விழா புகைப்படங்கள் 2
நிகழ்வின் முழுமையான புகைப்படங்கள் கைக்கு வந்து சேரவில்லை. கிடைத்தவுடன் அவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி புகைப்படங்கள் – ஸ்ருதி டிவி
நிகழ்வின் முழுமையான புகைப்படங்கள் கைக்கு வந்து சேரவில்லை. கிடைத்தவுடன் அவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி புகைப்படங்கள் – ஸ்ருதி டிவி
எழுத்துலகில் பிரபஞ்சன் 55 விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறையப் பார்வையாளர்கள். வெளியூரிலிருந்து நிறைய வாசகர்கள் வந்து குவிந்த காரணத்தால் இருக்கைகள் இல்லாமல் அரங்கில் பலரும் நிற்கும் நிலை ஏற்பட்டது காலை பத்துமணிக்கு புதுவை இளவேனில் எடுத்த பிரபஞ்சன் புகைப்படங்களின் கண்காட்சியை இயக்குனர் கே.வி. ஆனந்த் துவக்கி வைத்தார். இளவேனிலின் கவித்துவமான புகைப்படங்களை வியந்து பாராட்டினார் கே.வி. ஆனந்த். சிறப்பு விருந்தினராகக் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டு பிரபஞ்சனுக்குச் சால்வை அணிவித்துக் கௌரவித்தார். காலை முதல்அமர்வில் …
“எழுத்துலகில் பிரபஞ்சன் -55” விழா 29-ம் தேதி சனிக்கிழமை ரஷ்யக் கலாச்சார மையத்தில் காலை 9 :30 மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் பிரபஞ்சன் படைப்புகள் குறித்த முழுமையான கருத்தரங்கம் , புத்தக வெளியீடு, நிதியளிப்பு, , நாடகம், குறும்படம் திரையிடல் எனப் பல்வகை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
நேற்று தேவதச்சன் கவிதையுலகம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. காலை பத்துமணிக்குத் துவங்க வேண்டிய நிகழ்வு சற்று தாமதமாகப் பத்தரைக்குத் துவங்கியது. அரங்கில் அப்போது குறைவானர்களே இருந்தார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வரும் மகத்தான கவியைக் கொண்டாட ஆட்களே இல்லையா என ஆதங்கமாக இருந்தது. நல்லவேளை அடுத்த அரைமணி நேரத்தில் அரங்கம் நிரம்பியது. வெளியூரில் இருந்து நிறைய வாசகர்கள் வந்து கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி காலையிலிருந்து இரவு எட்டரை வரை …
தேவதச்சன் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் ஏப்ரல் 23 ஞாயிறு அன்று நடைபெறுகிறது. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்தார். அவருக்கு என் அஞ்சலி. நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த தனித்துவமும் கலைநுட்பமும் கூடிய எழுத்தாளர் மா.அரங்கநாதன். அவர் நடத்திய முன்றில் , இலக்கியச் சிற்றிதழ்களில் தனித்துவமானது. அதில் இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 90களில் முன்றில் நடத்திய மூன்றுநாள் இலக்கியக் கருத்தரங்கு மறக்கமுடியாதது. மா. அரங்கநாதனின் புதல்வர் நீதியரசர் மகாதேவன் கவிஞர் பிரமிளுடன் நெருக்கமாக இருந்தவர். பிரமிளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆகவே ரங்கநாதன் தெருவிலிருந்த முன்றில் புத்தகக் கடைக்குத் தினமும் மாலையில் …
இன்றைய (16.04.2017) தி இந்து நாளிதழ் கலைஞாயிறு பகுதியில் பதின் நாவலுக்கு எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா சிறப்பான விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவருக்கும், தி இந்து நாளிதழுக்கும் எனது மனம் நிரம்பிய நன்றி.
ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை கவிஞர் பிரமிள்மொழியாக்கம் செய்திருக்கிறார். அதற்கு அவர் வரைந்த ஒவியம். இக்கதை விருட்சம் வெளியிட்டுள்ள பிரமிள் விடுதலையும் கலாச்சாரமும் என்ற தொகுப்பிலுள்ளது ••
நாளை (15.04.2017 ) மாலை ஆறு மணிக்கு சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரையாற்றுகிறேன்