கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.
திங்கள்கிழமை எனது உரையின் போது நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். அரங்கு நிறைந்த கூட்டம்.
கோவை புத்தகத் திருவிழாவின் போது உடனிருந்து உறுதுணைகள் செய்த அன்பு நண்பர் மூர்த்திக்கு மனம் நிறைந்த நன்றி.
உபசரித்து மகிழ்ந்த அம்பாள் முத்துமணி , நிலக்கோட்டை ஸ்ரீதர், தேன்மொழி, டாக்டர் சந்திரமௌலி, வசந்த், கொடீசியா நடராஜ், அழகிரி, கோவை ஷபி, ஸ்ருதி டிவி கபிலன், பத்திரிக்கை, மற்றும் சமூக ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
கொடீசியா சார்பில் நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அதன் தலைவர் ராஜேஷ் மற்றும் விழாக்குழுவினர்களுக்கு நன்றி.



