அறிவிப்பு

மதுரை சந்திப்பு

உயிரோசை இணைய தளத்தின்  ஓராண்டு நிறைவு விழாவினை ஒட்டி உயிர்மை பதிப்பகம் நிகழ்ச்சி ஒன்றினை ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை காலை  மதுரையில் நடத்துகிறது.   இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும் – உயிரோசையை முன் வைத்து   என்ற அமர்வில் நானும் சாருநிவேதிதாவும்  சிறப்புரையாற்ற இருக்கிறோம். இதுதவிர 10 நூல்களையும் உயிர்மை அங்கே வெளியிடுகிறது. முக்கிய படைப்பாளிகளும் விமர்சகர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.   நாள்: 30.8.20009 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஹோட்டல் சுப்ரீம்  110. …

மதுரை சந்திப்பு Read More »

கேணி

எழுத்தாளர் ஞாநி  அண்மையில் கேகேநகருக்கு வீடு மாறி குடியேறியிருக்கிறார், அந்த வீட்டின்  பின்னால் அழகான கிணறும் தோட்டமுமாகவும் உள்ளது.   அந்த கிணற்றடியினை நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில்  கேணி என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை ஞாநி உருவாக்கியுள்ளார்   நல்ல சிறுகதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளைப் படித்து ரசிக்கும் பழக்கத்தையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் இளைய தலைமுறை சிநேகிதர்களிடம் ஊக்குவிப்பது தொடர்பாக கேணி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு …

கேணி Read More »

கலாப்ரியா

நவீன தமிழ் கவிதையுலகின் முக்கிய கவி ஆளுமையான கலாப்ரியா  தனது இளமைகால ஞாபகங்களை  நினைவின் தாழ்வாரங்கள் என்று  தனது  வலைப்பக்கத்தில்  எழுதி வருவதை தொடர்ந்து வாசித்து  வருகிறேன். அந்திமழை இணையதளத்தில் இது தொடராக வெளியாகிறது. காலம் அப்படியே புரண்டு படுத்தது போன்ற துல்லியம் கொண்ட அற்புதமான பதிவுகள்.  கவித்துவமும் ,சுய எள்ளலும் ,கேலியும் கலந்த சரளமான உரைநடை. எவ்விதமான ஒளிவு மறைவுமற்று மனம் திறந்து எழுதப்பட்டிருக்கிறது..  திருநெல்வேலி பற்றி புதுமைபித்தன் எழுதியது ஒரு விதம். வண்ணதாசன் வண்ணநிலவன் …

கலாப்ரியா Read More »

சிறிது வெளிச்சம்

ஆனந்த விகடனில் சிறிது வெளிச்சம் என்ற புதிய தொடரை துவங்கியுள்ளேன். துணையெழுத்து கதாவிலாசம், தேசாந்திரி போல இந்த தொடரும் என்னை சுற்றிய நிகழ்வுகள் மனிதர்கள், அவர்களின் அறியப்படாத சிறப்பம்சங்கள் பற்றியதாக இருக்கும். சிறிது வெளிச்சம் என்பது குபராவின் சிறுகதை தலைப்பு. அந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது.  அதற்காக குபராவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். விடிகாலையில் வீட்டின் அடுப்படியில் சிறிய வெளிச்சம் ஒன்றிற்குள் பிறர் தூக்கம் கெட்டுவிடாமல் வேலை செய்யும் அம்மாவை கண்டிருக்கிறேன். பெண்களுக்கு சிறிய வெளிச்சம் …

சிறிது வெளிச்சம் Read More »

கோடை பயணம்

  கோடைகால பள்ளி விடுமுறை காரணமாக என் பையன்கள் பயணம் மேற்கொளளும் போது நானும் அவர்களுடன் மதுரை. கோவில்பட்டி, ராசபாளையம் விருதுநகர். திருவில்லிபுத்துர்ர் என அலைந்து கொண்டிருக்கிறேன்.   மே 20 வரை இந்த பயணம் தொடரும்,   சென்னையை மறந்து கரிசலின் கோடையின் பகலில் அலைகிறேன்,   மரநிழல் கண்ட இடத்தில் தேடித்தேடி அமர்கிறேன்,   கோடை வலியது என்பதை இயற்கை இம்முறையும் நிருபண்ம் செய்கிறது.   நாளுக்கு ஒரு நண்பர்கள் வீடு, பேச்சு. புழுதி …

கோடை பயணம் Read More »

எனது புத்தகங்கள்

  அன்புள்ள வாசக நண்பர்களுக்கு, உயிர்மை பதிப்பகம் இந்த ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட்ட எனது 8 நூல்களும் இப்போது உயிர்மை இணைய தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.  உயிர்மை பதிப்பகம் ஆன்லைன் மூலம் இந்த புத்தகங்களை ஆர்டர் செய்யும் வாசகர்களுக்கு சலுகை விலையினை ஏப்ரல் 30 வரை அறிவித்திருக்கிறது.  8 நூல்களின் மொத்த விலை ரூ.1735. இந்தியாவில் இது மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ.1500/-க்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தபால் செலவு இலவசம்.  இந்தியாவிற்கு வெளியே இந்த …

எனது புத்தகங்கள் Read More »

நன்றி

        எனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தும் மின்னஞ்சல் வழியாக எனக்கு வாழ்த்துகள் அனுப்பிய இணையதள வாசகர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி. விழா சிறப்பாக நடைபெற்றது. புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும். சென்னை புத்தக சந்தை 8 ம் தேதி முதல் 18 வரை நடைபெறுகிறது. ஜனவரி 10 , 11, 12  மற்றும்  13, 16, 17 தேதிகளில் மாலையில் ஐந்து …

நன்றி Read More »

2008 விருப்ப பட்டியல்

ஒரு ஆண்டு நம்மை கடந்து செல்கிறது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயம். இன்றைக்கும் பழக்க தோஷத்தில் 2008 என்று தான் கையெழுத்து இடுகிறேன். மனதிலிருந்து 2008 முழுவதுமாக வெளியேற வில்லை. திட்டு திட்டான நினைவுகளாகவும் சிறு சம்பவங்களாகவும் உடைந்த கண்ணாடி துண்டின் சில்லுகளை போல பழசை நினைவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறது. ஒரு வருடத்தின் நினைவாக நமக்குள் மிஞ்சியிருப்பது அதிகபட்சம் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்.  அதற்கான காரணமும் கவனமும் ஆளுக்கு ஆள் மாறுபட்டது  …

2008 விருப்ப பட்டியல் Read More »

சிறந்த இந்தியப்படம் பரிசு

          நான் கதை வசனம் எழுதிய முரளி மனோகர் இயக்கிய கர்ணமோட்சம் திரைப்படம் நவம்பர் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில்  புதுடெல்லியில் நடைபெற்ற   International Students’ Film Festival,.First Frame 2008     என்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 25000 பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது. முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குறும்பட போட்டிகளில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு பத்திற்கு மேலான விருதுகளை பெற்றுள்ளது கர்ணமோட்சம். …

சிறந்த இந்தியப்படம் பரிசு Read More »

இந்த வாரம் படித்தவை

இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நினைவுகுறிப்புகள், விமர்சனங்கள், ஆய்வியல், உலகசினிமா  என்று வெவ்வேறு இணையதளங்களில் வாரம் ஐம்பதுக்கும் குறையாமல் வாசித்து வருகிறேன். சில படைப்புகளை வாசிக்கும்  போது அவசியம் அதை தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றும், உடனே அதை தரவிறக்கம் செய்து வைத்து கொள்வேன். ஆனால் தொடர்ந்த எழுத்து வேலைகள், பயணங்களில் அந்த ஆசை அப்படியே கரைந்து போய்விடும். அதற்குள் இன்னொன்றை வாசித்திருப்பேன். இப்படியாக தொடரும் ஏமாற்றத்திலிருந்து விடுபட நான்  வாசித்தவற்றில் இருந்து …

இந்த வாரம் படித்தவை Read More »