அறிவிப்பு

சிறிது வெளிச்சம்

ஆனந்த விகடனில் சிறிது வெளிச்சம் என்ற புதிய தொடரை துவங்கியுள்ளேன். துணையெழுத்து கதாவிலாசம், தேசாந்திரி போல இந்த தொடரும் என்னை சுற்றிய நிகழ்வுகள் மனிதர்கள், அவர்களின் அறியப்படாத சிறப்பம்சங்கள் பற்றியதாக இருக்கும். சிறிது வெளிச்சம் என்பது குபராவின் சிறுகதை தலைப்பு. அந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது.  அதற்காக குபராவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். விடிகாலையில் வீட்டின் அடுப்படியில் சிறிய வெளிச்சம் ஒன்றிற்குள் பிறர் தூக்கம் கெட்டுவிடாமல் வேலை செய்யும் அம்மாவை கண்டிருக்கிறேன். பெண்களுக்கு சிறிய வெளிச்சம் …

சிறிது வெளிச்சம் Read More »

கோடை பயணம்

  கோடைகால பள்ளி விடுமுறை காரணமாக என் பையன்கள் பயணம் மேற்கொளளும் போது நானும் அவர்களுடன் மதுரை. கோவில்பட்டி, ராசபாளையம் விருதுநகர். திருவில்லிபுத்துர்ர் என அலைந்து கொண்டிருக்கிறேன்.   மே 20 வரை இந்த பயணம் தொடரும்,   சென்னையை மறந்து கரிசலின் கோடையின் பகலில் அலைகிறேன்,   மரநிழல் கண்ட இடத்தில் தேடித்தேடி அமர்கிறேன்,   கோடை வலியது என்பதை இயற்கை இம்முறையும் நிருபண்ம் செய்கிறது.   நாளுக்கு ஒரு நண்பர்கள் வீடு, பேச்சு. புழுதி …

கோடை பயணம் Read More »

எனது புத்தகங்கள்

  அன்புள்ள வாசக நண்பர்களுக்கு, உயிர்மை பதிப்பகம் இந்த ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட்ட எனது 8 நூல்களும் இப்போது உயிர்மை இணைய தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.  உயிர்மை பதிப்பகம் ஆன்லைன் மூலம் இந்த புத்தகங்களை ஆர்டர் செய்யும் வாசகர்களுக்கு சலுகை விலையினை ஏப்ரல் 30 வரை அறிவித்திருக்கிறது.  8 நூல்களின் மொத்த விலை ரூ.1735. இந்தியாவில் இது மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ.1500/-க்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தபால் செலவு இலவசம்.  இந்தியாவிற்கு வெளியே இந்த …

எனது புத்தகங்கள் Read More »

நன்றி

        எனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தும் மின்னஞ்சல் வழியாக எனக்கு வாழ்த்துகள் அனுப்பிய இணையதள வாசகர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி. விழா சிறப்பாக நடைபெற்றது. புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும். சென்னை புத்தக சந்தை 8 ம் தேதி முதல் 18 வரை நடைபெறுகிறது. ஜனவரி 10 , 11, 12  மற்றும்  13, 16, 17 தேதிகளில் மாலையில் ஐந்து …

நன்றி Read More »

2008 விருப்ப பட்டியல்

ஒரு ஆண்டு நம்மை கடந்து செல்கிறது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயம். இன்றைக்கும் பழக்க தோஷத்தில் 2008 என்று தான் கையெழுத்து இடுகிறேன். மனதிலிருந்து 2008 முழுவதுமாக வெளியேற வில்லை. திட்டு திட்டான நினைவுகளாகவும் சிறு சம்பவங்களாகவும் உடைந்த கண்ணாடி துண்டின் சில்லுகளை போல பழசை நினைவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறது. ஒரு வருடத்தின் நினைவாக நமக்குள் மிஞ்சியிருப்பது அதிகபட்சம் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்.  அதற்கான காரணமும் கவனமும் ஆளுக்கு ஆள் மாறுபட்டது  …

2008 விருப்ப பட்டியல் Read More »

