admin

உப பாண்டவம் புதிய பதிப்பு

மலையாளத்தில் கே.எஸ் வெங்கிடாசலம் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள உப பாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அதன் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

ருகெண்டாஸின் ஓவியங்கள்

An Episode in the Life of a Landscape Painter என்றொரு நாவலை அர்ஜென்டின எழுத்தாளர் செசர் ஐரா எழுதியிருக்கிறார். ஜெர்மானிய ஓவியரான ஜோஹன் மோரித் ருகெண்டாஸ் வாழ்க்கையினையும் செவ்விந்தியர்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணத்தையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல். ரொபெர்த்தோ பொலான்யோ இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் ஐராவை நிகரற்ற நாவலாசிரியர் என்று கொண்டாடுகிறார். அது உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணர்ந்தேன் ருகெண்டாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவ்விந்தியர்களை …

ருகெண்டாஸின் ஓவியங்கள் Read More »

திரைப்படங்களை ஆவணப்படுத்துதல்

தமிழ் திரைப்படங்களை ஆவணப்படுத்துதல் குறித்தும் அழிந்தும் மறைந்தும் போன தமிழ் திரைப்படங்கள் குறித்து உருவாக்கபட்ட சிறந்த டாகுமெண்டரி. சுகீத் கிருஷ்ணமூர்த்தி இதனை இயக்கியுள்ளார்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 98 எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும் 28 மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கில் உரையாற்றினேன். திரளான கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். புத்தகக் கண்காட்சிக்கு உரையாற்ற வருபவர்களை எப்படி கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்கு புதுக்கோட்டை ஒரு முன்மாதிரி. தங்கும் அறை, உணவு, பயண ஏற்பாடு என அத்தனையும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை சிறப்பாக ஒருங்கிணைக்கும் நண்பர், கவிஞர் …

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் Read More »

நினைவுச் சித்திரங்கள்

சசி எம் குமார் எழுதிய திண்ணை இருந்த வீடு சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 23 சின்னஞ்சிறு கதைகள். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தனது கிராமிய நினைவுகளையும் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத மனிதர்களையும் அழகான சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். மூன்று நான்கு பக்கங்களே உள்ள இந்தக் கதைகள் காட்சி ரூபமாகக் கண்முன்னே விரிகின்றன. கதை என்று சொன்னாலும் இவை உண்மையான வாழ்க்கைப் பதிவுகள். இந்த மனிதர்களில் சிலரை நாம் அறிவோம். அவர்களுக்கு வேறு பெயர்கள் இருக்கக் கூடும்.   சசி இவர்களைத் …

நினைவுச் சித்திரங்கள் Read More »

எனது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு

தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பினை ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இருநூறு பக்க அளவில் வெளியாகியுள்ளது The Man Who Walked Backwards and Other Stories தொகுப்பில் 18 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. வாசகர்கள், நண்பர்கள் இந்த நூலை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். குறிப்பாகப் பிறமாநிலங்களிலும், அயல்நாட்டிலும் வசிக்கும் வாசகர்கள் இதனை வாங்கி நண்பர்களுக்கும் நூலகங்களுக்கும் பரிசாக அளிக்கலாம். நூலை வாங்குவதற்கான இணைப்பு. https://www.orientblackswan.com/details?id=9789354424373

பழிவாங்குதலின் பாதை

ஜான் ஃபோர்டின் The Searchers ஹாலிவுட் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகும். இது ஜான் ஃபோர்டின் நூற்றுப் பதினைந்தாவது திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார் ஜான் ஃபோர்ட். அவரது மோசமான குடிப்பழக்கம் மிதமிஞ்சிய கோபம் காரணமாக அவரைக் கண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். திரையில் அவர் உருவாக்கிக் காட்டிய பிரம்மாண்டம் இன்றும் அதிசயமாகப் பேசப்படுகிறது. இப்படம் ஃபிராங்க் எஸ். நுஜென்ட் எழுதிய திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர் ஜான் ஃபோர்டின் 11 …

பழிவாங்குதலின் பாதை Read More »

ஓப்பன் ஹைமர்

யூஜி.அருண் பிரசாத். தூத்துக்குடி. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நிலம் கேட்டது கடல் சொன்னது புத்தகத்தில் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இன்றைய ஹிரோஷிமா எப்படி இருக்கிறது என்பதில் துவங்கி வரலாற்றில் ஜப்பான் எப்படி இருந்தது , ஏன் ஹிரோஷிமா நாகசாகி என்ற இரு ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டது என்பது வரை தனது விரிவான பயண அனுபவங்களைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா. இதை வாசிக்கும் போது நாமும் அவருடன் இணைந்து ஜப்பானில் …

ஓப்பன் ஹைமர் Read More »