admin

செல்லம்மாள் பாரதி

நேற்று புத்தக கண்காட்சியில் நான் பேசிய போது குறிப்பிட்ட செல்லம்மாள் பாரதி ரேடியோ உரையை பலரும் படிக்க கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள், அவர்களின் பார்வைக்காக  ** என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)   வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை …

செல்லம்மாள் பாரதி Read More »

புத்தக பரிந்துரை

கடந்த நான்கு நாட்களாக புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புத்தகம் வாங்குவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் மிக சந்தோஷமாக இருக்கிறது.  வலைபக்கங்களில் எழுதும் நண்பர்கள் பலரையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி தருவதாக இருந்தது என் பார்வையில் பட்ட சில மொழிபெயர்ப்பு புத்தகங்களை உங்களுக்கு  சிபாரிசு செய்கிறேன்.  இவை முதன்முறையாக தமிழில் வெளியாகி உள்ளன.  இலக்கியம் சார்ந்த அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நூல்களை வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் எண்ணும் மனிதன்  – மல்பா தஹான் –அகல்  வெளியீடு. …

புத்தக பரிந்துரை Read More »

மா-னீ

ஹெப்சிபா ஜேசுதாசனின் மா -னீ நாவல் வெளியாகி இருபத்தியேழு வருசங்கள் ஆகிவிட்டது. இன்று வரை அந்த நாவல் குறித்து விரிவான விமர்சனம் எதுவும் வெளியானதாக தெரியவேயில்லை. தமிழ்வாசகபரப்பில் ஏனோ அந்த நாவல்  கவனம் கொள்ளாமலே போய்விட்டது. அதற்கான முக்கிய காரணம்  ஹெப்சிபா தனது நாவல்கள் குறித்து அதிகம் பேசாதவர். எந்த இலக்கிய குழுவோடும் தன்னை இணைத்து கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதவர். மிக குறைவாக, ஆனால் சிறப்பாக எழுதியவர்.  நவீன விமர்சகர்களின் கருணையும் தயவும் மிக்க கடைக்கண் …

மா-னீ Read More »

உப பாண்டவம் புதிய பதிப்பு.

எனது உப பாண்டவம் நாவலின் நான்காவது புதிய பதிப்பினை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மிக சிறப்பாக வெளிவந்துள்ள இந்த பதிப்பின் விலை. ரூ.150 கிடைக்குமிடம் புத்தக கண்காட்சி கடை எண் : P 255 & 256  விஜயா பதிப்பகம்

தமிழ் காமிக்ஸ்

தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டுள்ள நண்பர் அருண் புத்தக கண்காட்சியினுள்  காமிக்ஸ்  பிரதிகள் விற்பனைக்கு வைத்திருக்கிறார். . நூற்றுக்கும் மேற்பட்ட பழைய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன. காமிக்ஸ் ப்ரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். கடை எண்.  P 5.  INFO MAPS   அருண் அலைபேசி எண் :   9790788931.

இரண்டு குறுங்கதைகள்.

காதல்மேஜை. முள்கரண்டி ஒன்று வெள்ளியால் ஆன ஸ்பூன் ஒன்றை நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்தது. இருவரும் மிக நெருக்கமாக ஒரே மேஜையில் இருந்தபோதும் ஒருவரோடு மற்றவர் பேசிக் கொள்ளவோ, அணைத்துக் கொள்ளவோ விரும்பவில்லை.  பிரிக்க முடியாதபடி தங்கள் இருவருக்கும் ஒரு பிணைப்பு உள்ளது என்றது முள்கரண்டி. ஸ்பூனோ அதை பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை. மாறாக ஸ்பூன் சொன்னது “முள்கரண்டிகள் அருவருப்பானவை. அவை எதையும் லாவகமாக கையாளுவதேயில்லை. குத்தி கிழிப்பது தான் அதன் சுபாவம்“ என்றது. முள்கரண்டி தீராத …

இரண்டு குறுங்கதைகள். Read More »

எனது புதிய புத்தகங்கள் கிடைக்குமிடம்

  மலைகள் சப்தமிடுவதில்லை.  (கட்டுரைகள் ) பக்கம்: 240      விலை:140 இந்த நூலில் தஸ்தாயெவ்ஸ்கி, தால்ஸ்தாய். செகாவ். இதாலோ செவோ, கார்க்கி, ஷெல் சில்வர்ஸ்டைன், பாஷோ போன்ற இலக்கிய ஆளுமைகளை பற்றியும், இயற்கை குறித்த எனது புரிதல் மற்றும்  அது சார்ந்த நினைவுகளை விவரிக்கும் சேவற்சண்டை, இந்தியாவை நடந்தே சுற்றிய மனிதர். தாமரை பூத்த குளம், ரயிலோடும் தூரம், போன்ற வாழ்வியல் அனுபவ கட்டுரைகளுமாக மொத்தம் 48 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நகுலன் வீட்டில் யாருமில்லை (குறுங்கதைகள் …

எனது புதிய புத்தகங்கள் கிடைக்குமிடம் Read More »

எஷ்னாபூரின் புலி.

புகழ்பெற்ற ஜெர்மனிய இயக்குனரான ப்ரிட்ஜ் லாங்கின் இந்திய காவியங்கள் என்று போற்றப்படும் The Tiger of Eschnapur  மற்றும் The Indian Tomb ஆகிய இரண்டு படங்களை சமீபமாக பார்த்தேன். 1959ம் ஆண்டு வெளியான இந்தப் படங்கள் ஜெர்மனியில் பெரிய வெற்றிபெற்றவை. இந்தியாவில் படமாக்கபட்ட வெளிநாட்டு படங்களில்  லாங்கின் இந்தப் படங்களே மிக பிரம்மாண்டமான முயற்சியாகும். ராஜஸ்தானில் பெரும்பகுதியான படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. மற்றவை ஜெர்மனிய ஸ்டுடியோக்களின் அரங்கில் உருவாக்கபட்டிருக்கின்றன. ஈஸ்ட்மென் கலரில் உருவாக்கபட்ட இந்த இரண்டு படங்களையும் ஒரு …

எஷ்னாபூரின் புலி. Read More »

ஏழு குறும்படங்கள்

நேற்று பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் குறும்பட போட்டியின் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன். இதனை ஒருங்கிணைத்த பிரின்ஸ் பெரியார் இயக்கத்தின் துடிப்புமிக்க இளம்தலைமுறை தோழர்.சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். இந்த திரையிடல் நிகழ்விற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்பட இயக்குனர்கள் வந்திருந்தார்கள். நூறு குறும்படங்களுக்கு மேலாகவே போட்டிக்கு வந்திருந்தன. தமிழில் இவ்வளவு குறும்படங்கள் உருவாக்கபடுவது மிக ஆரோக்கியமான வளர்ச்சியாகும். இதன்வழியே மாற்றுசினிமா முயற்சிக்கான புதிய களம் உருவாகி வருவதை அறிய முடிகிறது.  தேர்ந்த தொழில்நுட்பம், கதைக்கரு, மிகையில்லாத …

ஏழு குறும்படங்கள் Read More »

விக்ரமாதித்யன்

தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனுக்கு இந்த ஆண்டிற்கான “விளக்கு` இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.   அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான “விளக்கு` புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒவ்வோராண்டும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. இந்தவிருதில்  ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும்,​ பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.   62 வயதான கவிஞர் விக்ரமாதித்யன் “ஆகாசம் நீல நிறம்`, “ஊரும் காலம்`, “உள்வாங்கும் உலகம்` …

விக்ரமாதித்யன் Read More »