இந்து தமிழ் திசையில்
இந்து தமிழ் திசை நாளிதழில் வான்கோவின் ஒவியம் குறித்து நான் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது
இந்து தமிழ் திசை நாளிதழில் வான்கோவின் ஒவியம் குறித்து நான் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது
களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சி அஜந்தா ஹோட்டலில் 24.6.23 சனிக்கிழமை மாலை ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் நூலிற்கான அறிமுகவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நூல் குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன்
சுவிஸ் திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் பென்சல் இயக்கிய ஆவணப்படம். Zen for Nothing 2016ல் வெளியான இப்படம் ஜென் மடாலய வாழ்வினைப் பற்றிய சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. சுவிஸ் நடிகையான சபீனா டிமோடியோ தனது அகத்தேடலின் காரணமாக ஜப்பானின் மேற்குக் கடற்கரை பகுதியிலுள்ள அந்தாஜி ஜென் மடாலயத்திற்குச் செல்கிறார். அங்கே மூன்று பருவகாலங்களைக் கழிக்கிறார். தியானம் மற்றும் வாழ்வியல் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார். ஜென் துறவிகள் என்றால் சதா தியானத்திலிருப்பவர்கள் என்ற பொதுப்புத்திக்கு மாறாக இங்கே துறவிகள் …
எனது சஞ்சாரம் நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்பினை சாகித்ய அகாதமி வெளியிடுகிறது. இதனை ஜில்லேல பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார்
எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு borderless journal இதழில் வெளியாகியுள்ளது இதனை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்துள்ளார்
Chushingura 1962ல் வெளியான ஜப்பானியப் படம். ஹிரோஷி இனாககி இயக்கியது புகழ்பெற்ற 47 ரோனின் என்ற சாமுராய்வீர்ர்களின் கதையை விவரிக்கும் படம். 47 ரோனின் கதை ஜப்பானின் தேசிய காவியம் என்றே அழைக்கப்படுகிறது இக்கதை எண்ணற்ற முறை நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அத்தோடு ஆறு முறை படமாக்கப்பட்டிருக்கிறது இதே கதையை மிஷோகுஷி 1949ல் எடுத்திருக்கிறார். அப்படம் தோல்வியுற்றது. வண்ணத்தில் அதே கதையைத் தொசிரே மிபுனே போன்ற முக்கிய நட்சத்திரங்களைப் பயன்படுத்திப் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். இடைக்கால ஜப்பானில் நடைபெறும் கதை. …
1958ம் ஆண்டுத் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் செய்தியை கேள்விப்பட்டபோது போரிஸ் பாஸ்டர்நாக் மாஸ்கோவிற்கு அருகிலிருந்த எழுத்தாளர்களுக்கான கிராமமான பெரெடெல்கினோவில் இருந்தார். அங்கே அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது மாக்சிம் கார்க்கியின் ஆலோசனைப் படி ஸ்டாலின் எழுத்தாளர்களுக்கான கிராமத்தினை உருவாக்கியிருந்தார். இயற்கையான சூழலில் நதிக்கரை ஓரமாக 250 ஏக்கர் பரப்பளவில் அந்தக் கிராமம் உருவாக்கப்பட்டு அதில் ஐம்பது எழுத்தாளர்களுக்குத் தனிவீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பின் பின்புறமாக எளிய மரவீடுகளில் விவசாயிகள் குடியிருந்தார்கள். அங்கே விவசாயப் பணிகள் நடைபெற்றன. …
புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் பில்லி காலின்ஸ் தனது கவிதைகளை வாசிக்கும் காணொளி. இதன் முடிவில் கவிதை குறித்த அவரது பேச்சு மிக முக்கியமானது. Basically when you’re teaching poetry, despite that poem (Introduction to Poetry), you’re talking about meaning. We’re basically extracting meaning from the poem. And I realized at some point, that when I wrote a poem, meaning was the last …
Van Gogh: Of Wheat Fields and Clouded Skies என்ற ஆவணப்படம் நெதர்லாந்திலுள்ள வான்கோ அருங்காட்சியகத்தைப் பற்றியது. அத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் வின்சென்ட் வான்கோவின் ஓவியங்களைத் தேடிச் சேகரித்து அவற்றைப் பாதுகாக்க ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஹெலன் க்ரோல்லர்-முல்லரைப் பற்றியது. இந்த ஆவணப்படத்தை ஜியோவானி பிஸ்காக்லியா இயக்கியுள்ளார். நெதர்லாந்தின் கிழக்கில் ஓட்டர்லோ எனுமிடத்தில் பரந்த இயற்கை வெளியின் நடுவே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கே வான்கோவின் ஓவியங்கள் மட்டுமின்றிப் பிகாசோ, மாண்ட்ரியன் உள்ளிட்ட முக்கிய …
எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அக்கதை borderless journal இதழில் வெளியாகிறது.