அறிவிப்பு

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி

நவம்பர் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ள ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கபட்டிருக்கிறேன். உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி திகழ்கிறது. இதில் 59 நாடுகள் கலந்து கொள்கின்றன. நவம்பர் 3 இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இலக்கிய அமர்வில் கலந்து கொள்கிறேன். இதற்காக  நவம்பர் 2 ல் ஷார்ஜா வருகை தருகிறேன். அங்குள்ள இலக்கிய நண்பர்கள். வாசகர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் …

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி Read More »

சிங்கப்பூரிலிருந்து

சிறுவர்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம் நூலை வாசித்துவிட்டு 13 வயதான சூரியநிலவன் எழுதியுள்ள கடிதம். சிங்கப்பூரில் வசிக்கும் சூரியநிலவனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் அன்பும் பாராட்டுகளுக்கும். சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு நன்றி. ••• நான் சூரியநிலவன், 13, சிங்கப்பூர். கடந்த வியாழக்கிழமை நான் நூலகத்துக்குச் சென்றிருந்தேன். எப்பொழுதும் என் அப்பா இரவல் பெறும்போது தமிழ்ப்புத்தகத்தையும் இரவல் பெறக் கூறுவார்.நானும் வேண்டாவெறுப்பாக ஒன்றை எடுத்துக்கொண்டு வருவேன். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை.நீங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால் நூலக …

சிங்கப்பூரிலிருந்து Read More »

நீட் தேர்வுக்கு எதிராக

நீட் தேர்வு மருத்துவம் பயில நினைக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவுகளை அழிக்கக்கூடிய ஒன்றாக  தமிழ்நாட்டில் புகுந்துள்ளது. நாம் நீட் தேர்வை அனுமதிக்க கூடாது. அனிதாவின்  மரணம் பெரும் இழப்பாகும். இதற்கு காரணமாக இருந்த மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அனைவரும் இணைந்து போராடுவோம்.  நம் குரல் தமிழக மக்களின் கல்வியுரிமைக்கான ஒற்றைக்குரலாக ஒலிக்க வேண்டும்.

காரல் மார்க்ஸ் – உரை

நேற்று திருப்பூரில் நடைபெற்ற காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவில் உரையாற்றினேன். மார்க்ஸ் பற்றிப் பேசப்பேச உணர்ச்சிவசம்மீறி என்னை அறியாமலே கண்ணீர் சிந்தும்படியானது. பெரும்பான்மையான உரைகளில் பேச்சை என் கட்டுக்குள் தான் வைத்திருப்பேன். இது போல சில தருணங்கள் பேச்சு இழுத்துக் கொண்டுபோய்விடுகிறது. மார்க்ஸ் பற்றிய உரைக்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மார்க்ஸின் வரலாற்றையும் தத்துவங்களையும் வாசித்தது புத்துணர்வு தருவதாகயிருந்தது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தோழர் ஈஸ்வரனுக்கும், தலைமை ஏற்றி நடத்திய தோழர் எஸ். ஏ.பெருமாளுக்கும். …

காரல் மார்க்ஸ் – உரை Read More »

நன்றி

தேசாந்திரி பதிப்பகம்  குறித்து வாழ்த்துகளையும் அன்பையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. தேசாந்திரி சார்பில் புதிய புத்தகங்கள் ஜனவரி 2018 சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும் பதிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. •••

இலக்கிய தர்பார்

ஆகஸ்ட் 13 ஞாயிறு காலை 11 மணிக்கு  பொதிகை தொலைக்காட்சியில் நான் கலந்து கொண்ட இலக்கிய தர்பார் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. Ilakkiya Durbar Promo on 13-08-2017 https://youtu.be/WMNzQOrC-Mo

தேசாந்திரி பதிப்பகம்

எனது நூல்களை வெளியிடுவதற்காகத் தேசாந்திரி என்ற புதிய பதிப்பகத்தைத் துவக்கியுள்ளேன். இனி எனது நூல்கள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் வழியாகவே வெளியாகும். நண்பர் மனுஷ்யபுத்திரன் தனது உயிர்மை பதிப்பகத்தின் வழியே எனது 80க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். என் எழுத்துலக பணியில் உயிர்மையின் துணை மிகுந்த நன்றிக்குரியது. ஆயினும் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் இனி எனது நூல்களை நானே வெளியிடுவது என முடிவு செய்துள்ளேன். உயிர்மை, விஜயா, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள எனது நூல்கள் அச்சிடப்பட்ட பிரதிகள் …

தேசாந்திரி பதிப்பகம் Read More »

தேவதச்சனுக்கு விருது

உயிர்மை வெளியிட்டதேவதச்சனின் ‘ மர்ம நபர்’ கவிதைத் தொகுப்பிற்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது. அவருக்கு என் அன்பும் வாழ்த்துகளும் சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வரும் 31 ஆந்தேதி இந்த விருது வழங்கப்படும். மர்ம நபர் கவிதைத்தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் ( 206- 207) கிடைக்கிறது ••