தெலுங்கு சிறுகதை தொகுப்பில்
மொழிபெயர்ப்பாளர் பாலாஜி தமிழிலிருந்து சிறந்த கதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது
மொழிபெயர்ப்பாளர் பாலாஜி தமிழிலிருந்து சிறந்த கதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது
(இடக்கை ‘ நாவல் விமர்சனம்; நெய்வேலி பாரதிக்குமார் அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார். போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை …
இன்று வெளியாகியுள்ள இந்து தமிழ் நாளிதழில் இந்திய இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். https://www.hindutamil.in/news/literature/929422-todays-indian-literature.html
தைத்திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் இன்று துவங்குகிறது. கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி. அவர்கள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்நிகழ்வு பெரும்கலைவிழாவாக மாநகரம் எங்கும் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறையும் கலை பண்பாட்டுத் துறையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கிய சங்கமம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் அடையாறு ராஜரத்தினம் அரங்கில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இலக்கிய நிகழ்வினை கவிஞர் இளையபாரதி ஒருங்கிணைப்பு செய்கிறார். 16ம் தேதி மாலை …
சமகால ஐஸ்லாந்து திரைப்படங்கள் மாறுபட்ட கதைக்களன்களுடன் மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்படுகின்றன. Godland என்ற திரைப்படம் 2022ல் வெளியானது. கான்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது. படத்தின் முன்னோட்டக்காட்சியைக் காணும் போது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த The Mission திரைப்படம் நினைவிற்கு வந்தது.. Roland Joffé இயக்கிய அப்படத்தில் ராபர்ட் டி நீரோ நடித்திருப்பார். படத்தில் Ennio Morricone இசை அபாரமானது,. சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கார் விருது பெற்ற படம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டேனிஷ் பாதிரியார் …
சமீபத்தில் பார்த்த சிறந்த படம். The Banshees of Inisherin. படத்தை இயக்கியிருப்பவர் Martin McDonagh அயர்லாந்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள தீவு ஒன்றில் கதை நிகழுகிறது. இரண்டு நண்பர்களுக்குள் ஏற்படும் பிரிவையும் அதன் விளைவுகளையும் பேசும் இப்படம் நட்பின் நிலைகுலைவை அழுத்தமாகச் சித்தரிக்கிறது இசைக்கலைஞரான கோல்ம் டோஹெர்டி எளிய விவசாயியான பாட்ரைக் உடன் நீண்டகாலமாக நட்புடன் பழகுகிறார். இருவரும் ஒன்றாகக் கூடிக் குடிக்கிறவர்கள். சகல விஷயங்களையும் பற்றி அரட்டை அடிக்கக் கூடியவர்கள். திடீரென ஒரு நாள் …
மூன்று நாட்களாக தினமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தேன். திரளான கூட்டம். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. வெளியூரிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். நேற்று தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு கோணங்கி வந்திருந்தார். அவரது புதிய நாவல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மாலையில் எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் உதயசங்கர், சாரதி ஆகியோரைச் சந்தித்தேன். அன்னம் அகரம் பதிப்பகம் கதிர் ஹெப்சிபா ஜேசுநாதனின் மா–னீ‘ நாவலின் புதிய பதிப்பு கொண்டு வந்திருக்கிறார். நேற்று அந்த நூலை அவரிடமிருந்து பெற்றுக் …
பு. பிரியதர்சினி · அரூ இணைய இதழில் வெளியானது, என்னுடைய வாசிப்பு, திரைப்பட ஆர்வம் என எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரம் ஆனந்த விகடன். வாரா வாரம் வீட்டுக்கு வரும் விகடன் கூடவே எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சாதனையாளர்கள் சாமானியர்கள் எனப் பலரைக் கைப்பிடித்துக் கூட்டி வரும். அந்த வகையில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகம். ஆனந்த விகடனில் வந்த ‘சிறிது வெளிச்சம்’ தொடர் அவரை எனக்கு வெளிச்சம் காட்டியது. அந்த தொடரில் அவர் கதை, …
நேற்று மாலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். வாகன நெரிசலில் உள்ளே நுழைய முடியவில்லை. மிக நெருக்கமாக அரங்கு அமைத்துள்ளார்கள். ஆட்கள் இடித்துக் கொண்டு போகுமளவு நடைபாதை மிக குறுகலாக உள்ளது. எந்தக் கடை எங்கே உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகச் சவாலான வேலை. வழக்கமாக இதற்கு ஒரு வரைபடம் தருவார்கள். அது இன்னும் தயாராகவில்லை என்றார்கள். தேசாந்திரி பதிப்ப அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அதில் சிலர் ஒவ்வொரு ஆண்டும் எனது அரங்கிற்கு வந்து …
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்து முதுநிலை கல்வெட்டியல் பயிலும் தரணி லெட்சுமணன் எழுதியுள்ள வாசிப்பனுபவம். படைப்பு தகவு இதழில் வெளியாகியுள்ளது நன்றி படைப்பு தகவு