admin

அப்பாவின் பெயர்

புதிய சிறுகதை பிப்ரவரி 9 2023 பேராசிரியர் அருண்சர்மா தொலைபேசியில் அவளை அழைத்தபோது இரவு ஒன்பது மணியிருக்கும். அவரது குரலில் அவசரம் தெரிந்தது “சகுந்தலா உங்கப்பா வீட்டுக்கு வந்துட்டாரா“ “இல்லை. ஏதோ மீட்டிங் இருக்குனு வெளியே போயிருக்கார் இன்னும் வரலை“ “அவர் ஐசிஎல் அவார்ட் செலக்சனுக்குப் போயிருக்கார். அதுல உன் பேரு இருக்கு. அவர் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லலையா“ “இல்லையே. “ “மூணு நடுவர்ல உங்கப்பாவும் ஒருத்தர். நிச்சயம் உனக்கு அவார்ட் கிடைக்கும்னு நினைக்குறேன்“ “லிஸ்ட்ல …

அப்பாவின் பெயர் Read More »

தர்மகீர்த்தியின் மயில்கள்

புதிய சிறுகதை பிப்ரவரி 7 2023 இந்தக் கதையில் நடக்கும் நிகழ்வுகள் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கக்கூடும். அல்லது அந்த நூற்றாண்டில் பல்லவ இளவரசனாக இருந்த தர்மகீர்த்தி பற்றியதாக இருக்கவும் கூடும். தர்மகீர்த்தி ஒரு சிறுகாப்பியம் எழுதியிருக்கிறார். அதன் பெயர் தர்மகீர்த்தியாணம். முடிமன்னர்கள் கவிஞராக மாறுவதும் கவிதைகள் எழுதி அங்கீகாரம் கேட்பது தமிழ் கவிதை மரபின் விசித்திரம். தன்னிடம் இல்லாத எந்த அங்கீகாரத்தைக் கவிதையின் வழியே மன்னர் அடைய முற்படுகிறார் என்பது புரியாதது.. தோல்வி தான் மன்னர்களைக் …

தர்மகீர்த்தியின் மயில்கள் Read More »

வலது கன்னம்

புதிய சிறுகதை. பிப்ரவரி 3. 2023 வீட்டுச் சாமான்கள் முழுவதையும் வேனில் ஏற்றியிருந்தார்கள். அந்த வேன் முதுகில் வீட்டை தூக்கிச் செல்லும் பெரியதொரு நத்தையைப் போலிருந்தது ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் எப்படியிருந்தன என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவனுக்குப் பதிநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. ஆனால் பத்துவயது பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். போலீஸ் கட்டிங் போல வெட்டப்பட்ட தலை. கழுத்து எலும்புகள் சற்றே துருத்திக் கொண்டிருந்தன. முதன்முறையாக அவர்கள் வேனில் பயணம் …

வலது கன்னம் Read More »

ஆங்கிலத்தில்

எனது வானில் எவருமில்லை சிறுகதையை ஆர்.சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை Borderless இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு https://borderlessjournal.com/2023/01/20/nobody-in-the-sky/

தொப்பி அணிந்த டால்ஸ்டாய்.

ஜி.கோபி மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த வாசிப்பனுபவம் •• மண்டியிடுங்கள் தந்தையே நாவல் திறந்த வேகத்தில் வாசித்து முடித்துவிடக் கூடிய எளிய சுவாரசியமான புத்தகம். ஆனாலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வாசித்தேன். ரஷ்யவில் யஸ்யானா போல்யானா பண்ணைக்குச் சென்று டால்ஸ்டோயை பார்த்து உடன் பழகியது போல இருந்தது. அந்தப் பண்ணையின் மீதுள்ள ஒரு மணற் குன்றின் மீது நின்று கொண்டு அங்குள்ள விவசாயிகளோடு தொப்பி அணிந்த படி டால்ஸ்டோய் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எந்த …

தொப்பி அணிந்த டால்ஸ்டாய். Read More »

