பொள்ளாச்சியில்
கவிஞர் தேவதச்சனுக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 27 சனிக்கிழமை காலை பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. அந்த விழாவில் தேவதச்சன் கவிதைகள் குறித்து நான் உரையாற்றுகிறேன்
கவிஞர் தேவதச்சனுக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 27 சனிக்கிழமை காலை பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. அந்த விழாவில் தேவதச்சன் கவிதைகள் குறித்து நான் உரையாற்றுகிறேன்
சிறந்த மொழிபெயர்ப்பாளரும், சிறுகதை ஆசிரியருமான கார்த்திகைப் பாண்டியன் உலக இலக்கியத்திலிருந்து சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்து வருகிறார். கோவையிலுள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் கார்த்திகைப் பாண்டியன் தீவிர வாசகர். சமகால உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்காக 2018-க்கான ஆத்மாநாம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மொழிபெயர்ப்பில் வெளியான யுகிமோ மிஷிமாவின் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் நாவல் குறிப்பிடத்தக்க படைப்பு. தற்போது கார்த்திகைப் பாண்டியன் லத்தீன் அமெரிக்காவின் …
அவளது வீடு என்ற எனது சிறுகதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு தினேஷ் கதையை மொழியாக்கம் செய்துள்ளார்
ஜுனியர் விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டினைப் பெற்ற நூல் விலை ரூ 275 இன்றைய இளைஞனின் மனநிலையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள நாவல் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது விலை ரூ 175 தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்து பாராட்டினைப் பெற்ற நூல். சாலையோர புத்தகக் கடைகளில் கிடைத்த அரிய நூல்களையும், பழைய புத்தக்கடைக்காரர்களின் வாழ்க்கையும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு விலை ரூ 250 தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி …
தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கபட்டுள்ளது. உலக இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாக கருதப்படும் தேவமலர் குறுநாவலை மீள்பதிப்பு செய்துள்ளது தேசாந்திரி. தேசாந்திரி பதிப்பகத்தின் நூல்களை ஆன்லைனில் பெறலாம் அல்லது அலுவலக முகவரியில் தொடர்பு கொண்டு பணம் செலுத்தி கூரியரில் பெறலாம்.
பொள்ளாச்சியில் செயல்படும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதச்சனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. தேவதச்சனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் ஜுலை 27 அன்று விருது வழங்கும் விழா பொள்ளாச்சி என்.ஜி. எம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தேவதச்சன் கவிதைகள் குறித்து நான் உரையாற்றுகிறேன் ••••
வால் கவிதைத்தொகுப்பிற்காக யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள கவிஞர் சபரிநாதனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்.
சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குச் சிறப்பான இசை வடிவம் தந்துள்ளார் இசைக்கலைஞர் ராஜன் சோமசுந்தரம். அமெரிக்காவில் வசிக்கும் இவர் இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சங்க இலக்கியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பாடல்களை மிகச்சிறப்பான இசையமைப்பில் பல்வேறு தேசங்களைச் சார்ந்த இசைக்கலைஞர்களின் பங்களிப்போடு உருவாக்கியுள்ளார். இது ஒரு அரிய சாதனை. நண்பர் ராஜன் சோமசுந்தரத்திற்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள். யாதும் ஊரே… யாவரும் கேளிர்’ என்ற, புறநானூற்றுப் பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து மகத்தான இசையை உருவாக்கியுள்ளார் ராஜன் சோமசுந்தரம். பாடகர் கார்த்திக்கின் இனிமையான குரல் நம்மை மயக்குகிறது. கார்த்திக், …
க்ளைமேட் என்றொரு சிற்றிதழை கவிஞர் வியாகுலன் துவங்கியிருக்கிறார். அதன் முதல் இதழில் எனது சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்த இதழில் ஒவியர் நடேஷின் நேர்காணல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள் என்ற ஜி. குப்புசாமியின் கட்டுரை மிகவும் நன்றாகவுள்ளது ••
இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ் பற்றி நான் எழுதிய கட்டுரை மாத்யமம் மலையாள இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி. நன்றி : ஷாஜி மாத்யமம்