admin

புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பக அரங்கில் புதிய நூல்கள் யாவும் கிடைக்கும்

ஒரு நாள் மகிழ்ச்சி

The Girl from Dak Lak என்ற வியட்நாம் திரைப்படத்தைப் பார்த்தேன். 2022ல் வெளியான இப்படத்தைப் பெட்ரோ ரோமன் சி மாய் இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். வியட்நாமின் கிராமப்புறத்தைச் சேர்ந்த சுயோங் என்ற இளம் பெண் தனது வீட்டில் சமையல் செய்வதில் படம் துவங்குகிறது. உடல்நலமற்ற தந்தைக்கு அவளே உணவு புகட்டிவிடுகிறாள். அம்மாவும் பக்கத்துவீட்டுப் பெண்களும் சுயோட் வீட்டின் பொருளாதார நெருக்கடியைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். வேலை தேடி நகருக்குப் போகலாம் என்று சுயோங் நினைக்கிறாள் தோழி …

ஒரு நாள் மகிழ்ச்சி Read More »

புத்தக வெளியீட்டுவிழா. புகைப்படங்கள்

நேற்று எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. நூல்களை வெளியிட்டு சிறப்பித்தார் ஆனந்தகுமார் ஐஏஎஸ். சிறப்பு விருந்தினராக இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டார். ஆசான் எஸ்.ஏ.பெருமாள். எழுத்தாளர் உதயசங்கர், பொன் மாரியப்பன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள் நூல்வெளியீட்டினைத் தொடர்ந்து பால்சாக் பற்றி சிறப்புரை ஆற்றினேன் புத்தகங்களைச் சிறப்பாக அச்சிட்டு உதவிய மணிகண்டன். புத்தகத் தயாரிப்பில் உறுதுணை செய்த ஹரிபிரசாத், அன்புகரன். நிகழ்வு ஒருங்கிணைப்பில் உதவிய சண்முகம், தூத்துக்குடியிலிருந்து வந்த பொன் மாரியப்பன். …

புத்தக வெளியீட்டுவிழா. புகைப்படங்கள் Read More »

பால்சாக் பற்றிய சிறப்புரை

உலக இலக்கியத்தினை அறிமுகம் செய்யும் விதமாக நிறைய உரைகள் ஆற்றியிருக்கிறேன். இதன் வழியே மகத்தான படைப்பாளிகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் படைப்புகளைக் கொண்டாடவும் முடிந்திருக்கிறது. இந்த முறை டிசம்பர் 25 ஞாயிறு மாலை பிரெஞ்சு இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளி பால்சாக் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன். தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்வு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது பால்சாக்கின் வாழ்வு மற்றும் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. யதார்த்தவாத எழுத்தின் நாயகராகக் கொண்டாடப்படும் …

பால்சாக் பற்றிய சிறப்புரை Read More »

புதிய புத்தகங்கள்-3

டிசம்பர் 25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் மற்றும் அரிய ஓவியங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நிறங்களை இசைத்தல் வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள்-2

டிசம்பர் 25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது அதில் உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு வான் கேட்கிறது வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள்-1

டிசம்பர் 25 மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது அதில் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு பகலின் சிறகுகள் வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிக்கோ மன்றம், சி.ஐ.டி காலனி,மயிலாப்பூர்,சென்னை – 600 004

புலிக்கட்டம் – மொழியாக்கம்

எனது புலிக்கட்டம் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் பரத் குமார்.www.usawa.in இணைய இதழில் கதை வெளியாகியுள்ளது நன்றி : https://www.usawa.in/issue-8/Translation/lambs-and-tigers-bharath-kumar.html