வெயிலின் சங்கீதம்

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் குறித்த வாசிப்பனுபவம் சுயாந்தன் (Suyaanthan Ratneswaran )· ** நாதஸ்வர இசையினையும் அதனை வாசிக்கும் கலைஞர்கள் பற்றியதுமான அற்புதமான  ஒரு நாவல் “சஞ்சாரம்”. கி.ராவுக்கு பின்னர் தமிழில் நாதஸ்வரம் பற்றி அதிகம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்றே நினைக்கிறேன்.  இந்த நாவலை வாசித்து விட்டுக் கோயில்களில் நாயனம் வாசிக்கும் ஒரு வித்துவானிடம் உங்கள் கலையைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் நானூறு பக்கத்தில் பெருங்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதில்  அசுரவாத்தியம் என்று அவர் …

வெயிலின் சங்கீதம் Read More »

முடிவில்லாப் போராட்டம்

நீதி மறுக்கப்பட்ட ஒருவனின் போராட்டத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது Ghodwa. 2021ல் வெளியான துனிசியப்படம். துனியப்புரட்சிக்குப் பிந்திய அரசியல் சூழலை விவரிக்கும் இப்படத்தை இயக்கியவர் தாஃபர் எல்’அபிதீன். இவரே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அதிகாரத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞரான ஹபீப் தீவிரமான மனச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார். புரட்சிக்கு முந்திய அரசின் மோசமாக வன்கொடுமையால் அவரைப் போலப் பலரும் பாதிக்கப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். புரட்சி அரசாங்கம் உருவானதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹபீப் நம்பினார். ஆனால் …

முடிவில்லாப் போராட்டம் Read More »

கோபத்தின் எடை

புதிய சிறுகதை. 2023 ஜனவரி 28. நீண்டநேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது பிரேமாவிற்குக் கால் சூகை பிடித்துக் கொண்டது. பேருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்த போது இரவு மணி பதினோறு இருபதைத் தாண்டியிருந்தது பஸ்ஸை விட்டு இறங்கி காலை உதறிக் கொண்டாள். தலையில் போடப்பட்ட முக்காட்டினை விலக்கி சேலையைச் சரிசெய்து கொண்டாள். மூக்குக்கண்ணாடியில் படித்த தூசியைச் சேலை நுனியால் துடைத்துக் கொண்டாள். மனதில் கோபம் நிரம்பிவிட்டால் ஏனோ கால் வீங்கிவிடுகிறது. வீட்டிலிருந்த போதும் இதை உணர்ந்திருக்கிறாள். பேருந்து …

கோபத்தின் எடை Read More »

கவிஞனும் கவிதையும் 1 பொதுவெளியின் குரல்

பிரிட்டனில் சென்ற ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை ஒன்றில் நம்முடைய காலத்தில் கவிதை பொதுவெளியின் குரல் என்பதிலிருந்து உருமாறித் தனிப்பட்ட உரையாடலாகச் சுருங்கிவிட்டது என்று வால்டர் பிளமிங் குறிப்பிடுகிறார். அவரது கட்டுரையில் இன்று கவிதை வாசிப்பவர்களாகக் கவிஞர்களும் குறைவான வாசகர்களும் மட்டுமே இருக்கிறார்கள். கவிதை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் ஒன்றைப் போலிருக்கிறது . கவிதைக்கான பிரத்யேக மொழியும் சிறப்பு வடிவங்களும் தேய்ந்து கவிதையென்பது சிறிய உரைநடைபோல மாறிவிட்டது என்றும் விவரிக்கப்படுகிறது இந்தக் கட்டுரை …

கவிஞனும் கவிதையும் 1 பொதுவெளியின் குரல் Read More »

போர்ஹெஸ் துப்பறிகிறார்

லூயிஸ் பெர்னாண்டோ வெரிசிமோ பிரேசிலின் புகழ்பெற்ற எழுத்தாளர், போர்ஹெஸ் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் BORGES AND THE ETERNAL ORANG-UTANS என்ற நாவலை எழுதியிருக்கிறார் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆங்கில நாவல்கள் விற்கும் பழைய புத்தகக்கடை குவியல் ஒன்றினுள் இந்த நாவலைக் கண்டெடுத்தேன். எட்கர் ஆலன் போ பற்றிய கருத்தரங்கிற்காகப் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வருகை தரும் வோகெல்ஸ்டீன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு துப்பறியும் கதையை எழுதியிருக்கிறார். வியப்பூட்டும் இந்த நாவலில் போர்ஹெஸ் துப்பறியும் …

போர்ஹெஸ் துப்பறிகிறார் Read More »