admin

பொள்ளாச்சியில்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நூறாவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் அக்டோபர் 16 ஞாயிறு காலை பொள்ளாச்சி என்,ஜி. எம் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

அரூ இதழில்

அக்டோபர் மாத அரூ இணைய இதழில் எனது சிறுகதை மற்றும் இரண்டு குறுங்கதைகள் வெளியாகியுள்ளன இணைப்பு –  https://aroo.space/issue-15/

விழித்திருப்பவனின் இரவு

அசோக் The idiot   என்ற வலைப்பதிவில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அசோக் என்ற இலக்கிய வாசகர் எழுதியுள்ள குறிப்பு. ஆழ்ந்த வாசிப்பிலிருந்து உருவான பதிவு என்பதால் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் ••• இரவில் விழித்திருந்து வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. என் மேசை அருகே ஒரு ஜன்னலுண்டு. ஜன்னல் வெளியே ஒரு மரமுண்டு. மரங்களில் எப்போதும் பறவைகள் வந்து அமர்வதுண்டு. இரவில் நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு எழுத்தாளரும் அம்மரத்தில் அமர்ந்து எனக்காக பாடும் அல்லிசைப் புள் என …

விழித்திருப்பவனின் இரவு Read More »

இஸ்மாயில் கவிதைகள்

மலையாள, கன்னட இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்குத் தெலுங்கு இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும் சில தெலுங்கு நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்த போதும் அதிகம் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் சமீபமாகக் கவிஞர் இஸ்மாயில் கவிதைகளை வாசித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. அவர் தெலுங்கு நவீன கவிதையின் முக்கியமான கவிஞர் என்பதை உணர்ந்தேன். ஒரு கவிதையில் பறந்து செல்லும் காகத்தின் நிழலைக் கறுப்பு மௌனம் என்று இவர் குறிப்பிட்டிருப்பது கூடுதல் ஈர்ப்பை உருவாக்கியது தத்துவப் பேராசிரியராக இருந்த முகமது …

இஸ்மாயில் கவிதைகள் Read More »

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூலின் வெளியீட்டுவிழா அக்டோபர் 8 மாலை சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் துவங்கியுள்ள புதிய கடையினுள் நடைபெறுகிறது 900 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். தமிழ் சிறுகதையுலகினை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். நூலை நான் வெளியிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொள்கிறார். அண்ணன் தமிழ்செல்வனின் நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நிழலில் கோணங்கியோடு சேர்ந்து வளர்ந்தவன் என்பதால் அந்தப் பசுமையான …

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் Read More »

அன்பு வந்தது

சுடரும் சூறாவளியும் படத்தில் இடம்பெற்ற அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடல் எனக்கு பிடித்தமானது. இந்த பாடல் இருமுறை படத்தில் இடம்பெறுகிறது.தாயினை இழந்த பிள்ளைகளை தந்தை ஆறுதல்படுத்திப் பாடும் பாடல் ஜெமினி நடித்த இப்படத்தின் இசை எம்.எஸ்.வி பாடலை எழுதியவர் கண்ணதாசன். எஸ்பிபி பாடிய அன்பு வந்தது பாடலை எப்போது கேட்டாலும் மனது கரைந்துவிடுகிறது. அருமையான பாடல். எஸ்பிபியின் குரல் அமிர்தமாக இனிக்கிறது. கண் இரண்டில் கலக்கம் இன்றிஅமைதி காணலாம்காலம் வெல்லும் வெல்லும் என்றுஉறுதி கொள்ளலாம் …

அன்பு வந்தது Read More »

ஒரு நாள் கருத்தரங்கம்

பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் எனது படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் நவம்பர் 11 ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. எனது நண்பரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான அபிலாஷ் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் சரளா இருவரும் இணைந்து இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்கிறார்கள். இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். விருப்பமான படைப்பாளிகள். கல்விப்புல ஆய்வாளர்கள், வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். •••• பொழில் மன்றம் பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை …

ஒரு நாள் கருத்தரங்கம் Read More »

ஒரு நாள் நிபந்தனை

இரண்டாம் உலகப் போரின் போது ரோமில் வசித்த யூதர்களை நாடு கடத்தாமல் இருப்பதற்காக ஆல்பர்ட் கெஸ்ஸெல்ரிங் தலைமையில் செயல்பட்ட நாஜி ராணுவம் ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதன்படி ஒரு நாளைக்குள் அவர்கள் ஐம்பது கிலோ தங்கத்தை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் நகரைவிட்டு வெளியேறி சிறை முகாமிற்குச் செல்ல நேரிடும். இந்த நிபந்தனையை யூதர்கள் ஏற்கத் தயங்கினார்கள். குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். ஆனால் யூத சமூகத்தின் மிக உயர்ந்த வணிகர்களோ தங்கத்தைக் கொடுத்து நாஜி …

ஒரு நாள் நிபந்தனை Read More »

புத்தகங்களின் நடுவே

கடந்த ஐந்து நாட்களாகப் பயணத்திலிருந்தேன். இன்று தான் சென்னை திரும்பினேன். திருச்சி மற்றும் மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டேன். திருச்சியில் புத்தகத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்ட நிர்வாகமும் தேசிய புத்தக நிறுவனமும் இணைந்து கண்காட்சியை சிறப்பாக உருவாக்கியிருந்தார்கள். களம் அமைப்பின் சார்பில் உரையாற்ற வருகிறவர்களை வரவேற்று வசதியான தங்குமிடம், ருசியான உணவு கொடுத்துக் கவனித்துக் கொண்டார்கள். 24 சனிக்கிழமை மாலையில் நான் வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். …

புத்தகங்களின் நடுவே Read More »

மன்னிக்கப்படும் குற்றம்

புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றில் காபிக்கடை முதலாளி கடவுளிடமே ஒரு கள்ளநோட்டினைத் தள்ளிவிடுகிறார். கடவுள் அந்த நோட்டினை தனியே எடுத்துக் கிழித்துப் போட்டுவிடுகிறார். துக்ளக் காலம் துவங்கி இன்றுவரை கள்ளநோட்டுப் புழக்கம் இல்லாத காலமேயில்லை. அதுவும் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகும் போது உடனே கள்ளநோட்டுகள் தயாராகிவிடுகின்றன. இன்றைக்கு நாம் எந்தக் கடைக்குப் போய்ப் பணம் கொடுத்தாலும் அது ஒரிஜினல் தானா என்று பரிசோதித்துப் பார்க்கிறார்கள். நூற்றில் ஒரு கள்ளநோட்டு எப்படியோ கலந்துகிடக்கிறது. கள்ளநோட்டு கும்பலைப் பற்றி எத்தனையோ …

மன்னிக்கப்படும் குற்றம் Read More »