admin

கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ்

1843ம் ஆண்டு – தொடர்ச்சியாக மூன்று நாவல்கள் தோல்வியுற்ற காரணத்தால் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாத குழப்பத்திலிருந்தார் சார்லஸ் டிக்கன்ஸ். ஆடம்பரமான வாழ்க்கை காரணமாக நிறையக் கடன் ஏற்பட்டிருந்தது. கடன்காரர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள். அதைச் சமாளிக்கப் பணம் கேட்டு பதிப்பாளரை அணுகுகிறார் டிக்கன்ஸ். அவரோ புதிய நாவல் ஏதாவது எழுதினால் முன்பணம் தருகிறேன் என்கிறார். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் பதிப்பாளரிடம் புதிய நாவலை ஆரம்பித்துவிட்டதாகப் பொய் சொல்லி முன்பணம் பெறுகிறார் டிக்கன்ஸ். புதிய …

கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ் Read More »

பௌத்த சினிமா- 2 பிறப்பிற்கு முன்

Why Has Bodhi Dharma Left for the East பௌத்த திரைப்படங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தென் கொரியத் திரைப்படமாகும், பே யோங்-கியூன் இதனை இயக்கியுள்ளார். மூன்று புத்த பிக்குகளின் வாழ்க்கையைப் படம் விவரிக்கிறது. தலைப்பைப் பார்த்து பலரும் படம் போதி தர்மாவைப் பற்றியது என நினைக்கிறார்கள். படம் பதிலற்ற அந்தக் கேள்வியை வேறுவிதமாக எதிர்கொள்கிறது. இந்த திரைப்படம் Zen koan போன்ற ஒரு அனுபவத்தை தருகிறது

பௌத்த சினிமா -1 கர்மா

இரண்டு வேறுபட்ட பௌத்த பிக்குணிகளின் வழியே பௌத்த சமயத்தின் நம்பிக்கைகள். மறுபிறப்பு, மடாலய வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துகிறது இந்த நேபாளி திரைப்படம்

மாக்ஸ் லிண்டரின் குளியல் தொட்டி

மாக்ஸ் லிண்டர் மௌனப்படங்களின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். பிரெஞ்சு நடிகரான இவரது பாதிப்பில் உருவானர் தான் சார்லி சாப்ளின். தனது கடிதம் ஒன்றில் சாப்ளின் லிண்டரைத் தனது குருவாகக் குறிப்பிடுகிறார். மாக்ஸ் லிண்டர் நடித்த Max Takes a Bath என்ற மௌனப்படம் 1910ல் வெளியானது. குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்ன அறிவுரைக்காக மாக்ஸ் ஒரு குளியல் தொட்டியை விலைக்கு வாங்குகிறார். அதைத் தனது வீட்டிற்குக் கொண்டுவருவதில் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் நகைச்சுவையாகக் …

மாக்ஸ் லிண்டரின் குளியல் தொட்டி Read More »

செகாவின் துப்பாக்கி

புதிய குறுங்கதை 4.4.23 ஆன்டன் செகாவின் கதையிலிருந்த துப்பாக்கி திருடு போயிருந்தது. யார் அதைத் திருடியது எனத் தெரியவில்லை. ஆனால் அந்தத் துப்பாக்கி ஒரு வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. திருடு போன துப்பாக்கியைப் பற்றிச் செகாவிடம் எப்படித் தெரிவிப்பது என்று கதாபாத்திரங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை திருடியதும் வேறு ஒரு கதாபாத்திரமாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. செகாவ் தனது கதையிலிருந்த துப்பாக்கி திருடப்பட்டதை அறிந்து கொள்ளாமல் வேறு கதைகள் எழுதுவதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். சில கதாபாத்திரங்கள் …

செகாவின் துப்பாக்கி Read More »

பந்தல்குடி பள்ளி

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் R.ஜெயபால் . இவர் தனது வகுப்பு மாணவிகள் மாவட்ட மற்றும மாநில அளவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை;ப் பாராட்டும் விதமாக எனது புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார் . வகுப்பறைக்குள் புத்தகங்கள் செல்வது வரவேற்க வேண்டிய செயல். ஜெயாலுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.