admin

கர்ண மோட்சம் தேசிய விருது

நான் கதை திரைக்கதை வசனம் எழுதி முரளிமனோகர் இயக்கிய கர்ணமோட்சம் குறும்படம் இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கிறது. சிறந்த கலை மற்றும் கலாச்சார பிரிவில் (Best Arts/Cultural Film )இக்குறும்படம் சிறந்த படமாக தேர்வு பெற்று ரஜத் கமல் விருதை பெற்றுள்ளது.  இப்படம் சென்னை எம்.ஜி. ஆர். திரைப்பட கல்லூரியின் சார்பில் தயாரிக்கபட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த படம் சிறந்த இயக்கம் சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட மூன்று தமிழக அரசின் விருதுகளுடன் இருபதிற்கும் …

கர்ண மோட்சம் தேசிய விருது Read More »

யானையின் கண்ணீர்.

jefferey mussaieff masson  எழுதிய when elephents weep புத்தகத்தை வாசித்தேன் நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான புத்தகப்பட்டியலில் இந்த நூல் இடம் பெற்றிருந்தது. உளவியல் ஆய்வாளரான ஜெப்ரி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காடுமலை சுற்றி மிருகங்களை தொடர்ந்து அவதானித்திருக்கிறார். உளவியல் ஆய்வில் அமைந்த இந்த புத்தகம் மிக சுவாரஸ்யமான அனுபவம் தருவதாகயிருந்தது. தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்று தனிவகையே இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராவணன் என்பவர் எழுதிய சிந்தாமணி வைத்திய நூல்கள் ஒலைச்சுவடிகளாக நிறைய …

யானையின் கண்ணீர். Read More »

ஆங்கிலம் பிடிக்காத பூனை

ஆங்கிலம் ஒரு மொழிமட்டுமல்ல. அது காலனியாதிக்கத்தின் அடையாளம் மற்றும் காலனியாக்குவதற்கான கருவி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த ஆங்கில மோகத்திற்கு எதிராக மிகுந்த கேலியும் விமர்சனமுமாக எழுதப்பட்ட ஜப்பானிய நாவல்  I Am a Cat.  இதை எழுதியவர் நட்சுமி சுசூகி (Natsume Sōseki). 1905 ஆண்டு ஜப்பானில் எழுதப்பட்ட இந்த நாவல் மெய்ஜி காலகட்டத்தில் மக்கள் எப்படி போலியானதொரு ஆங்கில மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை கேலி செய்கிறது. இதை எழுதிய நட்சுமி சுசூகி ஒரு ஆங்கிலப்பேராசிரியர் என்பது …

ஆங்கிலம் பிடிக்காத பூனை Read More »

கசக்கும் காமம்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான J. M.கூட்ஸியின் நாவல் Disgrace  இது 1999ம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றது. கடந்த ஆண்டு இதைத் திரைப்பட மாக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்டீவ் ஜேக்கப்ஸ். ஜான் மால்கோவிச்  டேவிட் லூரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நான் பார்த்த மிக அற்புதமான படமிது. டேவிட் லூரி ஐம்பது வயதைக் கடந்த ஆங்கில பேராசிரியர். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவருக்குள் அடங்காத காமம் எப்போதுமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாக …

கசக்கும் காமம். Read More »

அடோனிஸ்

Being a poet means that I have already written but that I have actually written nothing. Poetry is an act without a beginning or an end. It is really a promise of a beginning, a perpetual beginning. –Adonis கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசி சுற்றுவரை வந்து தேர்வு செய்யப்படாமல் போன நம் காலத்தின் மிக முக்கிய …

அடோனிஸ் Read More »

ஜெயகாந்தன் விழா.

இன்று சென்னைச் சங்கமத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற தமிழ் சங்கம விழாவில் ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். நிகழ்விற்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். மேடையில் அவரது அருகாமையில் அமர்ந்திருந்தது மிக சந்தோஷமாக இருந்தது. ஜெயகாந்தன் இன்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அந்த  மௌனமான அவதானிப்பு மற்றும் பேச்சை கூர்ந்து கேட்ட விதம் மிகவும் பிடித்திருந்தது. காலை அமர்வு என்பதால் அதிக கூட்டமில்லை.நூறு பேருக்கும் குறைவாகவே இருக்ககூடும். ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றி பேசுவதற்காக நான் அவரது இரண்டு கதைகளை …

ஜெயகாந்தன் விழா. Read More »

கண்காட்சிக்கு பிறகு.

