அறிவிப்பு

புதிய சிறுகதை

க்ளைமேட் என்றொரு சிற்றிதழை கவிஞர் வியாகுலன் துவங்கியிருக்கிறார். அதன் முதல் இதழில் எனது சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்த இதழில் ஒவியர் நடேஷின் நேர்காணல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள் என்ற ஜி. குப்புசாமியின் கட்டுரை மிகவும் நன்றாகவுள்ளது ••

மாத்யமம்

இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ் பற்றி நான் எழுதிய கட்டுரை  மாத்யமம் மலையாள இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி. நன்றி : ஷாஜி மாத்யமம்

நேர்காணல்

கலைஞர் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான எனது நேர்காணலின் காணொளி. https://www.youtube.com/watch?v=AY66vEIcm8Y&feature=em-uploademail

அஞ்சலி

என் பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்களின் மறைவுக்கு  ஆழ்ந்த அஞ்சலிகள்.

பாலம் விருது

பாலம் கல்யாணசுந்தரம் மிகச்சிறந்த சமூகச் சேவகர்.. தன்னுடைய வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்தவர். சர்வதேச அளவில்  சிறந்த மனிதர் என Man of Millinium என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றவர். அந்தப் பணம் முழுவதையும் ஏழை எளிய குழந்தைகள் நலனுக்காக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திவரும் அன்பு பாலம் என்ற சேவா அமைப்பு துறை தோறும் சாதனைகள் செய்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்த ஆண்டு …

பாலம் விருது Read More »

வாழ்த்துகள்

கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருது  எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிற்குரிய  வண்ணநிலவனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்

புத்தகமே டிக்கெட்

நெதர்லாந்து அரசாங்கம் தேசிய புத்தகத்தினத்தைக் கொண்டாடும் விதமாக அன்று ரயிலில் பயணிகள் டிக்கெட்டிற்குப் பதிலாக ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது புத்தகம் படிக்கிறவர்களுக்கு ரயில் பயணம் இலவசம். 1932 முதலே நெதர்லாந்து அரசாங்கம் புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இலக்கிய நிகழ்வுகள், புத்தக வாசிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில நூல்களை அரசே அச்சிட்டு இலவசமாகவும் வழங்கி வருகிறது. டச்சு இலக்கியங்களை கொண்டாடும் விதமாக பத்து நாட்கள் புத்தக …

புத்தகமே டிக்கெட் Read More »

நேற்றைய நிகழ்வின் காணொளி

எனது இலக்கிய உரைகள். நிகழ்வுகளைக் காணொளியாகக் காண்பதற்கு தேசாந்திரி youtube சேனல் துவங்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து கொள்வதன் வழியே எனது உரைகளை நீங்கள் தொடர்ந்து காணலாம். இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் இதனை Subscribe செய்து உதவவும். To Subscribe : https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?SUB_CONFIRMATION=1 நேற்றைய குறும்படவிழாவின் காணொளி‘ https://www.youtube.com/watch?v=cOMmJcZ0QiA&feature=em-uploademail ** எனது செகாவ் பற்றிய உரை தனி இணைப்பில் இரவு வெளியிடப்படும்.

நன்றி

நேற்று மாலை எனது பையன் ஹரிபிரசாத்தின் குறும்படமான மை டியர் செகாவ் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இயக்குநர் சீனு ராமசாமி குறும்படத்தை வெளியிட்டு ஹரியையும் படக்குழுவினர்களையும் வியந்து பாராட்டி உற்சாகப்படுத்தினார். “கதைசொல்வதற்காக நாற்காலியோடு சாலையில் சுற்றித்திரியும் ஒருவரை முதன்முறையாகத் திரையில் பார்க்கிறேன். மிகவும் யதார்த்தமாகப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்குறும்படம் நிச்சயம் திரைப்படவிழாவில் விருதுகளைப் பெறும்“ என வாழ்த்தினார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி குறும்படத்தைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திய …

நன்றி Read More »