சிறந்த இந்தியப்படம் பரிசு

          நான் கதை வசனம் எழுதிய முரளி மனோகர் இயக்கிய கர்ணமோட்சம் திரைப்படம் நவம்பர் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில்  புதுடெல்லியில் நடைபெற்ற   International Students’ Film Festival,.First Frame 2008     என்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 25000 பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது. முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குறும்பட போட்டிகளில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு பத்திற்கு மேலான விருதுகளை பெற்றுள்ளது கர்ணமோட்சம். …

சிறந்த இந்தியப்படம் பரிசு Read More »

இந்த வாரம் படித்தவை

இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நினைவுகுறிப்புகள், விமர்சனங்கள், ஆய்வியல், உலகசினிமா  என்று வெவ்வேறு இணையதளங்களில் வாரம் ஐம்பதுக்கும் குறையாமல் வாசித்து வருகிறேன். சில படைப்புகளை வாசிக்கும்  போது அவசியம் அதை தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றும், உடனே அதை தரவிறக்கம் செய்து வைத்து கொள்வேன். ஆனால் தொடர்ந்த எழுத்து வேலைகள், பயணங்களில் அந்த ஆசை அப்படியே கரைந்து போய்விடும். அதற்குள் இன்னொன்றை வாசித்திருப்பேன். இப்படியாக தொடரும் ஏமாற்றத்திலிருந்து விடுபட நான்  வாசித்தவற்றில் இருந்து …

இந்த வாரம் படித்தவை Read More »

ஷாஜியின் வலைப்பக்கம்.

என் நண்பரும் இசைவிமர்சகருமான ஷாஜி ஆங்கிலத்தில் தனது புதிய வலைப்பக்கத்தை துவக்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உயிர்மை இதழில் அவர் எழுதி வருகின்ற மேற்கத்திய இசை மற்றும் இந்திய திரையிசை சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் பரந்த வாசகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஷாஜி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். இவரது கட்டுரைகளை ஜெயமோகன் தமிழாக்கம் செய்துவருகிறார். பல்வேறு புகழ்பெற்ற இசை நிறுவனங்களில் ஆலோசகராக , நிர்வாகியாக பணியாற்றியவர். தமிழ் திரையிசை குறித்து விரிவான அறிதலும் தனித்துவமான பார்வைகளும் கொண்டவர் ஷாஜி.  …

ஷாஜியின் வலைப்பக்கம். Read More »

நாகார்ஜுனனின் வலைப்பக்கம்.

வலைப்பதிவுகளில் நான் அன்றாடம் வாசிக்கும் பதிவாக மாறியிருக்கிறது நாகார்ஜுனனின் திணை இசை சமிக்ஞை என்ற வலைப்பக்கம். நாகார்ஜுனன் எனது நல்ல நண்பர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய உலகில் கவனத்திற்குரிய விமர்சகர். கோட்பாட்டாளர். பத்திரிக்கையாளர். புனைகதையாசிரியர், பின்நவீனத்துவ சிந்தனையாளர் என்று அவரது ஆளுமை பன்முகப்பட்டது. தற்போது லண்டனில் வசிக்கிறார். அவர் சென்னையில் வசித்த நாட்களில் ஆறேழு வருடம் தினமும் சந்தித்து பேசியிருக்கிறேன். நாகார்ஜுனன் வீட்டு மாடியில் அவரோடு தங்கிக் கொண்டு பல இரவுகள் நானும் கோணங்கியும்  ஏதேதோ பேசி …

நாகார்ஜுனனின் வலைப்பக்கம். Read More »

காற்றில் யாரோ நடக்கிறார்கள்.

        சமகால தமிழ் நாவல்கள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக  மூன்று வாரங்களுக்கு முன்பு சாத்தூர் சென்றிருந்தேன். நாஞ்சில் நாடன், நான், கோணங்கி, கீரனூர் ஜாகிர்ராஜா ஆகிய நால்வரும் உரையாற்றினோம். நிகழ்ச்சி முடிந்து திசைக்கொருவராகப் பிரிந்த போது இரவே சென்னைக்கு கிளம்புவதற்கு பதிலாக குற்றாலம் வரை சென்று வந்தால் என்னவென்று தோன்றியது.  மருத்துவராக உள்ள என் அண்ணன் மற்றும் நண்பர்களுடன் ஒரு வாடகை காரில் பின்னிரவில் புறப்படுவது என்று முடிவு செய்து …

காற்றில் யாரோ நடக்கிறார்கள். Read More »