  கடந்த பத்து நாட்களாக புத்தகத் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் புத்தகங்கள் வாங்க திருவிழா கூட்டம் போல வந்து போவதை பார்த்துக் கொண்டேயிருந்தேன். எழுத்தாளன் சந்தோஷம் கொள்ளும் அற்புதமான தருணமது. இன்றைய சூழலில் யாரும் படிப்பதில்லை என்ற பொதுக்குற்றசாட்டுகளை பொய்யாக்கி மக்கள் ஆசையோடு புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். வாங்கிய எல்லாப் புத்தகங்களையும் உடனே படித்துவிடுவார்கள் என்று நான் நம்பமாட்டேன். அப்படி படிக்க வேண்டியது அவசியமும் இல்லை. புத்தகங்கள் பிறந்த நாள் கேக்குகள் அல்ல. உடனே சாப்பிட்டு முடிக்க. …

கண்காட்சிக்கு பிறகு. Read More »

இணைய கிருமி

நேற்றிரவு எனது நண்பர் தொலைபேசியில் அழைத்து உங்கள் இணையம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. யாரோ விஷமிகள் இதை செய்திருக்கிறார்கள். உடனே சரி செய்யுங்கள் என்றார். மனம் உடைந்து போய்விட்டேன்.  இரண்டு ஆண்டு உழைப்பு மற்றும் எனது அன்றாட தொடர்பு அத்தனையும் நாசமாக்கபட்ட வலியில் தூக்கமில்லை இணையத்தில் இப்படியான விஷக்கிருமிகள் பரவியிருப்பது எத்தனை ஆபத்தானது.. அத்துடன் என் இணையத்தை தொடர்பு கொள்ளும் பலரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க துவங்கியிருந்தார்கள்எனக்கு இணைய தொழில் நுட்பம் எதுவும் தெரியாது. எனது இணைய முகப்பில் …

இணைய கிருமி Read More »

பெருநகரப் பாணன்.

இது சென்ற ஆண்டு உயிர்மை இதழில் வெளியான கவிஞர் விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரை. இது தற்போது வெளியாகி உள்ள எனது வாசகபர்வம் புத்தகத்தில் உள்ளது. விளக்கு விருது பெற்றுள்ள கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியை சில நாட்களுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். கையை பிடித்து கொண்டு நெருக்கமான மனதுடன் சிரித்தார். அவரது சிரிப்பு அற்புதமானது. அவரோடு பழகிய நினைவுகள் பீறிட்டன. வாசகபர்வத்திலிருந்து இந்த அத்யாயத்தை அதற்காகவே மறுபடி இதில் வெளியிடுகிறேன்  **இந்த ஆண்டு சென்னை …

பெருநகரப் பாணன். Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்

தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி அன்னா கிரிகோரினாவின் நினைவு குறிப்பை அடிப்படையாக கொண்ட சிறிய நாடகமிது.  இரண்டு முதன்மை பாத்திரங்களின் சந்திப்பே இந்நாடகம். இரண்டு இடையீட்டு பாத்திரங்கள் ஊடாடுகின்றன.  பீட்டர்ஸ்பர்க் நகர தனியறையொன்றில்  குழப்பமும், தண்டனை பயமும், கடன் பத்திர நிபந்தனை படி முப்பது நாட்களுக்குள் முடிக்க வேண்டிய நாவலின் கெடுவும், என பிரச்சனைகளுக்கிடையே தஸ்தாயெவ்ஸ்கி, தோல்வியுற்ற சூதாடியைப்போல நடுங்கியபடி  புகையும் சிகரெட்டுடன் தனிமையில் தன்னுடனே உரையாடிக் கொண்டிருக்கிறார். கதைகள் கற்பனையானவை மட்டும் தானா என்ற கேள்வியுடன் தஸ்தாயெவ்ஸ்கியின் காதலை சொல்கிறது …

தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் Read More »