அறிவிப்பு

தேசாந்திரி பதிப்பகம் தொடக்கவிழா

தேசாந்திரி பதிப்பகத்தின் தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இடம் கிடைக்காமல் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதம் இளைஞர்கள். அனைவரின் அன்பும் ஆதரவுமே நிகழ்ச்சியை வெற்றி பெறச்செய்தது. தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது ஏழு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.  தோழர் நல்லகண்ணு அவர்கள் எனது நூலை வெளியிட்டது மிகப்பெரிய கௌரவம். நிகழ்வில் பார்வையற்றவர்களுக்காக பிரெயில் மொழியில் படிக்கத் தெரிந்த சிங்கம் நூல் வெளியிடப்பட்டது. ரஷ்ய கலாச்சார மைய இயக்குனர் …

தேசாந்திரி பதிப்பகம் தொடக்கவிழா Read More »

இரண்டு சிறப்பு நிகழ்வுகள்

நான் எழுதிய சிறார் நாவல்கள் படிக்கத்தெரிந்தசிங்கமும், உலகின் மிகச்சிறிய தவளையும் ப்ரெயிலில் அச்சடிக்கப்பட்டு பார்வையற்றவர்களுக்காக வெளியிடப்பட உள்ளன இதனை தேசாந்திரி பதிப்பகம் மற்றும் தேசிய பார்வையற்றோருக்கான சங்கம் இணைந்து வெளியிடுகின்றன ப்ரெயில் மொழியில் அச்சிடப்பட்ட படிக்கத் தெரிந்த சிங்கம் நூல் நாளை மாலை தேசாந்திரி பதிப்பக தொடக்கவிழாவில் வெளியிடப்படவுள்ளது. •• தேசாந்திரி பதிப்பகத்திற்காக புதிதாகத் துவக்கபட்டுள்ள இணையதளம் நாளை அறிமுகம் செய்யப்படும் •• தேசாந்திரியின் நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள். ஆன்லைன் விற்பனையாளர்கள் தொடர்பு …

இரண்டு சிறப்பு நிகழ்வுகள் Read More »

சிறப்பு சலுகை

நாளை வெளியிடப்படவுள்ள எனது ஏழு புதிய நூல்களின் மொத்த விலை ரூ 1125 சிறப்பு சலுகையாக ரூ 900 க்கு அரங்கில் கிடைக்கும்.

காட்சிகளுக்கு அப்பால்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நான் பார்த்து ரசித்த சிறந்த உலகப்படங்கள் பற்றிய கட்டுரைகள். விலை  : ரூ 75 தேசாந்திரி பதிப்பக வெளியீடு டிசம்பர் 25 மாலை 6 மணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் வெளியிடப்படயிருக்கிறது ••

கடவுளின் நாக்கு

தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாரட்டினைப் பெற்றன கடவுளின் நாக்கு தேசாந்திரி பதிப்பக வெளியீடாக வருகிறது. டிசம்பர் 25 மாலை 6 மணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் இதன் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது விலை  : ரூ 350 தேசாந்திரி பதிப்பக வெளியீடு ••

ரமேஷ் பிரேதனுக்கு உதவுங்கள்

நானும் கோணங்கியும் பாண்டிச்சேரி செல்லும் நாட்களில் ரமேஷை சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒருமுறை கருத்தரங்கிற்காகப் புதுவை போயிந்த போது என்னை ரமேஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்து இரவு தங்க செய்தார்.  அன்று நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். ரமேஷ் பின்நவீனத்துவப் புனைவெழுத்தில் மிகச்சிறந்தவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதிவருகிறார் பிரேம் ரமேஷ் இணைந்து செயல்பட்ட காலத்தில் தீவிரமான அலையொன்றை இலக்கியச்சூழலில் ஏற்படுத்தினார்கள். கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் உடல்நலக்குறைவு …

ரமேஷ் பிரேதனுக்கு உதவுங்கள் Read More »