நெய்யும் குடும்பத்தில் பிறந்து தனது கவித்துவத்தால் அரசவைக் கவிஞனாக உயர்ந்து காதலின் காரணமாக வெளியேற்றபட்டு நாடோடி பாடகனாக புகழ்பெற்று இறந்து போனார். ஆயிரம் பாடல்ளுக்கு மேலாக பாடியிருக்கிறார். …

மாதுளையின் பாடல். Read More »

கனகசபை

கனகசபை என்பது அவனது பெயர், ஆனால் அப்படி யாரும் கூப்பிட்டு நான் பார்த்தேயில்லை. பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் அவன் கனகு தான். கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனத்தில் வாழ்ந்தவன். நாற்பது வயதை கடந்திருக்கும். இலக்கியம் எழுத்து புத்தக வாசிப்பு என்று தன் வாழ்வை கொண்டுசெலுத்தி அற்பவயதில் இறந்து போனான். நான் அறிந்தவரை இலக்கியத்திற்காக கைக்காசை முழுமையாக செலவு செய்த ஒரே ஆள் கனகு மட்டுமே. கனகு ஒரு இலக்கியவாதிக்கு போன் செய்து பேசினால் எப்படியும் ஒரு மணி …

கனகசபை Read More »