admin

மதுரை புத்தகத் திருவிழா

மதுரை புத்தகத்திருவிழா செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறுகிறது இடம் : தமுக்கம் மைதானம் இந்தப் புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. செப்டம்பர் 25 ஞாயிறு மாலை புத்தகத்திருவிழா அரங்கில் உரையாற்றுகிறேன்

பழைய மதராஸ்

பிதியா மேரி க்ரோக்கர் எனப்படும் பி.எம்.க்ரோக்கர் பிரிட்டனைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் 14 ஆண்டுகள் வசித்திருக்கிறார். இதில் சில காலம் வெலிங்டனில் வாழ்ந்திருக்கிறார். 1882 ஆம் ஆண்டுத் தனது 33 வயதில் எழுதத் துவங்கிய க்ரோக்கர் 1919 வரையுள்ள 37 ஆண்டுகளில் 44 நாவல்கள் மற்றும் ஆறு சிறுகதைகளின் தொகுதிகளை எழுதியிருக்கிறார். இவரது நாவல்கள் இங்கிலாந்தில் விரும்பி வாசிக்கபட்டன. சில நாவல்கள் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன. இதில் In Old Madras …

பழைய மதராஸ் Read More »

ஷேக்ஸ்பியரின் ரகசியங்கள்

ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் புரிந்து கொள்வதற்கான சில அடிப்படைகளை உருவாக்கும்விதமாக. Shakespeare and the goddess of complete being என்ற புத்தகத்தைக் கவிஞர் டெட் ஹியூஸ் எழுதியிருக்கிறார். இதில் ஷேக்ஸ்பியரின் ஆரம்பகாலக் கவிதைகளான வீனஸ் அண்ட் அடோனிஸ் மற்றும் தி ரேப் ஆஃப் லுக்ரேஸைக் கொண்டு அவரது நாடகங்களை ஆராய்ந்திருப்பது முக்கியமானது. இந்தக் கவிதைகளை அவரது நாடகங்களின் திறவுக்கோலாக டெட் ஹியூஸ் மதிப்பிடுகிறார். இரண்டு வேறுபட்ட காதல்நிலைகளை சித்தரிக்கும் இந்தக் கவிதைகளிலிருந்து அவரது நாடகங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன என்றும் …

ஷேக்ஸ்பியரின் ரகசியங்கள் Read More »

எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல்

Sahapedia சிறந்த இலக்கியவாதிகளின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளது. எம்.டி. இந்த நேர்காணலில் அவரது படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்துப் பேசியிருக்கிறார்.

தேசாந்திரி அரங்கு

திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது எண் 68 & 69 எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும். செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன். அன்று மாலை நான்கு மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன்

ஃபின்லாந்தியா

Jean Sibelius இசையமைத்த Finlandia மிகச்சிறந்த இசைக்கோர்வை. இம்பீரியல் ரஷ்யாவின் கெடுபிடியான தணிக்கைக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டும் விதமாகவும் ஃபின்னிஷ் மக்களின் நம்பிக்கையினைத் தூண்டும் விதத்திலும் ஜீன் செபெலியஸ் 1899 ல் இதனை உருவாக்கியுள்ளார். ரஷ்ய தணிக்கையைத் தவிர்ப்பதற்காக, ஃபின்லாந்தியாவைப் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் மாற்றுப் பெயர்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள்

காலை உணவுத் திட்டம்

அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளிலுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள். மாணவர்களுக்கு காலை, மதியம் என இருவேளை உணவு வழங்குவதில் இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்வது பெருமையளிக்கிறது. நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் வறுமையான குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களில் சிலர் காலை உணவு …

காலை உணவுத் திட்டம் Read More »

திருச்சி புத்தகத் திருவிழா

திருச்சி புத்தகத் திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெறுகிறது. இடம் : வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானம். திருச்சி நேரம் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இதில் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அங்கே எனது அனைத்து நூல்களும் கிடைக்கும்.

யாமம் தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவை நாவல் குறித்து வெளியான அறிமுகக்குறிப்புகள் இந்த நாவலை தெலுங்கில் ஜி. பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். இவரே தற்போது எனது சஞ்சாரம் நாவலை சாகித்ய அகாதமிக்காக மொழியாக்கம் செய்துள்ளார்

அவளும் அவனும்

கடிதம் வழியாகவே படம் துவங்குகிறது. ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்ட பினா மற்றும் ஆல்ஃபிரடோ கடிதங்களின் வழியே மனதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் காதலர்களாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது. The Visit (1963) என்ற இத்தாலியப்படம் பினாவின் ஒருநாளிற்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது ரயில் நிலையத்தில் படபடப்புடன் காத்திருக்கிறாள் பினா. அங்கே வரும் இரண்டு கன்னியாஸ்திரீகள் அவளது மிகையான ஒப்பனையைக் கண்டு நகைக்கிறார்கள். அவளோ ஆல்ஃபிரடோவின் வருகைக்காக ஆவலாகக் …

அவளும் அவனும் Read More »