admin

குற்றத்தின் பாதை

புதிய சிறுகதை (டெல்லி தமிழ்சங்க மலரில் வெளியானது.) தாத்தாவைக் கைது செய்வதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டிற்கு வந்த ஏப்ரல் மாதத்தின் புதன்கிழமை முற்பகலில் கூர்வாள் போல வெயில் மினுங்கிக் bகாண்டிருந்தது. அப்போது என் வயது பனிரெண்டு. தாதன்குளத்தில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் அப்பாவின் வேலை காரணமாக அம்மாவும் தம்பிகளும் புனலூரில் வசித்தார்கள். என்னை மட்டும் தாத்தா வீட்டில் விட்டிருந்தார்கள். தாத்தாவிற்கு எட்டூர் கண்மாயை ஒட்டி நாலு ஏக்கர் வயலும் கரிசல் நிலமும் இருந்தது. வயலடியில் பெரிய படிக்கிணறு. …

குற்றத்தின் பாதை Read More »

சலூன் நூலக விழா

இரண்டு நாட்களாகத் தூத்துக்குடியிலிருந்தேன். தனது சலூனில் நூலகம் ஒன்றை அமைத்து புத்தக வாசிப்பைப் பரவலாக்கி வரும் பொன் மாரியப்பன் இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். இப்படி ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. மில்லர்புரத்தில் தனது சலூன் உள்ள வீதியிலே மேடை அமைத்து திறந்தவெளிக் கூட்டமாக அமைத்திருந்தார். இருநூறு பேருக்கும் மேலாக வந்திருந்தார்கள். அவரது கடையின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றிப் பொது மருத்துவமனை மருத்துவர்கள், தொழிலதிபர்கள். அரசு அதிகாரிகள். வங்கி அதிகாரி. பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி …

சலூன் நூலக விழா Read More »

உறவும் நட்பும்

கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்-ன் ‘அழிந்தபிறகு‘ நாவலில் வரும் யசவந்தராயர் மறக்கமுடியாத கதாபாத்திரம். தற்செயலாக அவரை ரயில் பயணத்தில் சந்திக்கும் கதைசொல்லி பின்பு மும்பையில் அவரைத்தேடிச் சென்று நட்பு கொள்வது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது ஆசைகளை நிறைவேற்ற முனைவதும் நாவலில் மிகசிறப்பாக எழுதப்பட்டுள்ளது இந்த நாவலில் வரும் கதைசொல்லி பயணத்தை விரும்புகிறவன். நம்முடைய வாழ்க்கையே ஒரு ரயில் பயணம் தான் என்கிறான். நமக்கான இடம் கிடைக்காவிட்டால் பயணத்தில் நின்று கொண்டே பயணிப்பது போன்ற நிலை வாழ்க்கையிலும் …

உறவும் நட்பும் Read More »

என்றாவது ஒரு நாள்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: எஸ்.எம்.ஏ.ராம்) அந்தத் திங்கள் கிழமை மழையின்றி வெதுவெதுப்பாய் விடிந்தது. முறையான மருத்துவப் பட்டம் எதுவுமற்ற பல் மருத்துவர் ஆரிலியோ எஸ்கோவர் விடிகாலையிலேயே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் என்பதால், சரியாய் ஆறு மணிக்குத் தன் அலுவலகத்தைத் திறந்தார். இன்னமும் பிளாஸ்டர் அச்சிலேயே பொருத்தி இருந்த  சில பொய்ப்பற்களைக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து  வெளியில் எடுத்தார். பின், கை நிறையப் பல் சிகிச்சைக் கருவிகளை அள்ளி எடுத்து, அவற்றின் நீளங்களுக்கு ஏற்றவாறு, காட்சிக்கு வைப்பது …

என்றாவது ஒரு நாள் Read More »

