தேவதச்சனின் கவியுலகம்
ஏப்ரல் 23 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 வரை தேவதச்சனின் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இடம் : கவிக்கோ மன்றம். ஆழ்வார்பேட்டை. சென்னை. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••
ஏப்ரல் 23 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 வரை தேவதச்சனின் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இடம் : கவிக்கோ மன்றம். ஆழ்வார்பேட்டை. சென்னை. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••
நேற்று (13.04.2017 ) எனது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வாழ்த்திய நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் இருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து அனுப்பி மகிழ்வித்த சத்யமூர்த்தி அவர்களுக்கும், லண்டனிலிருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து அனுப்பி மகிழ்வித்த காயத்ரிக்கும், செங்கல்பட்டிலிருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து கொண்டுவந்து நேரில் தந்து மகிழ்வித்த டி.லட்சுமணனுக்கும், அழகான டிஜிட்டில் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகத் தந்த தீபாவிற்கும், தனது அலுவலகத்தில் எனது பிறந்தநாளைக் கொண்டாட …
டிஸ்கவரி புக் பேலஸ் எனது பிறந்த நாளை வாசகர்களுடன் கொண்டாடும் விதமாக ஏப்ரல் 13 வியாழன் மாலை ஐந்து மணிக்கு கேக் வெட்டிப் பகிர்ந்து கொள்வதுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கும் ஏற்பாடு செய்துள்ளது. நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் ••
1961ல் பிரபஞ்சனின் முதற்சிறுகதை வெளியானது. கடந்த 55 ஆண்டுகளாக எழுதிவரும் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக எழுத்துலகில் பிரபஞ்சன் 55 என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 சனிக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அதில் பிரபஞ்சன் படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு. புகைப்படக்கண்காட்சி, மற்றும் நாடகம், குறும்படத்திரையிடல், புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது. பிரபஞ்சனின் எழுத்துலக சேவையைப் பாராட்டி சிறப்பு நிதியும் வழங்கபடுகிறது.
ஆரணி டைம்ஸ் சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாட்டில் அசோகமித்ரன் நினைவஞ்சலி கூட்டம் ஆரணியில் 08.04.2017 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரணியில் ஒரு இலக்கிய நிகழ்வில் அரங்கு நிறைய ஆட்கள் கலந்து கொண்டது பெரிய சாதனை. நானும் பவா. செல்லதுரையும் அசோகமித்ரன் குறித்து உரையாற்றினோம். ஜி.குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். அன்று பகலில் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி. குப்புசாமி வீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். வெகு ருசியான உணவை அளித்த நர்மதா குப்புசாமிக்கு …
நேற்று பாண்டிச்சேரியில் பிரபஞ்சன் – 55 முழுநாள் கருத்தரங்கிற்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் மனுஷி பாரதி மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்கள். மாலையில் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் என்னோடு நண்பர் பவா செல்லதுரை மற்றும் பதிப்பாளர் வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மகிழ்வூட்டும் சந்திப்பாக அமைந்தது. நண்பர் இளவேனில் சிறப்பான இரவு உணவு தந்து அனுப்பி வைத்தார். இளவேனிலின் புகைப்படங்களைக் காணுவதற்காக இன்னொரு முறை தனியே பாண்டிச்சேரி வரவேண்டும் என …
கவிஞர் தேவதச்சனின் கவிதைகளைக் கொண்டாடும் விதத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றினை உயிர்மை ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 23 ஞாயிறு அன்று ஆழ்வார்பேட்டையிலுள்ள கவிக்கோ மன்றத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது கருத்தரங்கினை நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன். நான்கு அமர்வுகளாகக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஞாயிறு மாலை தேவதச்சன் கவிதைகளின் முழுத்தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது நிகழ்வு குறித்த விரிவான தகவல்கள் சில தினங்களில் அறிவிக்கபடும். நிகழ்வில் கலந்து கொண்டு தேவதச்சன் கவிதைகள் குறித்த உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ள …
ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டுவிழாவை ஏப்ரல் 1 சனிக்கிழமை மாலையில் கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். நிகழ்வு நடைபெறுமிடம் : பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி ராமகிருஷ்ணா மடம் சாலை மயிலாப்பூர் நேரம்: மாலை 6 மணி அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• •••
தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான எழுத்தாளர் அசோகமித்ரன் இன்று (23.03.2017 ) காலமானார். சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை. சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார். கணையாழியில் அவர் ஆசிரியராக இருந்த நாட்களில் நான் எழுதத் துவங்கினேன். எனது முதல்கதையைத் தேர்வு …