திரைப்பயணி 14
திரைப்பயணி தொடரில் Once Upon a Time in the West திரைப்படம் குறித்து உரையாற்றியுள்ளேன்
“மக்கள் ஒரு தடயமும் இல்லாமல் தொலைந்து போகிறார்கள், சில வேளைகளில் தங்கள் தடயங்களை மறைக்கிறார்கள், சிலர் மறைக்கப்பட்ட தடயங்களைக் காண்கிறார்கள். சில நேரங்களில், கிட்டத்தட்ட ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து, பின்னர் வேறு எங்காவது தோன்றி, புதிதாகக் காணாமல் போகிறார்கள். இந்த நாட்களில் அமைதிக்கும் இருளுக்கும் உள்ள உறவை எவ்வாறு விவரிப்பது? இப்போதெல்லாம் துயரமான இடங்கள் கூடப் பயங்கரமான சத்தத்தாலும், பயங்கரமான வெளிச்சத்தாலும் நிரம்பியுள்ளன“ – லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் ஹங்கேரிய நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் இந்த ஆண்டிற்கான …
எனது தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூலை வாசித்துவிட்டு தங்ககோபி என்ற மாணவன் அஞ்சல் அட்டை அனுப்பி வைத்திருக்கிறான். அதில் முதன்முறையாக தான் தபால் பெட்டியை பார்த்த அனுபவம் பற்றி எழுதியுள்ளான். படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தற்போது அந்நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகும் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை காமிக்ஸ் புத்தகமாக கொண்டு வர வேண்டும் …
திரைப்பயணி தொடரின் 12 வது பகுதியில் Cinema Paradiso திரைப்படம் பற்றி உரையாற்றியுள்ளேன்
திரைப்பயணி தொடரின் 11 வது பகுதியில் Doctor Zhivago திரைப்படம் குறித்து உரையாற்றியுள்ளேன்
அரா குலார் (Ara Güler) துருக்கியின் தலைசிறந்த புகைப்படக்கலைஞர். இவர் தன்னை Visual Historian என்றே அடையாளப்படுத்துகிறார். 2018ல் காலமான இவரது புகைப்படங்களை வரலாற்று ஆவணங்களாகக் கருதுகிறார்கள். இஸ்தான்புல்லின் கண் என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஓரான் பாமுக் இஸ்தான்புல் குறித்த தனது நூலில் இவரைக் குறிப்பிடுகிறார். அத்துடன் இவரது புகைப்படங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். புகழ்பெற்ற ஆளுமைகளை மட்டுமின்றி தினசரி வாழ்க்கை காட்சிகளையும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார். பிக்காசோ, டாலி உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்களையும் …
தமிழக அரசால் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் அழைப்பில் நேற்று அங்கே சென்று செய்தியும் கதையும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். கதையும் செய்தியும் எப்படி வேறுபடுகிறது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களான ஹெமிங்வே, மார்க்வெஸ் போன்றவர்கள் எப்படிப் பத்திரிக்கையுலகிலிருந்து எழுத்தாளர்களாக உருவானார்கள். பாரதியார், காந்தியடிகள் நடத்திய பத்திரிக்கைகள். தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான விஷயங்கள். டிஜிட்டில் உலகில் செய்தியின் இடம் மற்றும் தரம். இளம் பத்திரிக்கையாளர் பயில வேண்டிய அடிப்படைகள் விஷயங்கள் எவை என்பது குறித்து …
தி காட் ஃபாதர் படத்தின் சிறப்புக் காட்சிகள் சென்னையின் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. நேற்று இரவு அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். அரங்கு நிறைந்த கூட்டம். பெரிதும் இளைஞர்கள். அதிலும் திரைத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள். தி காட் ஃபாதர் படத்தை எல்டி, ப்ளூ ரே டிஸ்க் வழியாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆயினும் அதனைத் திரையில் காணுவது பரவசமளிக்கும் அனுபவம். 1972ல் வெளியான இப்படம் ஐம்பது ஆண்டுகளைக் கடந்ததை முன்னிட்டு 2022ல் சிறப்புக்காட்சிகளைத் திரையிட்டார்கள். அன்றும் இதே அளவு …