கோடைகால பள்ளி விடுமுறை காரணமாக என் பையன்கள் பயணம் மேற்கொளளும் போது நானும் அவர்களுடன் மதுரை. கோவில்பட்டி, ராசபாளையம் விருதுநகர். திருவில்லிபுத்துர்ர் என அலைந்து கொண்டிருக்கிறேன்.
மே 20 வரை இந்த பயணம் தொடரும்,
சென்னையை மறந்து கரிசலின் கோடையின் பகலில் அலைகிறேன்,
மரநிழல் கண்ட இடத்தில் தேடித்தேடி அமர்கிறேன்,
கோடை வலியது என்பதை இயற்கை இம்முறையும் நிருபண்ம் செய்கிறது.
நாளுக்கு ஒரு நண்பர்கள் வீடு, பேச்சு. புழுதி படிந்த சாலைகளில் பயணம், மழை பெய்ய போவது போல வானம் தினமும் குமுறுகிறது. மழை வருவதில்லை. காற்றும் ஒடுங்கியுள்ளது.
மர நிழல் ஒன்றில் நானும் ஒரு நாயும் நிற்கிறோம், தாக மிகுதியில் நாயின் நாவு துடிக்கிறது, ஆனால் நாய் மறுபடியும் வெயிலை நோக்கி ஒடுகிறது, வெயில் நாயின் முதுகில் ஏறிப் போகிறது, அது தான் கோடை,
கோடை நிறைய கற்றுதருகிறது, நான் கோடையின் ரசிகன்