கோவையில்
கோவை புத்தகக் கண்காட்சியில் இரண்டு நாட்களும் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். இனிமையான அனுபவமாக இருந்தது. வாசிக்க வேண்டிய புத்தகங்கள், அரிய ஒவியங்கள், உலகசினிமா, மற்றும் எழுதும் கலை குறித்து அறிந்து கொள்வதில் இளம்வாசகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தேசாந்திரி சார்பில் இதற்கென சிறப்பு நிகழ்வுகளை நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். சனிக்கிழமை மாலை மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற கோல்டன் லீப் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து …









