admin

கோவையில்

கோவை புத்தகக் கண்காட்சியில் இரண்டு நாட்களும் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். இனிமையான அனுபவமாக இருந்தது. வாசிக்க வேண்டிய புத்தகங்கள், அரிய ஒவியங்கள், உலகசினிமா, மற்றும் எழுதும் கலை குறித்து அறிந்து கொள்வதில் இளம்வாசகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தேசாந்திரி சார்பில் இதற்கென சிறப்பு நிகழ்வுகளை நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். சனிக்கிழமை மாலை மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற கோல்டன் லீப் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து …

கோவையில் Read More »

கோவையில் இரண்டு நாட்கள்

புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ள நாளை கோவை வருகிறேன். 22 .07.23 சனிக்கிழமை மற்றும் 23.07.23 ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் கோவையில் இருப்பேன். புத்தகத்திருவிழாவில் தேசாந்தரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 17. அங்கே என்னைச் சந்திக்கலாம். சனிக்கிழமை மாலையும், ஞாயிறு காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை தேசாந்திரி அரங்கில் இருப்பேன்.

சஞ்சாரம் காமிக்ஸ்

கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர் பூபதி எனது சஞ்சாரம் நாவலின் ஒரு பகுதியை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருப்பதாக விரிவுரையாளரும் நண்பருமான கோ.வில்வநாதன் தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பூபதியை நேரில் காண வேண்டும் என அழைத்து வரச் சொன்னேன். சில தினங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். திரைப்படங்களுக்கான ஸ்டோரி போர்ட் வரைவதில் முனைப்புடன் செயல்படுகிறார் பூபதி தனது விருப்பத்திற்காக சஞ்சாரம் நாவலின் முதல் அத்தியாயத்தை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருக்கிறார். மிக அழகான ஓவியங்கள். கருப்பு …

சஞ்சாரம் காமிக்ஸ் Read More »

சிலைகள் சொல்லும் உண்மை

சோழநாட்டில் பௌத்தம் பரவியிருந்த வரலாறு மற்றும் புத்தர் சிலைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்து வருபவர் முனைவர் ஜம்புலிங்கம். இவரது களப்பணியின் காரணமாக அய்யம்பேட்டை, உள்ளிக்கோட்டை, காஜாமலை, குடவாசல், குழுமூர், சுந்தரபாண்டியன் பட்டினம், திருநாட்டியத்தான்குடி, பட்டீஸ்வரம், புதூர், மங்கலம், வளையமாபுரம் போன்ற ஊர்களில் அரிய புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. ஜம்புலிங்கம் தனது முப்பது ஆண்டுகாலப் பௌத்த ஆய்வின் தொகுப்பாகச் சோழநாட்டில் பௌத்தம் என்ற நூலை எழுதியுள்ளார். அழகிய புகைப்படங்களுடன் கெட்டி அட்டையில் நேர்த்தியாக இந்நூலை புது எழுத்துப் …

சிலைகள் சொல்லும் உண்மை Read More »

கொரோனா காலத்து நாவல்கள்

கொரோனா காலத்தில் உலகெங்கும் மூன்று புத்தகங்கள் விரும்பி வாசிக்கப்பட்டன. ஒன்று Albert Camus எழுதிய The Plague நாவல் மற்றொன்று Daniel Defoe எழுதிய A Journal of the Plague Year மூன்றாவது jose saramago எழுதிய blindness நாவல். பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் ஏன் இதை வாசிக்க விரும்பினார்கள் என்பது குறித்து இப்போது நிறையக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாகி வருகின்றன. நெருக்கடியான காலத்தில் மக்கள் என்ன புத்தகத்தை வாசிக்கத் தேர்வு செய்கிறார்கள் என்பது முக்கியமானது. …

கொரோனா காலத்து நாவல்கள் Read More »

தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில்

19.7.2023 புதன்கிழமை மாலை தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன் தலைப்பு : எழுத்தின் பாதை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

ரோஜா மற்றும் பட்டாம்பூச்சி

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது மேஜிகல் ரியலிச எழுத்திற்காகப் புகழ்பெற்றவர். அவரது நாவல்களை விடவும் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சிறுகதைகளில் அவர் உருவாக்கிக் காட்டும் அற்புதங்கள் நிகரில்லாதவை. 1970ல் வெளியான அவரது சிறுகதை. DEATH CONSTANT BEYOND LOVE. இப்போது வாசிக்கும் போதும் வியக்கவைக்கிறது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் சிறுகதையில் அரிய 3சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் இந்தக் கதை தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் நாற்பத்திரண்டு வயதான செனட்டர் ஒனேசிமோ சான்செஸ் பற்றியது. அவர் இறப்பதற்குப் பதினொரு …

ரோஜா மற்றும் பட்டாம்பூச்சி Read More »

பெயரில்லாத நாயகன்

எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத திரைப்படங்களை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி. ஏழு திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் என்ற தனிவகைச் சினிமாவை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி. அவரது காட்சிக்கோணங்களும் ,இசையைப் பயன்படுத்தும் விதமும், பரபரப்பான கதைத்திருப்புகளும் மறக்கமுடியாதவை. எவரது நிர்ப்பந்தத்திற்கும் கட்டுப்படாமல் நான் படங்களை இயக்கக்கூடியவன் என்கிறார் செர்ஜியோ. இவரது தந்தையும் ஒரு திரைப்பட இயக்குநரே. முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இவரும் இசையமைப்பாளர் எனியோ மோரிகோனும் பள்ளி நண்பர்கள். இவர்கள் …

பெயரில்லாத நாயகன் Read More »

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்

ஜுலை 28 வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் உரையாற்றுகிறேன். தலைப்பு : புத்தகத்தின் கைகள். இடம் : நகர் மன்றம் புதுக்கோட்டை

டார்வினின் வருகை

கவிஞர் ஞானக்கூத்தன் வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையில் வருவது போல எனது பள்ளி நாட்களில் அறிவியல் பாடம் நடத்தும் போது எலும்புக் கூடு ஒன்றை வகுப்பறைக்குக் கொண்டுவருவார்கள். அந்த எலும்புக்கூடு மனிதன் யார் என்று தெரியாது. அவனது கைகால்களின் எலும்புகளைக் காட்டி ஆசிரியர் டார்வின் தியரியை விளக்கிச் சொல்லுவார். வகுப்பு முடிந்தவுடன் எலும்பு கூட்டை கொண்டு போய்ச் சயின்ஸ் லேப் உள்ளிருந்த கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்துவிடுவார்கள். காரிடாரில் எலும்புக்கூடு போவதைக் காண …

டார்வினின் வருகை Read More »