அறிவிப்பு

திரைப்பயணி

உலகின் சிறந்த திரைப்படங்களை அறிமுகம் செய்யும் விதமாக திரைப்பயணி என்ற காணொளித் தொடரைத் துவங்கியுள்ளேன். தேசாந்திரி யூடியூப் சேனலில் இதனைக் காணலாம். இந்த தொடரின் முதல் பகுதி நேற்று வெளியாகியுள்ளது.

கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழா 20255 கொடீசியா அரங்கில் ஜுலை பதினெட்டு துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 67. ஜுலை 19 சனிக்கிமை முதல் ஜுலை 21 திங்கள் வரை மூன்று நாட்கள் புத்தகத் திருவிழாவில் இருப்பேன். விருப்பமான வாசகர்கள். நண்பர்கள் சந்திக்கலாம் ஜுலை 21 திங்கள் மாலை ஆறுமணிக்கு கொடீசியா அரங்கில் “புத்தகங்களின் சரித்திரம்“ என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் கி.பி. 1450 ஆம் ஆண்டில் …

கோவை புத்தகத் திருவிழாவில் Read More »

ஹிந்தி மொழியாக்கம்

ஹிந்தி இலக்கியத்திற்கான சர்வதேச இதழில் எனது சிறுகதை “கேள்வியின் நிழல்“ மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் அலமேலு கிருஷ்ணன் நன்றி அலமேலு கிருஷ்ணன்.

தெலுங்கு மொழியாக்கம்

kathavasudha இணைய இதழில் எனது `சிற்றிதழ்` சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகியுள்ளது இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் ஜிலெல்லா பாலாஜி இணைப்பு நன்றி ஜிலெல்லா பாலாஜி kathavasudha

புதுமைப்பித்தன் களஞ்சியம் வெளியீட்டு விழா

சிறந்த ஆய்வாளரும், சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்துள்ள புதுமைப்பித்தன் களஞ்சியம் நூலின் வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். சென்னை அடையாறில் உள்ள எம்ஐடிஎஸ் அரங்கில் நாளை பிற்பகல் மூன்று மணிக்கு (30.6.25) இந்த நிகழ்வு நடைபெறுகிறது. புதுமைப்பித்தன் நினைவு நாளில் இந்த விழா நடப்பது மிகவும் பொருத்தமானது. இந்த நிகழ்வில் கமலா விருத்தாசலம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூலான நினைவுத் தீ, மற்றும் தினகரி சொக்கலிங்கம் எழுதிய …

புதுமைப்பித்தன் களஞ்சியம் வெளியீட்டு விழா Read More »

நினைவின் கரையில் நிற்கிறோம்

ஞானபீடம் பரிசு பெற்ற எழுத்தாளர் குர் அதுல்ஜன் ஹைதர் குறித்த ஆவணப்படம் மகத்தான இந்திய நாவல்களில் ஒன்றாக இவரது அக்னி நதி நாவல் கொண்டாடப்படுகிறது.

வானவன்

குட்டி இளவரசன் நாவலை எழுதிய அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் வாழ்வினை மையமாகக் கொண்டு தி பிரின்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ் நாவல் வெளியாகியுள்ளது. , “தி லைப்ரரியன் ஆஃப் ஆஷ்விட்ஸ்” நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான அன்டோனியோ இடுர்பே இதனை எழுதியுள்ளார். அன்டோனியோ ஒரு ஸ்பானிஷ் பத்திரிகையாளர், எழுத்தாளர். ஸ்பானிஷ் இதழான லா வான்கார்டியாவில் பணியாற்றுகிறார். சிறார்களுக்காக நிறைய எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் எக்சுபெரி என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நாவலை …

வானவன் Read More »

இணைய வழி நிகழ்ச்சி

எனது நூறு புத்தகங்களுக்கான விமர்சன நிகழ்வு இணைய வழியாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதன் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். காலை10,30 மணிக்கு நிகழ்வு துவங்குகிறது. எனது உரையைத் தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். எஸ்.ரா நூறு நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக நடித்தி முடித்துள்ள முனைவர். சு.வினோத் மற்றும் அஞ்சிறைத் தும்பி இலக்கிய அமைப்பிற்கு எனது மனம் நிறைந்த நன்றி. பேராசிரியர் வினோத்தின் அழைப்பை ஏற்று எஸ்.ரா நூறு நிகழ்வில் …

இணைய வழி நிகழ்ச்சி Read More »

சுமன்

எம்.ஜி. பவேரியா இயக்கத்தில் ஜெயா பாதுரி நடித்துள்ள FTII டிப்ளமோ திரைப்படம் சுமன். 1970ம் ஆண்டு வெளியானது . கறுப்பு வெள்ளையில் அழகான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறிய கிராமமும் துள்ளியோடும் ஜெயா பாதுரியின் விளையாட்டுதனமும் வசீகரிக்கின்றன. கிராமத்திற்கு வரும் குரங்காட்டி, படம் காட்டுபவர். கோவிலில் சாமி முன்பாக உள்ள காசைத் திருடி ஐஸ் வாங்குவது. தோழி வீட்டிற்குச் சென்று சந்திப்பது, கிராமவீதிகளில் தன்னிஷ்டம் போல சுற்றியலைவது போன்ற காட்சிகள் கடந்த காலத்தின் நினைவைத் தூண்டுகின்றன. பதின்ம வயதில் …

சுமன் Read More »