admin

மணிபாரதி – அரவான்

எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நடத்துகிறார். இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பிஸியோதெரபிஸ்டான மணிபாரதி தொடந்து அழகம்மை அரங்கம் சார்பாக நவீன நாடகங்களை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு முன்னர் எனது “கொஞ்சம் இனிப்பு அதிகம்” என்ற சிறுகதையை நாடகமாக இயக்கியிருந்தார். ஞானராஜ சேகரன் ஐஏஎஸ்  “ராமானுஜன்” திரைப்படத்தில் மணிபாரதியை கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார்.  அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மணிபாரதி நடித்துள்ளார் …

மணிபாரதி – அரவான் Read More »

நெற்றியில் தேள் கொண்டவள்

ரஃபேல் வரைந்த எலிசபெத் கோன்சாகா உருவப்படத்தில் எலிசபெத்தின் நெற்றியில் ஒரு தேள் உருவம் காணப்படுகிறது. தேள் வடிவிலான தலைச்சுட்டி ஒன்றை எலிசபெத் அணிந்திருக்கிறார். இது அந்தக் காலத்தில் தீவினையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இளம்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடியது என்கிறார்கள். நிஜமாகவும் இருக்கலாம், எலிசபெத்தின் நெற்றியிலுள்ள தேள் அவளது சோகமான, எதையோ சொல்ல முயன்று தயங்குகின்ற முகத்திற்குக் கூடுதல் வசீகரம் தருகிறது. இந்த ஓவியம் 1504ல் வரையப்பட்டது எலிசபெத் அர்பினோ டியூக்கின் மனைவி. கலை இலக்கியங்களில் தீவிர விருப்பம் …

நெற்றியில் தேள் கொண்டவள் Read More »

ஜாய்ஸின் டப்ளின்

ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய யூலிசிஸ் நாவலின் கடைசிவரி yes I said yes I will Yes. மோலியின் கூற்றாக வரும் இந்த வரியில் வரும் யெஸ் என்பது ஒரு இடைவெட்டு. ஒரு ஆமோதிப்பு. தளர்வு, எதிர்ப்பின் முடிவு, நிதர்சனமான உண்மை. கடந்தகாலத்தின் குரல் எனப் பல்வேறுவிதங்களில் சொல்லலாம். இந்த வரியை மிகவும் சோகமாக வரி எனக் குறிப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் இதை “the female word” என்கிறார். நாவலின் கடைசிப் பத்தி “I was a …

ஜாய்ஸின் டப்ளின் Read More »

ஓவியத்தில் சிறகடிக்கும் பறவைகள்

எனது பள்ளியில் வாரம் ஒரு நாள் ஓவிய வகுப்பு இருந்தது அதில் முதலில் வரைய கற்றுக் கொள்ளும் போது மாணவர்கள் அனைவரும் காகம் வரைவார்கள். காகத்தை வரைவது எளிதானது. சிறிய கோடுகளால் எளிதாக வரைந்துவிட முடியும். ஆனால் அதில் துல்லியமிருக்காது. ஒரு குருவியை அல்லது புறாவை வரைவது அந்த வயதில் கடினமானது. ஆர்வமுள்ள சில மாணவர்கள் தோகை விரித்த மயிலை வரைவார்கள். துல்லியமாக வரைந்து பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரும் ஆந்தையை, மீன்கொத்தியை, மரங்கொத்தியை வரைய முற்பட்டதில்லை. …

ஓவியத்தில் சிறகடிக்கும் பறவைகள் Read More »

அரவான் நாடகம்

நான் எழுதிய அரவான் நாடகம் சிறந்த நடிகரும் பதிப்பாளருமான கருணாபிரசாத் இயக்கி நடித்து பல்வேறு ஊர்களில் நிகழ்த்தப்பட்டது அந்த நாடகம் தனி நூலாகவும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு குயின்மேரீஸ் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அரவான் நாடகம் மலையாளத்திலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளின் முன்பு புதுவையில் நாடக கலைஞர் சுகுமார் இந்த நாடகத்தை சிறப்பாக நிகழ்த்தினார். இப்போது இந்த நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி சிறுநாடகமாக உருவாக்கியிருக்கிறார் பத்துநிமிஷங்கள் கொண்ட நாடகங்களுக்கான விழாவில் இடம்பெறுகிறது Short+Sweet Theatre …

அரவான் நாடகம் Read More »

ரகசியக் கதைசொல்லி

ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் கதைத்தொகுப்பை எழுதியவர் யார் எனத் தெரியாது. அது ஒரு தொகைநூல். அதில் பல்வேறு காலகட்டங்களில் கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்று நாம் வாசிப்பது பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரெஞ்சு பதிப்பு. அதிலிருந்து ஆங்கிலப்பதிப்புகள் வந்திருக்கின்றன. ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மொழியாக்கமும் இது போலச் சொந்த சரக்குகள் கொண்டதே என்கிறார்கள். இன்று அரபு மூலப்பிரதிகளுடன் ஒப்பிட்டு நிறைய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிப்படுகின்றன அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை மற்றும் …

ரகசியக் கதைசொல்லி Read More »

சேலத்தில்

சேலம் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசக சாலை இணைந்து நடத்தும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் எனது சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல் நாளை மாலை நடைபெறுகிறது.

காஷ்மீரின் குளிர் நிலவு

ஆஹா சாகித் அலியின் கவிதைகளை கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறுநூலாக வெளியாகியுள்ளது. The Country Without a Post Office என்ற இவரது கவிதைத் தொகுப்பினை வாசித்திருக்கிறேன். சிறந்த கவிதைகளைக் கொண்டது. ஆகா சாகித் அலி 1949ல் காஷ்மீரில் பிறந்தவர். அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேயே பல ஆண்டுகள் வசித்தவர். டிசம்பர் 8, 2001ல் மூளையில் ஏற்பட்ட கட்டியின் பாதிப்பால் காலமானார். புலம்பெயர்ந்த கவிஞராக அறியப்படும் சாகித் அமெரிக்காவில் வசித்தாலும் …

காஷ்மீரின் குளிர் நிலவு Read More »

செராபியத்தின் அழிவு

அகோரா 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இப்படத்தில் அலெக்சாண்ட்ரியாவின் புகழ்பெற்ற நூலகம் அழிக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. எதற்காக நூலகத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அறிவின் சேகரமாகவும் அறிவியலின் ஊற்றுக்கண்ணாகவும் அது செயல்படுகிறது என்பதால் தான். நூலகத்தைக் காப்பாற்றுவதற்காக அதன் மாணவர்கள் போராடுவதும் நூலக வளாகம் அடித்து நொறுக்கப்பட்டு ஏடுகள் தீக்கரையாவதைப் பார்த்தபடியே ஹைபேஷியா தப்பியோடுவதும் மனதை உலுக்கக்கூடிய காட்சிகள் இப்படம் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வானியலாளரும் தத்துவஞானியுமான ஹைபேஷியாவினை முதன்மைப்படுத்துகிறது. அத்தோடு அலெக்சாண்ட்ரியாவின் அன்றைய பெருமைகளையும் …

செராபியத்தின் அழிவு Read More »

அஞ்சலி

தனித்துவமிக்க சிறுகதை படைப்பாளியாகவும் இடதுசாரி சிந்தனை கொண்ட தீவிர சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கிய தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலி.