admin

அறியப்படாத கார்க்கி

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ் போல மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறு இன்றுவரை விரிவாக எழுதப்படவில்லை. ரஷ்ய மொழியில் வெளியாகியுள்ள அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமானது. ஸ்டாலின் அரசோடு அவருக்கு ஏற்பட்ட மோதல்கள், நெருக்கடிகள் பற்றி அதில் எதுவுமில்லை. Henri Troyat எழுதிய Gorky: A Biography கூட முழுமையானதில்லை. MAXIM GORKY : A POLITICAL BIOGRAPHY என்ற T. YEDLAN புத்தகத்தில் அவரது வாழ்க்கையின் கடைசிப்பகுதி விவரிக்கப்படுகிறது. தனது பால்ய வயது துவங்கி இளைஞனான …

அறியப்படாத கார்க்கி Read More »

மலையாளத்தில்

எனது உறுபசி நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. இடமன் ராஜன் இதனை மொழியாக்கம் செய்திருக்கிறார். லோகோஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. தமிழக அரசின் சிறந்த நூலுக்கான மொழியாக்கத் திட்டத்தில் இதனை வெளியிடுகிறார்கள்.

சின்னஞ்சிறு கவிஞன்

The Kindergarten Teacher என்ற இஸ்ரேலியத் திரைப்படத்தில்  Being a poet in our world is going against the nature of the world என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.  முற்றான உண்மையிது. ஒரு கவிஞனின் மனதில் கவிதை எப்படிப் பிறக்கிறது. எது அவனைக் கவிதை எழுதத் தூண்டுகிறது என்ற கேள்வியை நூற்றாண்டுகளாகக் கவிஞர்களிடம் கேட்டுவருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட அத்தனை பதில்களுக்கும் வெளியே கவிதை உருவாகும் விதம் ரகசியமாகவும் ஆழ் மனதின் வெளிப்பாடாகவும் விளக்கமுடியாத புதிராகவுமே …

சின்னஞ்சிறு கவிஞன் Read More »

தேசாந்திரி பற்றி

எனது தேசாந்திரி புத்தகம் இன்றுவரை விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்துவருகிறது. இந்த நூல் பற்றி மலேசியாவில் வாழும் வெங்கட்ராமன் சிறப்பான குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார் Desanthiri – S. Ramakrishnan – Blogternator Desanthiri – S. Ramakrishnanwritten by Venky February 22, 2023 Armed with a copy of Dan Cruickshank’s A Portrait of a City in 13 Walks, I arrived in London in December 2022, …

தேசாந்திரி பற்றி Read More »

நீலாம்பூர் சென்றவன்

1980களில் இது நடந்திருக்கலாம். அவரது பெயர் ஜெகநாதராவ். அவருக்கு அலங்கார விளக்குகள் மற்றும் கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்தவகையில் மூன்று லட்சத்து அறுபத்தி மூவாயிரம் ரூபாய் பாக்கியிருந்தது. அந்தப் பணத்தை வசூல் செய்ய யாராலும் முடியவில்லை. நீண்டகாலப் பாக்கியை வசூல் செய்வதற்காக அவனை நீலாம்பூர் அனுப்பி வைத்தார்கள். .•• அவனது பெயரை தெரிந்து கொள்ளும் முன்பு, அவன் ஏன் நீலாம்பூருக்கு செல்ல விரும்பினான் என்பதைத் தெரித்துக் கொள்வது முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு விடிகாலையில் அவனுக்கு ஒரு …

நீலாம்பூர் சென்றவன் Read More »

கன்னடத்தில்

காந்தியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் சிறுகதைகளைத் தேர்வு செய்து கன்னடத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் கே. நல்லதம்பி. இந்த நூலில் எனது சிறுகதை இடம் பெற்றுள்ளது.

பசியற்றவள்

அயர்லாந்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பேரதிர்ச்சி இன்றும் அவர்கள் ஆழ்மனதில் படிந்திருக்கிறது. அந்த நினைவுகளின் வெளிப்பாடு போலவே The Wonder திரைப்படம் உருவாகியுள்ளது, செபாஸ்டியன் லீலியோ இயக்கியுள்ள இந்தப் படம் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சிறுகதையைப் படிப்பது போல விந்தையும் நிஜமும் ஒன்று கலந்திருக்கிறது. கதையின் மகத்தான விந்தையாக முன்வைக்கப்படுவது பசியே. அன்னா என்ற சிறுமி நான்குமாதங்களாக எதையும் சாப்பிடுவதில்லை. அவளிடமிருந்து பசி மறைந்துவிடுகிறது. அவள் உணவு உட்கொள்ளாமலே உயிர்வாழுகிறாள். இந்த விந்தையை ஊர் மக்களால் புரிந்து …

பசியற்றவள் Read More »

தலைகள் இரண்டு

புதிய சிறுகதை பிப்ரவரி 16 2023 குளோபல் செக்யூரிட்டி சிஸ்டம் நிறுவனத்தில் மனோகர் வேலை செய்து கொண்டிருந்தான். கண்காணிப்புக் கேமிரா பொருத்துவது தான் அவனது பணி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குளோபல் செக்யூரிட்டி சிஸ்டத்தில் வேலை கிடைத்தது. மூன்று மாத பயிற்சி கொடுத்தார்கள். அதன்பிறகு நேரடியாகக் கண்காணிப்புக் கேமிரா பொருத்தும் பணியில் ஈடுபடத் துவங்கிவிட்டான் அவனது நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது. அவர்கள் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி தருவதுடன் அதன் பராமரிப்பு பணியினையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் …

தலைகள் இரண்டு Read More »

கதைகளின் நாற்காலி

இயக்குநர் வசந்தபாலன் (கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து இயக்குநர் வசந்தபாலன் எழுதியுள்ள குறிப்பு.) எஸ்ரா சிறுகதைகளின் கருவைக் கண்டடைவதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.வரலாற்று மனிதர்கள் தவற விடும் இடைவெளிகளைக் கச்சிதமாக எடுத்து கதைகளாக்கிவிடுவார். அப்படி இந்த 125 குறுங்கதைகளில் பல அற்புதமான கதைகள் உள்ளன. உலகின் உயர்ந்த இலக்கியமாகக் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னகரீனாவில் அன்னாகரீனா தனது மகனுக்காக பொம்மை வாங்கினாள் என்ற இடத்தை அபகரித்து ஒரு கதை எழுதியிருக்கிறார். தன்னைப்பிரிந்து வாழும் மகனுக்கு “உண்மையில் அன்னா …

கதைகளின் நாற்காலி Read More »

நகரம் விழுங்கிய மனிதர்கள்.

ஆற்றின் சுழல் நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவதைப் போலச் சில நாவல்கள் நம்மை அதன் ஆழத்திற்குள் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தபிறகும் அதிலிருந்து வெளிவர முடியாது. மனதில் கதாபாத்திரங்கள் நடமாடியபடியே இருக்கும். அப்படியொரு நாவல் தான் அன்னையின் குரல். ஆப்பிரிக்க நாவலான இதை எழுதியவர் ஆலன் பேடன் ஆலன் பேடனின் புகழ்பெற்ற நாவலான Cry, the Beloved Country தமிழில் அன்னையின் குரல் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவல் குறித்த கவனம் தமிழ்ச் சூழலில் உருவாகவில்லை. …

நகரம் விழுங்கிய மனிதர்கள். Read More »