கதையாகும் மனிதர்கள்

Niall Williams எழுதிய History of the Rain நாவல் எனக்குப் பிடித்தமானது. இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். சிறிய நாவல். எளிமையான கதை. ரிச்சர்ட் பாக்கை நினைவுபடுத்தும் எழுத்து. இளவயதிலே நோயாளியாகி படுக்கையில் வாழும் ரூத் தன்னைச் சுற்றி நிறையப் புத்தகங்களைக் கொண்டிருக்கிறாள். அவளது கட்டில் படகு போன்ற வடிவில் இருக்கிறது. நோயாளியான அவளுக்கு வேதனையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி புத்தக வாசிப்பு மட்டுமே. புத்தகங்களின் வழியாக அவள் தனது தந்தையைத் தேடுகிறாள். கதை என்பது …

கதையாகும் மனிதர்கள் Read More »

ராபர்ட் போல்ட்

டேவிட் லீன் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் அவர் தனது படங்களின் திரைக்கதை ஆசிரியர் ராபர்ட் போல்ட் பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். ராபர்ட் போல்ட் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர். டேவிட் லீனின் முக்கியப் படங்கள் யாவும் அவர் எழுதியவை. ராபர்ட் போல்ட் எழுதித்தருவதில் மிகக் குறைவாகவே மாற்றம் செய்வேன். மற்றபடி அவரது எழுத்துப்பணியில் குறுக்கிட மாட்டேன். திரைக்கு ஏற்ப ஒரு காட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவரை விடச் சிறப்பாக எவராலும் வசனம் …

ராபர்ட் போல்ட் Read More »

Katha Vilasam: The Story Within

எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் பி.சி. ராமகிருஷ்ணா மற்றும் மாலினி சேஷாத்ரி. Katha Vilasam: The Story Within offers a path-breaking series of 50 articles by S. Ramakrishnan, published over the course of two years in the widely read Tamil magazine Ananda Vikatan, to a wider reading public through translation into English. The writing style is …

Katha Vilasam: The Story Within Read More »

காந்தி தொகை நூல்

Mahatma Gandhi in Indian Language Series என்றொரு வரிசையை காந்தி பவுண்டேஷன் வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழில் காந்தி பற்றி வெளியான முக்கியப் படைப்புகளை எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் தொகுத்துள்ளார். த.கண்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்தத் தொகுப்பில் எனது படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. சுனில் கிருஷ்ணன் மற்றும் த. கண்ணனுக்கு மனம் நிறைந்த நன்றி.

சலூன் நூலகம் நடத்தும் விழா.

பொன்மாரியப்பன் தூத்துக்குடியிலுள்ள தனது சலூனில் நூலகம் அமைந்து அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் பொன்மாரியப்பனுடன் உரையாடி நூலகம் நடத்தி வருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை சலூனில் வைத்திருக்கிறார். பொன்மாரியப்பன் எனது தீவிர வாசகர். இவரது சலூனில் எனது இலக்கிய உரைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறார். தற்போது புத்தக வாசிப்பை வளர்க்கும் விதமாக இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். …

சலூன் நூலகம் நடத்தும் விழா. Read More »

நேற்றின் நிழல்கள்

அபராஜிதோ என்ற தலைப்பைக் கேட்டதும் சத்யஜித்ரேயின் புகழ்பெற்ற திரைப்படமே நினைவிற்கு வரும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள அபராஜிதோ (Aparajito 2022) சத்யஜித்ரேயைக் கற்பனைக் கதாபாத்திரமாக்கி, பதேர் பாஞ்சாலி உருவான அனுபவத்தை விவரிக்கிறது. இப்படத்தை அனிக் தத்தா இயக்கியுள்ளார். சத்யஜித்ரேயாக நடித்துள்ள ஜீது கமல் அப்படியே இளவயது ரேயின் தோற்றம் கொண்டிருக்கிறார். அவரது உடல்மொழியும் துல்லியமாக ரேயைப் பிரதிபலிக்கிறது. அவரது தேர்ந்த நடிப்பு மற்றும் சுப்ரதிம் போலின் ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பாகும். சாந்திநிகேதனில் ஓவியம் பயின்று விளம்பர நிறுவனத்தில் …

நேற்றின் நிழல்கள் Read More »