admin

வெயில் அறிந்தவன்

புதிய குறுங்கதை. கல்லூரி படிப்பைப் பாதியில் விட்டு அவன் ஊர் திரும்பினான். நூறுக்கும் குறைவான வீடுகளைக் கொண்ட கரிசல் கிராமமது. அவனைச் சுற்றும் ஈக்கள் கூட இனி என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்வியைக் கேட்டன. வேப்பஞ்செடி போல நான் இந்த மண்ணில் வேரூன்றி வளர விரும்புகிறேன் எனக்கு வேறு இடமில்லை என்றான். தாயும் அக்காவும் அவனை நினைத்துக் கலங்கினார்கள். விவசாயியான தந்தை தனது கோபத்தை விறகு பிளப்பதில் காட்டினார். அவன் தன்னை நேசிப்பவர்களை வெறுத்தான். உலர்ந்த நத்தைக்கூடினை …

வெயில் அறிந்தவன் Read More »

சைபீரியப் பனியில் சில காலடிகள்

அகிரா குரோசாவாவின் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கி அவரது திரைப்படங்களின் தயாரிப்பு உதவியாளர் வரையான பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் டெருயோ நோகாமி அகிரா குரசோவாவின் 19 படங்களில் பணியாற்றியிருக்கிறார். குரோசாவாவின் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இவர் தனது திரையுலக அனுபவங்களை Waiting on the Weather: Making Movies with Akira Kurosawa என்ற நூலாக எழுதியிருக்கிறார். அவர் திரைப்பட உலகிற்கு அறிமுகமான விதம் மற்றும் குரசோவாவின் படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, …

சைபீரியப் பனியில் சில காலடிகள் Read More »

டாக்டர் ஷிவாகோ

போரிஸ் பாஸ்டர்நாக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். இவரது புகழ்பெற்ற நாவலான டாக்டர் ஷிவாகோ டேவிட் லீனால் படமாக்கபட்டு ஐந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது. போரிஸ் பாஸ்டர்நாக்கின் வாழ்க்கை மற்றும் ஷிவாகோ நாவலுக்குப் பின்னுள்ள உண்மைகளை விளக்கும் விதமாகப் பிபிசி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது. The Real Doctor Zhivago என்ற இந்த ஆவணப்படம் அவரது கால அரசியல் மற்றும் இலக்கியச் சூழலை தெளிவாக விளக்குகிறது

சாந்தி சிவராமன்

சாந்தி சிவராமன் சாகர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். எனது சஞ்சாரம் நாவலை வாசித்த சாந்தி சிவராமன் தனக்கு மிகவும் பிடித்துப்போகவே அதை முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டார்.  எனது தொடர்பு கிடைக்காத காரணத்தால் தகவலைத் தெரிவிக்க இயலவில்லை. இவரது மகன் சத்யா சிவராமன் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். சாந்தி சிவராமன் முன்னதாக அசோகமித்ரனின் இன்று, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறார். 2016 …

சாந்தி சிவராமன் Read More »

நன்றி

எனது பிறந்தநாளுக்கு மின்னஞ்சல் மூலமும் நேரிலும் குறுஞ்செய்திகள் மூலமும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனது ஆடிட்டர் சந்திரசேகர் பெரிய கேக் ஒன்றை வாங்கி வந்து பிறந்தநாளைக் கொண்டாடச் செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும் எனது பிறந்த நாளை பெரிய கொண்டாட்டமாக்கிய தூத்துக்குடி மாரியப்பன். ஜெயபால், அருண்பிரசாத் உள்ளிட்ட நண்பர்களுக்கும், நிலக்கோட்டை மாணிக்கம் நகைமாளிகை ஸ்ரீதர், எழில் உணவகம் சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது தீராத நன்றிகள்.

வெர்தரின் காதல்

கதே எழுதிய The Sorrows of Young Werther நாவலை மறுபடி வாசித்தேன். Stanley Corngold மொழியாக்கம் செய்த புதிய பதிப்பு. அதன் தலைப்பு The Sufferings of Young Werther என மாற்றப்பட்டிருக்கிறது.  எனக்கு The Sorrows of Young Werther தலைப்பே பிடித்துள்ளது. கல்லூரி நாட்களில் இந்த நாவலை முதன்முறையாகப் படித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு, மயக்கம் இன்றைக்கு துளியும் மாறவில்லை. கதே என்றைக்குமானவர். அவரது நாவல் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்படுகிறது.  ஒருவகையில் வெர்தர் நாம் …

வெர்தரின் காதல் Read More »

அழகிய மௌனம்

எனது ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பு குறித்து வெங்கட்ராமன் கணேசன் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள மதிப்புரை Aindhu Varuda Mounam – S. Ramakrishnan written by Venky Aindhu Varuda Mounam (“Silence of five years) is an alluring collection of short stories ranging from the profound to the plebian. Author S. Ramakrishnan in 32 short stories takes his readers on a …

அழகிய மௌனம் Read More »

புத்தகப் பரிசு

மல்லாங்கிணறு அரசுப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறார்  K. ராம்குமார். இவர்  மாவட்ட அளவில் கலைத்திறன் விழாவில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு நான் எழுதிய புத்தகங்களைப் பரிசாக அளித்துள்ளார்.  ராம்குமாருக்கு எனது அன்பும் நன்றியும். அரசுப் பள்ளிகளில் வாசிப்பை மேம்படுத்தும் இவர் போன்ற ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்.    

சொற்கள் மிதக்கும் சிவப்புக்கம்பளம்

ந. பிரியா சபாபதி (எஸ். ராமகிருஷ்ணனின் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” வாசிப்பு அனுபவம்) அறிவின் திறவுகோல் புத்தகம். புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் தங்கச் சுரங்கம் நூலகம். அந்நூலகம்தான் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” என்ற இந்தப் புத்தகத்தின் மையம். அந்த மையத்தைச் சுற்றி நிகழ்பவையே இக்கதை. நந்து எனும் சிறுவன் வழியாக இக்கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. இக்காலக் குழந்தைகளின் மனநிலையின் பிம்பந்தான் இந்த நந்து. ‘குழந்தைகளின் பிடிவாதம் பெரியோர்களின் வீராப்பைப் போன்றது அல்ல’ என்பதை நூலகம் செல்வதன் …

சொற்கள் மிதக்கும் சிவப்புக்கம்பளம் Read More »