புத்தக வெளியீட்டுவிழா. புகைப்படங்கள்

நேற்று எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

நூல்களை வெளியிட்டு சிறப்பித்தார் ஆனந்தகுமார் ஐஏஎஸ்.

சிறப்பு விருந்தினராக இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

ஆசான் எஸ்.ஏ.பெருமாள். எழுத்தாளர் உதயசங்கர், பொன் மாரியப்பன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள்

நூல்வெளியீட்டினைத் தொடர்ந்து பால்சாக் பற்றி சிறப்புரை ஆற்றினேன்

புத்தகங்களைச் சிறப்பாக அச்சிட்டு உதவிய மணிகண்டன். புத்தகத் தயாரிப்பில் உறுதுணை செய்த ஹரிபிரசாத், அன்புகரன். நிகழ்வு ஒருங்கிணைப்பில் உதவிய சண்முகம், தூத்துக்குடியிலிருந்து வந்த பொன் மாரியப்பன். அருண்பிரசாத் மற்றும் நண்பர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள். நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி

நிகழ்வினைப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதிடிவி கபிலனுக்கு அன்பும் நன்றியும்

0Shares
0