admin

கேள்வியரங்கம்

எனது இணையதளத்தினை தொடர்ந்து பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். எனக்கு அனுப்பப்பட்ட தனி மின்னஞ்சலில் இருந்த சில கேள்விகளும் சந்தேகங்களும் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை என்ற காரணத்தால் அவற்றை மட்டும் தனித்து பதில் சொல்ல விரும்புகிறேன் பிறமொழி இலக்கியம் ஹைதராபாத்திலிருந்து சிவா இக்கேள்வியை அனுப்பியுள்ளார்: தமிழில் உள்ள மொழிபெயர்ப்பு புத்தகங்களில் எவை முக்கியமானவை. புதிய வாசகர்களுக்கு நீங்கள் எதைச் சிபாரிசு செய்வீர்கள். அவை எங்கே கிடைக்கின்றன ? எஸ்ரா : …

கேள்வியரங்கம் Read More »

பழகிய பாரதி

பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர …

பழகிய பாரதி Read More »

யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை.

பள்ளிப்பாடப்புத்தகங்களில் பலரும் படித்து மறந்து போன  நூறு பெயர்களில் ஒன்று யுவான் சுவாங். சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி. பருத்து வீங்கிய கழுத்து, வட்டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடலமைப்பு கொண்ட யுவான்சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் கண்டிருக்கிறேன். அந்த நாட்களில் யுவான்சுவாங் பற்றிய அறிவு ஐந்து மார்க் கேள்விக்கான விடை மட்டுமே. ஆனால் இந்திய சரித்திரத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளத் துவங்கிய போது எளிதில் …

யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை. Read More »

சுஜாதாவிற்கான அஞ்சலி.

நேற்றிரவு பத்தரைமணிக்கு அவரது மரணம் பற்றிய குறுஞ்செய்தி வந்தது. சில நிமிசங்கள் அது நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் பதினைந்து குறுஞ்செய்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தியது. கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு …

சுஜாதாவிற்கான அஞ்சலி. Read More »

ஜோதா அக்பர் – விளம்பர உப்புமா

சில ஆண்டுகளுக்கு முன்பாக கலரில் உருமாற்றப்பட்டு வெளியான மொகலே ஆசாம் பார்த்த பிறகு அக்பரையும் மொகலாய வரலாற்றையும் பற்றி அதிகம் வாசிக்க வேண்டும் என்ற உத்வேகம் உருவானது. தேடித்தேடி வாசித்தேன். கறுப்பு வெள்ளையில் இருந்து எப்படிக் கலருக்கு மாற்றினார்கள் என்ற வியப்பு படம் முழுவதுமிருந்தது. இயக்குனர் ஆசிப் முழுப்படத்தையும் கலரில் உருவாக்கவே விரும்பினார். ஆனால் தயாரிப்பாளர்களின் நெருக்கடி படத்தின் இறுதிப்பகுதி மட்டுமே கலரில் படமாக்கபட்டிருந்தது. பிருத்விராஜ் கபூர் அக்பராக நடித்திருந்ததும் மதுபாலாவும் திலீப்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்ததும் …

ஜோதா அக்பர் – விளம்பர உப்புமா Read More »

மறந்து போன மௌனி

2007 ஆண்டு மௌனியின் நூற்றாண்டுவிழா. ஆனால் புதுமைப்பித்தன் போல மௌனி பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. ஒரு வேளை மௌனி எந்த இலக்கியக் குழுவையும் சேராமலிருந்தது இதற்கு காரணமாக இருந்திருக்க கூடும். மௌனியின் படைப்புலகம் குறித்து சமகாலப் பார்வைகளுடன் கூடிய விமர்சனம் இன்று தேவையாக உள்ளது. ஒரு முறை ஜெயகாந்தனிடம் அவருக்குப் பிடித்தமான சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக சொன்னபோது அவர் மௌனியின் கதையைத் தேர்வு செய்ததோடு, தனக்குப் பிடித்த எழுத்தாளர் மௌனி என்று குறிப்பிட்டுள்ளார். தனது சக எழுத்தாளர்கள் …

மறந்து போன மௌனி Read More »

அலன் ராபே கிரியே

கதையைக் கடந்து செல்லும் காட்சிகள். சமகால பிரெஞ்சு இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படும் அலன் ராபே கிரியே(Alain Robbe-Grillet) தனது எண்பத்தைந்தாவது வயதில் நேற்று மரணமடைந்தார். பிரெஞ்சு நவீன இலக்கிய உலகில் ராபே கிரியேவின் பெயர் தனித்துவமானது. கதை சொல்லலில் அவர் நிகழ்த்திய மாற்றங்களே இன்றைய பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. ராபே கிரியேவின் சிறுகதை ஒன்றை கல்குதிரை வெளியிட்ட உலகச்சிறுகதை தொகுதிக்காக நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு இலக்கியத்தில் தொடர்ந்து …

அலன் ராபே கிரியே Read More »

அவமானத்தின் முன் மண்டியிடல்

எல்லா புனைவுகளையும் விடவும் விசித்திரமானது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை. துயரத்தின் சாற்றை மட்டுமே பருகி வாழ்ந்த அவரது வாழ்வின் ஊடாகவே அவரது படைப்புகள் உருக்கொண்டிருக்கின்றன. எழுதுவதை தவிர வேறு எந்த வழியிலும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் வெளிப்பாடுகள் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அவரைப் புரிந்து கொள்வது மிக அவசியம். தான் வாழ்ந்த காலம் முழுவதும் தொடர்ந்து துஷிக்கபட்டும் கடுமையான வசைகளும் ஏளனத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளான ஒரு எழுத்தாளன் அவர். …

அவமானத்தின் முன் மண்டியிடல் Read More »

எழுதுவது ஏன்?

இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில். எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார் 1) எழுதுவதற்கான …

எழுதுவது ஏன்? Read More »

தெய்வம் தந்த வீடு

இரண்டு பெண்களை பலவருடமாக நான் என் நினைவிலே தேக்கி வைத்திருக்கிறேன். அவர்கள் என் கனவிலும் தனிமையிலும் எப்போதும் சப்தமின்றி இலை அசைவதை போல அசைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒன்று புத்தரின் மனைவி யசோதரா. மற்றவள் சங்க இலக்கியத்தின் கவிதாயிணி வெள்ளிவீதியார். அவர் எழுதியதில் நான்கோ ஐந்தோ பாடல்கள் மட்டுமே  சங்க இலக்கியத்தில் வாசிக்க கிடைக்கின்றன. ஆனால் அந்த பாடலின் ஊடாக வெளிப்படும் காமம் தொடர்பான அவளது ஏங்குதலும் உணர்ச்சி வெளிப்பாடும் வெகு அலாதியானது. கையில்லாத ஊமை கண்ணால் காவல் …

தெய்வம் தந்த வீடு Read More »